திரு. ராஜேஷ் அவர்கள் :
ALP மூர்த்தி அவர்களுடைய, அவரை சேர்ந்தவர்கள்ல சாந்திதேவி என்பவர் வந்திருக்கிறார். அவருடைய அனுபவங்களை நாம் கேட்போம். வணக்கம் மா. என்ன உங்கள பத்தி பாடகர் அப்படி சொல்லிட்டு போறாரு ரொம்ப சிறப்பா. உங்களுடைய அனுபவங்கள் என்ன?
திருமதி. சாந்திதேவி அவர்கள் ALP ஜோதிடர்:
வணக்கம் சார். முதன் முதலில் சாரை பார்த்ததே நல்ல அனுபவம் தான் சார். ஏன்னா எந்த பாதையில போறது அப்படிங்கறது தெரியாத ஒரு காலகட்டம் அது.
திரு. ராஜேஷ் அவர்கள் :
எதை சொல்றீங்க ஜோசியத்துலயா?
திருமதி. சாந்திதேவி அவர்கள் ALP ஜோதிடர்:
ஜோதிடத்தில் எனக்கு என்னுடைய மாமனார் தான் முதல் குரு.
திரு. ராஜேஷ் அவர்கள் :
யார் மாமனாரு?
திருமதி.
சாந்திதேவி அவர்கள் :
என்னுடைய தாய் மாமா.
திரு. ராஜேஷ் அவர்கள் :
தாய் மாமாவே மாமனார் ஆயிட்டாரா?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஆமாம். என்னுடைய ஜாதகத்தை பார்த்துட்டு ஜாதகம் இந்த பொண்ணுக்கு வரும்னு சொல்லிட்டு அவரு பையனே கல்யாணம் பண்ணி வச்சு அத கத்து கொடுத்தார். இடையில சில காரணங்களால குடும்பத்துல பிரச்சனைன்னு ஒரு சூழ்நிலை வரும்போது நாங்க என்ன பண்றது அடுத்த ஸ்டெப் என்ன பண்றது அப்படின்னு தெரியாத ஒரு சூழ்நிலை. அப்போ ஒரு கோயிலுக்கு போயிருந்தோம். அங்க உச்சிஷ்ட கணபதியோட உபதேசம் எங்களுக்கு கிடைச்சது. அந்த உச்சிஷ்ட கணபதியோட அருளால்ல தான் மூர்த்தி சார நாங்க பார்க்கிறோம். அந்த உபதேசம் வாங்கின 48 நாளைக்கு பிறகு மூர்த்தி சாருடைய அறிமுகம் எங்களுக்கு கிடைக்குது. அதுக்கப்புறம் எங்க லைஃப்ல நடந்த பல ரொம்ப மிராக்கலான சம்பவங்கள் எல்லாம் நிறையவே நடந்தது சார். அது ஒன்னு, ரெண்டு இல்ல பல சம்பவங்கள் எங்களுக்கு ரொம்ப ஆச்சரியத்தை உண்டு பண்ண கூடிய சூழ்நிலை அமைந்தது. அதுல நிறைய சம்பவங்கள் சொல்லனும்னா அதுல முக்கியமா சொல்லணும்னா நான் பார்த்து பிரமிச்ச விஷயங்கள் அப்படின்னு சொல்லனும்னா பெங்களூருக்கு பஞ்ச சக்தி தேவஸ்தானம்னு ஒரு கோயில் ரொம்ப அற்புதமான ஒரு கோயில். அந்த கோயிலுக்கு கூப்பிட்டு இருந்தாங்க. பீமா நகர்ல இருக்கு. அந்த கோயிலுக்கு போயிருந்தப்ப அங்க உள்ளவங்க சார் கிட்ட கேட்டாங்க இந்த கோயிலை பற்றி கொஞ்சம் சொல்லுங்க அப்படின்னு கேட்டாங்க சார் உடனே பிரசன்னம் தான் பார்த்தாங்க.
பிரசன்னத்திலேயே அவங்களுக்கு லக்னம் தனுசு லக்னம். குரு கடகத்துல உச்சத்துல இருக்காரு. நீங்க கீழ தண்ணி ஓடுது. தண்ணிக்கு மேல அம்மன பிரதிஷ்டை பண்ணி இருக்கீங்க. கோயில் தண்ணிக்கு மேல தான் இருக்கு அப்படின்னாரு. அவர் உடனே உட்கார்ந்து இருந்தவர் எழுந்துட்டாரு. அவருக்கு ரொம்ப ஆச்சரியமா போயிட்டு. ஏன்னா யாருக்குமே தெரியாது. கீழ தண்ணி ஓடுற விஷயம் யாருக்குமே தெரியாது. இது எப்படி சொன்னீங்க அப்படிங்கறப்போ, அவங்க அப்ப தான் முதன் முதல்ல அந்த சாப்ட்வேரை ரிலீஸ் பண்றாங்க. அப்போ இந்த சாப்ட்வேர்ல கணிதத்துல எல்லாமே இந்த கணக்கு முறைகள் நம்ம ஜோதிடத்திலேயே உங்களுக்கு தெரியும் கணக்கு தான் ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம்.
அந்த கஷ்டமான விஷயத்தை கடந்த கால நிகழ்வுகளோடு ஒப்பீடு பண்ணக்கூடிய ஒரு விஷயம் அப்படின்னா அவங்க கண்டுபிடிச்ச அந்த சாப்ட்வேர். அந்த சாப்ட்வேர் தான் இன்னைக்கு நீங்க சொன்னீங்க பிரசன்னா சார் பலன் சொன்னதா சொன்னாருன்னு.
அந்த ஐந்து நாள் பலன் அப்படிங்கறது சார் கண்டுபிடிச்ச அந்த சாஃப்ட்வேர்ல தான் என்னால சொல்ல முடிஞ்சது. அந்த சாப்ட்வேர் இல்லன்னா அந்த பலன் என்னால் சொல்ல முடிஞ்சிருக்காது. ஏன்னா அந்த அளவுக்கு அக்யூரசியான ஒரு விஷயத்தை வந்து இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தை நம்ம திரும்ப பார்க்கக்கூடிய நிலை சினிமால ஃப்ளாஷ் பேக்னா ஒரு ரவுண்டு போட்டு காமிப்பாங்க. இதுல அப்படி கிடையாது. அதுல அந்த டேட்டை கொடுத்துட்டோம்னா நமக்கு நடந்த நிகழ்வுகளோட டேட் கொடுத்தோம்னா அது ஆட்டோமேட்டிக்கா அப்ப என்ன லக்னம் போச்சு அப்படிங்கறத காமிச்சு கொடுத்துடும். அதுல இருந்து நமக்கு கணக்கெடுக்கிறது ஈஸியா இருக்கும்.
அப்போ அது வந்து உலகத்துல இதுவரைக்கும் ஜோதிட சாஃப்ட்வேர்ல அந்த மாதிரி ஒரு சிஸ்டத்தை கொண்டு வரல. அது சார் வந்து ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் கொண்டு வந்தாங்க.www.alpastrology.org
திரு. ராஜேஷ் அவர்கள் :
ரொம்ப எளிமைப்படுத்தி விட்டார்.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஆமா ரொம்ப ரொம்ப சுலபம் சார். ஒரு சொடக்கு போடுற நேரத்துல ஒரு பலன சொல்ல முடியும்னா அது ரொம்ப ரொம்ப இதுல எளிமையான விஷயம்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
அதுவும் கத்துக்குறதும் ஒரு மாசம் ரெண்டு மாசத்துல கத்துக்கலாமாமே
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஈஸியா கத்துக்கலாம் சார் ஒன்னு சொல்லணும்னா ALPங்கிற விஷயம் ஒரு சதவீதம் தான் சார் வெளிப்படுத்தி இருக்காங்க. அந்த வெளிப்படுத்தின விஷயங்களே நமக்கு இன்னைக்கு இந்த அளவுக்கு துல்லியமா கிடைக்குது. இன்னும் இதுல இசட் எல்பி வரைக்கும் இருக்கு. நிறைய விஷயங்கள் அதுல அவங்க கொடுத்திருக்காங்க. இவ்வளவு நாள் ஒரு ஏழு வருஷம் இருக்கும் சார் கூட ட்ராவல் பண்ண காலம். இதுவரைக்கும் நாங்க கூட பயணிச்சதுல நாங்க கத்துக்கிட்ட விஷயங்களே இரண்டு சதவீதம் தான். அவங்க வெளிப்படுத்தினது ஒன்னுனா நாங்க கூடவே இருந்து அவங்கள புரிஞ்சுகிட்டது 2% தான்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
இந்த ரெண்டு சதவீதத்திலேயே மக்கள் மிரளுவாங்க.
புற்றுநோய் கிடையாது அப்படின்னு நிரூபிச்சுருக்காங்க :
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
கண்டிப்பா, நிச்சயமா. ஏன்னா நிறைய சம்பவங்கள் இருக்கு. ஒரு புற்றுநோய் கேஸ் வந்து அவங்களுக்கு புற்றுநோய் கிடையாது அப்படின்னு நிரூபிச்சுருக்காங்க.
திரு. ராஜேஷ் அவர்கள் :
எப்படி?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஏன்னா அது அந்த அளவுக்கு அவங்க மெடிக்கல் அஸ்ட்ராலஜில நிறைய ஆய்வு பண்ணுவாங்க. பல ஆயிரம் கணக்கான ஜாதகங்கள் ஆய்வு பண்ணுவாங்க. அதுல வந்து ஒரு கிளைன்ட் கால் பண்றாங்க ஃபாரின்ல இருந்து கால் பண்ணாங்க. அவங்க ஆப்ரேஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அடுத்த வாரத்தில் பண்ணனும் ஒரு நல்ல நாளா குறிச்சிட்டு வாங்க. சிசேரியனுக்கு சொல்றது மாதிரி அந்த பேஷண்டுக்கு புற்றுநோய்க்கும் அவங்க குறிச்சிட்டு வாராங்க. பிரஸ்ட்டுல கேன்சர் அவங்க வைஃப்க்கு அப்படின்னு சொல்லிட்டு. அவங்க ஆபரேஷன் பண்ற டேட்டுக்காக தான் நம்மகிட்ட கால் பண்ணாங்க.
சார் உடனே பாத்துட்டு, ரொம்ப கோவப்பட்டாங்க சாதாரணமா, ஒருத்தர் குடுத்தாங்கன்னா கோபப்படணும்னு அவசியம் இல்ல. ஆனால் அவங்களுக்கு அந்த ஆதங்கம். ஒரு நிகழ்வு அப்படி ஒன்னு கிடையாது. புற்று நோய்கிறதே அதுல இல்ல. அப்புறம் எதுக்கு நீங்க ஆபரேஷன் பண்றீங்க. நீங்க தயவு செஞ்சு பண்ணாதீங்க. எனக்காக ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டு. சில வைத்திய முறைகள் மட்டும் மாத்தி எடுத்துக்கோங்க அப்படின்னு சொல்றாங்க.
அவங்களுக்கு நம்பவே முடியல. ஏன்னா ஒரு டாக்டருக்கு மூணு இடத்துல செக் பண்ணிட்டாங்க. மூணு இடத்திலுமே அவங்களுக்கு அது தான் அப்படின்னு ரிசல்ட் வருது. அப்போ அவங்களால நம்ப முடியல. ஆனா சாரோட கோபம் அவங்கள ஏதோ ஒரு விதத்துல தாக்கி இருக்கு. அதனால அவங்க சரி சார் சொல்றத கேப்போம் அப்படின்னு சொல்லிட்டு அந்த ஒரு மாசம் அவங்க வேற ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் போய் செக் பண்ணி பார்த்ததில அது கேன்சர் கட்டி இல்ல. ஏன்னா கேன்சர் கட்டினா ரோல் ஆகாது. இது ரோல் ஆகுது. அப்படின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் படிப்படியா அவங்க வேற ட்ரீட்மென்ட் எடுத்து அது சுத்தமாவே அவங்களுக்கு அந்த கேன்சர் பாதிப்பு இல்லாம போயிடுச்சு.
இந்த கல்யாண நடக்கும்:
அப்புறம் இன்னொரு சம்பவம் சொல்லனும்னா கல்யாணமே நடக்காது அப்படிங்கறாங்க. சென்னையில் உள்ள பிரபலமான டாக்டர் தான் அவங்க. கோயம்புத்தூரில் வரேன் பாக்குறாங்க. அவங்க முதன் முதலில் பெண் பார்க்க வர்றப்போ மாப்பிள்ளையோட அம்மாவோட மாங்கல்யம் கழண்டு விழுந்திருது. கழண்டு விழுந்த உடனே அவங்களுக்கு ரொம்ப ஷாக் ஆயிட்டு. பொண்ணு பாக்குற அன்னைக்கே இப்படி என் மாங்கல்யம் கழண்டு விழுதே. இந்த பொண்ணு வேண்டாம் அப்படிங்கற முடிவுக்கு வந்துடறாங்க. ஆனா அதுக்கு முன்னாடியே பையனும் பொண்ணும் பேசிகிட்டு இன்னார்க்கு இன்னார் பிடிச்சு போச்சு. அவங்க கல்யாணம் பண்ணனும்கிற முடிவு எடுத்து அங்க கோயில்ல வச்சு உறுதிப்படுத்திக்கலான்னு தான் சந்திக்கிறாங்க. அப்படிப்பட்ட சூழ்நிலையில எப்படி வேண்டவே வேண்டாம் இந்தப் பொண்ணுன்னு சொல்லிட்டாங்க.
அப்ப அவங்க சார் கிட்ட வரும்போது அந்த பொண்ணு ரொம்ப கதறி அழுதாங்க. கண்டிப்பா இந்த கல்யாண நடக்கும். நான் பாத்துக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லி சில பரிகாரங்கள் மட்டும் சொல்லி விட்டாங்க. எதிர்பார்க்கவே இல்ல திரும்ப அவங்களே வாலண்டரியா வந்து, கல்யாணத்தை உறுதிப்படுத்திக்கலான்னு இதே சென்னையில் தான் பிரம்மாண்டமா அவங்க மேரேஜ் நடந்தது. அந்த மாதிரி எல்லாம் நிறைய சம்பவங்கள் இருக்கு.
அந்த நகை கிடைச்சிரும் :
இன்னொன்னு நகை காணாமல் ஒரு பாரம்பரியமான ஒரு நகை. பொண்ணுக்கு சேர வேண்டிய ஒரு பொருள். அந்த பொருளை அவங்க நாத்தனார், அவங்க அண்ணனோட வைஃப் அண்ணி வச்சுக்கிட்டு கொடுக்க மாட்டேங்கிறாங்க. இவங்க எவ்வளவோ போராடி பாத்துட்டாங்க கிடைக்கல. அப்ப அவங்க போன் பண்றாங்க. அப்ப சார் சொல்றாங்க ஒன்னும் இல்லம்மா கவலைப்படாதீங்க நீங்க ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் கொண்டுகிட்டு இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு சொல்லிட்டு. அந்தக் கோயில் இருந்து அவங்களுக்கு போன் பண்ணுங்க. உங்களுக்கு அந்த நகை கிடைச்சிரும் அப்படின்னு சொல்றாங்க. இந்த அம்மா நம்பிக்கை இல்லை. ஜாதகம் பார்க்க தான் அவங்க போன் பண்ணுது. ஜாதகம் எல்லாம் சார் பாக்கல. பாக்காமலே சொல்றாங்க. நீங்க போங்க அப்படின்னு. இது எப்படி சொல்ல முடியும்? பாக்காமலே ஜாதகத்தை பார்த்து சொல்றது ஒரு பலன் இருக்கு. ஜாதகத்தை பார்க்காமலேயே எப்படி சொல்ல முடியும் அப்படின்னு சொல்லிட்டு, அதே மாதிரி அந்த அம்மா கோயிலுக்கு போறாங்க சார் சொன்ன மாதிரி எலுமிச்சம் பழத்தை கையில வச்சுட்டு கேக்குறாங்க. அவங்க நாத்தனார் போன் எடுத்து அவங்களுக்கு பண்ணலாம்னு அவங்க போன் எடுக்கும்போது அவங்க அண்ணியே கூப்பிடுறாங்க. கூப்பிட்டு, உன்னுடைய அம்மா நகைய வந்து வாங்கிக்கமா. நான் இவ்வளவு நாள் வச்சிருந்தது தப்பு தான். நான் அதை உணர்ந்துட்டேன். நீ வாங்கிட்டு அது உனக்கு சேர வேண்டிய பொருள் நீ வாங்கிக்கோ அப்படின்னு சொல்றாங்க. போன வச்சி அடுத்த நிமிஷமே சாருக்கு போன் அடிக்கிறாங்க. சொன்ன உடனே எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு. எப்படி சார் இதை சொன்னீங்க அப்படின்னு சொல்லிட்டு.
ஏன்னா சாருக்கு வந்து கடந்த கால நிகழ்வுகளை போய் பார்க்கிறது அப்படிங்கறது உண்டு. நாம புக் எழுதும்போது நிறைய அனுபவங்கள் எனக்கு அதுல கிடைச்சது. புக்கு சொல்லிக்கிட்டே இருப்பாங்க திடீர்னு அப்படியே சைலன்ட் ஆயிடுவாங்க. ஏன்னா கண்ண கட்டிக்கிட்டு தான் அவங்க புக்குக்கு சொல்லுவாங்க. அவங்க சொல்ல சொல்ல நான் புக் எழுதுவேன். அப்ப கண்ண கட்டி இருக்கும்போது சில நேரத்துல அடுத்தது சொல்றதுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன். ஆனா சார் கிட்ட இருந்து பதில் வராது. கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் அப்படியே நானும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு வேற ஒரு பாயிண்ட் சொல்லுவாங்க. அந்த பாயிண்டை தனியா எழுதிக்கோங்க அப்படின்னு. அது அடுத்தடுத்து அவங்க சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாமே அடுத்தடுத்த ஸ்டெப் நோக்கி அப்டேட் ஆகிட்டே இருக்கும். அது எப்படி எங்க இருந்து அவங்க எடுக்குறாங்க. அப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன். அவங்க ‘எங்கேயோ பிரபஞ்சத்துக்குள்ள தேடி எடுத்து அவங்களுக்கு ஒரு விஷயம் கிடைக்குது.’ அதை வச்சு தான் அவங்க வெளிப்படுத்துறாங்க அப்படின்னு புரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி தான் இந்த நகை கிடைச்ச சம்பவமும். இந்த மாதிரி நிறைய போற போக்குல ஒரு இதா சொல்லுவாங்க.
அவங்க ரிலேட்டிவ் பொண்ணு ஒருத்தவங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருந்தாங்க. அந்த கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருந்தோம். அப்ப நாங்களும் அவங்க கூட இருந்தோம். கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க. அப்ப அவங்க கிட்ட கேட்டாங்க. இந்த மாதிரி கல்யாணம் நடக்க போதுமா அப்படின்னு சொல்லி ஏதாவது சொல்லுங்க அப்படின்னு. அதெல்லாம் உறுதிப்படுத்தியாச்சுல அப்புறம் எதுக்குமா கேட்டுகிட்டு விட்ருங்கமா அப்படின்னு சொல்லி இருந்தேன். சார் திடீர்னு அந்த பக்கம் கிராஸ் ஆனவங்க நடக்காத கல்யாணத்தை பத்தி ஏன் பேசுறீங்க. அது நடக்க வாய்ப்பில்லன்ட்டு போய்ட்டாங்க. அவங்களுக்கு அவங்க சொந்தக்காரங்க தான் அவங்க. ரொம்ப என்ன இப்படி எல்லாம் முடிவு பண்ணியாச்சு. இத்தனைக்கும் ஒன்னுக்கு ஒன்னு சொந்தம் வேற கல்யாணம் எப்படி நடக்காதுன்னு சொல்றீங்களே அப்படின்னு சும்மா சொல்றாங்க அப்படின்னு அவங்க அப்படியே விட்டுட்டாங்க. ஆனா பத்து நாள் கூட இல்ல கல்யாணம் நின்னு போச்சு.
திரு. ராஜேஷ் அவர்கள் :
என்னாச்சு?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
அது என்ன காரணம்னே தெரியல. அவங்க மாமியாரும் சம்பந்திகுள்ள ஒத்து போகல. அதனால கல்யாணத்தை பிரேக் பண்ணிட்டாங்க. பிறகு அந்த தகவல் தெரிஞ்சதும் அதெல்லாம் எங்கள அடுத்தடுத்து அவங்க கூடயே இதுவரைக்கும் பயணிக்கிறோம்னா அது ஒரு பாக்கியமா தான் நாங்க நினைக்கிறோம். ஏன்னா இவ்வளவு நாள் நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து தான் அவங்க கூட ட்ராவல் பண்றோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி (கைடு) அப்படின்னா மூர்த்தி சார் தான் சொல்லணும். அந்த அளவுக்கு ஒரு ஃபேமிலி மாதிரி நல்லா அவங்க வீட்ல எல்லாருமே நல்லா பழகுவாங்க.
இந்த கணித முறைகள் ஒவ்வொண்ணுமே அவங்க ரொம்ப நுணுக்கமா அத ஆய்வு செஞ்சு ஒவ்வொரு விஷயங்களையும் அந்த பத்து நிமிஷத்துல நம்மளால பலன் எடுக்க முடியும் அப்படிங்கறது இந்த ஒரு ஜோதிட முறையிலையும் அந்த சாஃப்ட்வேர்லயும் மட்டும்தான் சாத்தியமாகும்.
அதுல என்னுடைய அனுபவம் எடுத்துக்கிட்டோம்னா, ஒரு பிரசன்னம் இந்த சாப்ட்வேர் வச்சி தான். இந்த ஒவ்வொரு விஷயத்தையும் இது இப்படித்தான் எடுக்கணும்னு சொல்லித் தருவாங்க. அப்போ ஒரு பையன் வர்றாப்புல ஜாதகம் பாக்குறதுக்கு. பார்த்த உடனே நான் சொல்றேன் அம்மாவுக்கு பிரச்சனையாப்பா அப்படின்னு சொல்லி கேட்கிறேன். ஆமாங்க அப்படின்னு சொல்றாப்ல. ஏதும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சா. ஆமாங்க கீழ விழுந்துட்டாங்க.
திரு. ராஜேஷ் அவர்கள் :
எப்படி கண்டுபிடிச்சீங்க?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
லக்னம் துலா லக்னம் துலாம் லக்னத்திற்கு நாலாம் வீட்டின் அதிபதி சனி தனுசில் இருக்கிறார். அப்ப நான் கேட்கிறேன் கோயிலுக்கு போகும்போது இந்த சம்பவம் நடந்ததா? அப்படின்னு கேட்கிறேன்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
என் குரு வீடுங்கிறதுனாலயா?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஆமா. இங்க லக்னாதிபதி சுக்கிரன் அம்மாவோட ஸ்தானத்திற்கு அட்டமாதிபதி சுக்கிரன் அட்டம ஸ்தானத்திலே இருக்கிறார் ஆறாம் இடத்தில். துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரன். சுக்கிரன் அங்க எட்டாம் இடத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் சுக்கிரன். அப்போ அம்மாவுக்கு அங்க பிரச்சனை அப்படிங்கற ஒரு விஷயம் காமிச்சது. அப்ப நான் கேட்டேன் பெருமாள் கோவிலுக்கு போறப்பவா அப்படின்னு சொல்லி கேட்டேன். ஆமாங்க அப்படினாப்பில. போறப்ப குறுக்க மாடு வந்து விழுந்துட்டீங்களா அப்படின்னு கேட்டேன்?
திரு. ராஜேஷ் அவர்கள் :
என்னையா? என்ன இது இதெல்லாம் உங்க இமேஜினேஷனா?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஏன்னா ரிஷபம் ரிஷப ராசில சார். ரிஷபம்கிறது மாடு தான. இமேஜினேஷன் இல்ல. ஒவ்வொரு விஷயங்களுக்கும் அர்த்தத்தை சார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க. இதுனா இதுதான் இது இப்படித்தான் அப்படின்னு அந்த நட்சத்திரங்களை பார்ட் பார்ட்டா பிரிச்சு வச்சிருக்காங்க. ஒரு 108 நட்சத்திர பாதங்களுக்கும் இந்த பாதம் போகும்போது இதுதான் நடக்கும்.
மிருகசீரிஷம் நட்சத்திரம் போகுதா கண்டிப்பா பல் டாக்டர் கிட்ட நீங்க போவீங்க.
திரு. ராஜேஷ் அவர்கள் :
எங்க? பல்லு?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
பல் டாக்டர். ஆமா பல்லுல பிரச்சனை வரும். ஹஸ்த நட்சத்திரமா உங்க வீட்ல ஏதாவது எலக்ட்ரானிக் பொருள் ரிப்பேர் ஆகிவிடும். எந்த ஒரு இதுலயுமே அப்படி எல்லாம் சொல்ல முடியாது சார். நாங்களும் எத்தனையோ பாரம்பரியத்தில, நான் கத்துக்கிட்டதுல.
திரு. ராஜேஷ் அவர்கள் :
நாளையிலிருந்து நானும் பார்க்கிறேன்.
108 பாதத்தை 108 புள்ளிங்கிரீங்க.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஆமா. ஆமா சார்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
108 புள்ளிக்கும் தனியா எழுதி இருக்காரா?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
இல்ல. அத புக்கா இன்னும் போடல. ஆனா அது உண்டு. 18 வால்யூம் புக் எழுதுறாங்க. ஒவ்வொரு வால்யூம் ஒவ்வொரு விஷயத்தை.
திரு. ராஜேஷ் அவர்கள் :
18 படி மாதிரி இருக்கு.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஆமா. ஒவ்வொண்ணுமே ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள் தான். முதல் புக்குல அட்சய லக்னம்னா என்ன அப்படின்னு கொடுத்திருப்பாங்க. இரண்டாவது புக்குல அட்சய ராசி. லக்னத்தையும் ராசியையும். உடலும் மனமும் ஒத்து இயங்கினால் தான் ஒரு மனிதன் நாம நெனச்சத அடைய முடியும். மனசு ஒரு பக்கமும் உடல் ஒரு பக்கமும் இயங்கும்போது அது அனுபவிக்க முடியாது அப்படின்னு சொல்லி.
நேத்து ஒரு ஜாதகம் ஒன்னு வரும்போது ரெண்டு பேருக்குமே பொருத்தம் நல்லா இருக்கு. ரெண்டு பேர் ஜாதகத்துலையும் ஐந்தாம் இடம் பலமா இருக்கு. குழந்தை பாக்கியம் இருக்கு. ஆனா குழந்தை இல்ல. 46 வயசு பையனுக்கு நடக்குது 42 வயசு பொண்ணுக்கு நடக்குது. அது ஏன் அப்படின்னு பார்க்கும்போது இந்த அட்சய லக்னத்திற்கு அட்சய லக்னம் பொருத்தம் கிடையாது. இரண்டும் ஆறு எட்டா வருது. அப்போ இந்த விஷயத்தையும் சார் தான் சொல்லிக் கொடுக்கிறார்.
அதே மாதிரி மூன்றாம் வீட்டில் குரு இருக்கு, அட்சய லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் குரு இருக்குனா, அங்க ஒரு பிரச்சனையா அவங்க கண்டிப்பா சந்திப்பாங்க. அது பிரச்சனைங்குறது நிறைய இருக்கு.
திரு. ராஜேஷ் அவர்கள் :
ரொம்ப ஜோசியத்துல போனா பாக்குறவங்களுக்கு புரியாது. வேற ஏதாவது நிகழ்ச்சிகள் மாடு குறுக்க வந்தது மாதிரி.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
நாம ரொம்ப டெப்த்தா போக வேண்டியது இல்ல. ஆமா. நிறைய இருக்கு சார் நிறைய விஷயங்கள் சார பத்தி சொல்லிட்டு இருக்கலாம்.
ஒரு அம்மா அடிக்கடி கோவிலுக்கு நிறைய போவாங்க சார். ஹிமாலயா போயிருக்கும் போதுதான் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு விஷயத்தை வெளிப்படுத்தணும் அப்படின்னு தோண ஆரம்பிச்சது. அப்போ ஒரு கோயில்ல இருக்கும் போது ஒரு அம்மா அழுதுட்டு இருக்காங்க. அவங்க எந்த சம்பவத்தையும் சார் கிட்ட சொல்லல, பகிர்ந்திக்கல. அப்போ சாரு அவங்கள பாத்துட்டு ஏமா அழுவுறீங்க? உங்க பையன் அதெல்லாம் நீட் எக்ஸாம்ல பாஸ் பண்ணிருவாரு. இந்தாங்க இந்த கல்லை மட்டும் கொண்டு போய் வீட்ல வச்சு சாமி கும்பிடுங்க அப்படின்னு சொல்றாங்க. அந்த அம்மாக்கு அவ்வளவு சந்தோஷம். பரவால்ல அந்தப் பையன், பேரனை நினைச்சு தான் கவலைப்படுறாங்க. அத வந்து எப்படி சொன்னாங்க அப்படின்னு, அவங்க ஜோசியர் அப்படிங்கிறது எல்லாம் அவங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த வார்த்தை சொன்ன உடனே அந்த இடத்துல அவங்களை வந்து ரொம்ப பிரமாண்டமா ஏன்னா நமக்கு யாராவது ஒருத்தவங்க சொல்றாங்கன்னா கடவுளே நமக்கு நேரில் வந்து சொன்ன மாதிரி தான் நினைப்போம்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
ஆமா, ஆனா நடந்துருச்சு அதே மாதிரியே.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
கண்டிப்பா. அவங்க நம்பர் வாங்கிட்டு போனாங்க. அப்புறம் பாஸ் பண்ணிட்டாருனு ரொம்ப சந்தோசமா போன் பண்ணாங்க.
அப்புறம் காஞ்சிபுரத்தில் ஒரு பிரபலமான லாயர் ஒருத்தவங்க. மன அழுத்தத்துல ரொம்ப டிப்ரசன்ல இருந்தாங்க. சார் சொல்லக்கூடிய பரிகாரங்கள் எல்லாமே ரொம்ப எளிமையானது. அந்த கிரகங்களோடு ஒத்துப்போகக்கூடிய பரிகாரங்கள் தான் அவங்க சொல்லுவாங்க. அப்ப ரொம்ப டிப்ரசன்ல இருக்காங்க. அவங்க என்ன பண்றது அடுத்த ஸ்டேஜ் அப்படிங்கறது தெரியல. பொம்பள புள்ளைங்க தான் அவங்க கூட பிறந்தது ஆண் வாரிசும் இல்ல. அப்பா அம்மாவும் இல்லை. ரொம்ப நான் என்ன பண்றதுன்னு கேட்டாங்க. ஒன்னும் இல்ல சுருட்டு வாங்கி உங்க வீட்ல தென்மேற்கு திசையில் பத்த வைங்க.
திரு. ராஜேஷ் அவர்கள் :
என்ன வாங்கி?
என்னய்யா இது?
திருமதி.
சாந்திதேவி அவர்கள்:
சுருட்டு வாங்கி பத்த வைங்க. இன்னைக்கு நைட்டு பத்த வைங்க, நாளைக்கு எனக்கு கூப்பிடுங்க அப்படின்றாங்க. அந்த அம்மா மறுநாள் கூப்பிடறாங்க நைட்டுதாங்க ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நான் நிம்மதியா தூங்கி எந்திரிச்சேன் அப்படின்றாங்க. அதுக்கும் கிரகங்களுக்கு என்ன?
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மெடிக்கல் அஸ்ட்ராலஜி பண்ணும் போது ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு சத்து குறைபாடுகள் இருக்கும். ஒவ்வொரு விஷயம் அவங்களுக்கு பிரச்சனைகளை தரும் அப்படின்கிறத ஆய்வு பண்ணி இருக்காங்க.
அவங்க வீட்ல பார்த்தா ஒவ்வொரு ஆய்வு கட்டுரைகளும் பெரிய அளவு இருக்கு சார். பல்லாயிரக்கணக்கான ஜாதகங்கள் ஆய்வு பண்ணி தான் இந்த விஷயம் சரியா இருக்கு அப்படிங்கறத அவங்க வெளிப்படுத்தினாங்க.
அதான் நான் சொன்னது. ஒரு சதவீதம் மட்டும் தான் அவங்க வெளிப்படுத்தி இருக்காங்க.
ஷேர் மார்க்கெட் சம்பவங்கள் ரொம்ப சுவாரசியமானது. திடீர்னு ஒருத்தர் வந்து சார் கிட்ட கேக்குறாங்க இந்த நேரம். கரெக்டா இந்த மாசம் டிசம்பர் மாசம் 27ஆம் தேதி அது ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி. ஷேர் மார்க்கெட் இந்த நாள் ஏறப்போது நீங்க பார்த்து போட்டு எடுத்துக்கோங்க அப்படின்னு சொல்றாங்க. அதே மாதிரி அன்னைக்கு ஏறுது.
திரு. ராஜேஷ் அவர்கள் :
மைக்ரோ போய் இப்போ மேக்ரோ லெவல்.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
ஆமாமா. கண்டிப்பா. இந்த டைம்ல அது ஏறும். இந்த நாள்ல, பர்டிகுலர் நாள். நான் கூட பேஸ்புக்ல போடாத பதிவுகள் இல்லை.
திரு. ராஜேஷ் அவர்கள் :
அப்போ ஷேர் மார்க்கெட் காரங்க எல்லாம் உங்க புக் வாங்கணும்.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
புக்ல அந்த விஷயங்கள் கொடுக்கப்படலை சார். ஷேர் மார்க்கெட் ஆய்வு அப்படிங்கறது சார் ரொம்ப தனியா பண்றாங்க. அதுக்குன்னு தனியா ஒரு சாப்ட்வேர் கிரியேட் பண்ணி இருக்காங்க அது சாருக்கு மட்டும் தான் தெரியும்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
அது எப்போ வெளியே வரும்?
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
சாருக்கு மட்டும்தான் தெரியும். அது சார் கிட்ட தான் கேக்கணும். ஏன்னா அதனுடைய அப்டேட் நிறைய ஆயிட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களும் அப்டேட் ஆயிட்டு இருக்கு.
திரு. ராஜேஷ் அவர்கள் :
ஹிந்தியில் போட்டோம்னா பாம்பேல எல்லாம் பறக்குமே.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
இப்பவே நிறைய கேட்டுட்டு தான் சார் இருக்காங்க. ஆனா சார் தான் அதை வெளிப்படுத்தல. அது அவங்களுக்கு எப்ப உத்தரவு ஆகுதோ அப்பதான் வெளிப்படுத்துவாங்க. ஏன்னா ஒவ்வொரு விஷயமுமே அது எங்கேயோ ஒரு இடத்துல போய் அவங்க கேட்டு சொல்றது மாதிரி தான் இருக்கும்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
குதிரை ரேஸ் நடக்கிறது இடத்துக்கு போனோம்னா அது?
சாந்திதேவி மேம்:
கண்டிப்பா அது எல்லாமே இதுல அப்டேட் ஆகிட்டு தான் சார் இருக்கு. ஒவ்வொரு நிகழ்வுகளுமே அதுல ஒவ்வொரு விஷயங்களுமே இந்த ஷேர் மார்க்கெட் சம்பவம் அதுல அவர நம்பி ஒருத்தர் போட்டார். பணம் போட்டுட்டு அந்த ஒரு மணி நேரத்துல அவருக்கு போட்ட லாபம் வந்துருச்சு. மறுபடி போடுங்கய்யா இன்னும் ஒரு மூணு மணி நேரத்துக்கு அதனுடைய சூழ்நிலை ஏறுமுகமாக தான் இருக்கும் அப்படிங்கும் போது அவங்க அத மிஸ் பண்ணிட்டாங்க. அதனால அது சரி விதிப்படி யாருக்கு கிடைக்கணும்னு இருக்கோ அவங்களுக்கு தான் கிடைக்கும்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
அது உண்மை.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
அதனால நிறைய பேருக்கு அந்த பரிகாரங்கள் கூட ஒருத்தருக்கு இவ்வளவுதான். இன்னொரு சுவாரசியமான சம்பவம் என்னன்னா? ஒரு நிதி நிறுவனத்தினால மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு ஜாதகம் யாரு அப்படின்னு ஒரு ஆய்வு பண்றாங்க. அப்போ அந்த ஏமாத்துன ஜாதகத்தை எங்க இருந்து கலெக்ட் பண்றது. கலெக்ட் பண்ற வாய்ப்புகள் இல்லை.
திரு. ராஜேஷ் அவர்கள் :
இதுவரைக்கும் எவன் எவன் ஏமாத்துனானோ அவங்கள எல்லாம் பிடிக்க வேண்டியது தானே.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
அவங்கள எங்க இருந்து போய் பிடிக்கிறது.
திரு. ராஜேஷ் அவர்கள் :
அதெல்லாம் ஈஸியா பிடிச்சிரலாமே.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
அதுக்காகவே ஒரு அமௌன்ட் செலவு பண்ணாங்க. அந்த நிதி நிறுவனம் அதை ஆய்வு பண்ணனும் என்பதற்காக. அப்படியே டேட்டா பேஸ் வாங்கிட்டாங்க. வாங்கி கலெக்ட் பண்ணிட்டு. இந்த வருஷத்தோட இந்த கம்பெனி திவால் ஆயிடும். ஒழுங்கா இப்ப இருக்கிறதை வைத்து கெட்ட பெயர் இல்லாம ரொட்டேட் பண்ணிட்டு வாங்க.
அவங்க ஷேர் மார்க்கெட்ல தான் இன்வெஸ்ட் பண்றாங்க. அந்த நிதி திரட்டி ஷேர் மார்க்கெட்ல தான் இன்வெஸ்ட் பண்றாங்க. இதுவரைக்கும் உங்களுக்கு மீன லக்னம் போச்சு. குரு உச்சத்தில் இருந்தது. கொட்டு கொட்டுன்னு கொட்டி இருக்கும். இந்த 10 வருஷமா கொடிகட்டி பறந்து இருப்பீங்க. ஆனா அடுத்த மேஷ லக்னம் ஸ்டார்ட் ஆகும்போது நீங்க அத பண்ணீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு பெரிய அவப்பெயர் ஏற்படும் பண்ணாதீங்க அப்படின்னு சொன்னாங்க. விதி இருந்தா தான் அதிலிருந்து தப்பிக்க முடியும்கிறதுக்கு இதுல ரொம்ப நல்ல உதாரணம். ஆனா அவங்க கேட்கல. இல்ல சார் அத பண்ணலாம் இப்பதான் நல்ல பீக்ல போயிட்டு இருக்கு. திடீர்னு எங்கள நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கு. நாங்க அத பண்ண முடியாது அப்படின்னு சொன்னாங்க. ஆனா கரெக்டா ஒரு மாசத்துலயே ரொம்ப டவுன் ஆகி உள்ளதெல்லாம் இழந்துட்டு இன்னைக்கு எங்க இருக்காங்கன்னு தெரியல. நிறைய கேஸ் உள்ள போலீஸ் தேடக்கூடிய ஒரு நபரா இருக்காரு. அந்த மாதிரி நடந்த சம்பவங்கள் எல்லாம் நிறைய இருக்கு. நேரமின்மை காரணமாகவும் நாம நிறைய சொல்ல முடியறதில்லை.
திரு. ராஜேஷ் அவர்கள் :
போதும் போதும் இது போதும்.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
அட்சய லக்னம் அப்படிங்கற ஒரு விஷயம் இன்னைக்கு பல பேர் வாழ்க்கையில நல்ல வெளிச்சமாக இருக்கு.
திரு. ராஜேஷ் அவர்கள் :
விருப்பப்பட்ட மாணவர்கள் படிச்சு ஈசியா கத்துக்கலாம். அந்த காலத்துல நாங்க மண்டைய போட்டு கசக்குன மாதிரி எல்லாம் இல்ல ஈஸியா இருக்கு.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
கண்டிப்பா. ஏன்னா இப்போ பயன் இருக்கறவங்களுக்கு தான் அந்த பாக்கியம் இருக்கிறவங்களுக்கு தான் இந்த கிளாஸ்க்கு உள்ளேயும் வர முடியும். ஏன்னா அவங்க கிட்டயும் கத்துகிறது ஒரு பாக்கியம் இல்லையா. நாம எத்தனையோ மகான்களை சந்தித்திருப்போம். எல்லாரும் அவங்களோட பயணம் பண்ண முடியாது. ஒரு சிலர் மட்டும் தான் அவங்களோட பயணம் பண்ண முடியும். ஆனா அவங்களுக்கு பிறகு ஆஹா நான் கத்துக்காம விட்டுட்டேனே. வாய்ப்பு இருந்தது எனக்கு அது கிடைக்கலையே அப்படிங்கறவங்க நிறையா. இப்போ எங்களுக்கெல்லாம் அந்த வாய்ப்புகள் இருந்தது சேர்ந்து ட்ராவல் பண்றோம். ஒவ்வொரு பலனுக்குமே ஒவ்வொரு அங்கீகாரம் கொடுக்குறாங்க. நம்ம வந்தோம், பார்த்தோம்,போனோம் அப்படின்னு இல்லாம.
திரு. ராஜேஷ் அவர்கள் :
ரொம்ப தெளிவா இருப்பாரு, ரொம்ப நல்லா இருப்பாரு.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
இப்போ நம்ம ஒரு டீச்சரா நம்ம அடுத்தவங்களுக்கு கோச் பண்ற அளவுக்கு ஒரு சுதந்திரமும் ,ஒரு அங்கீகாரமும் கொடுத்திருக்காங்க அப்படின்னா, இந்த அட்சய லக்ன பத்ததியோட வெற்றியும், பொதுவுடைமூர்த்தி சாருடைய உழைப்பும்தான் காரணம். ஏன்னா அந்த அளவுக்கு கடுமையான உழைப்பு.
திரு. ராஜேஷ் அவர்கள் :
மிகக் கடுமையான உழைப்பு.
மூளை கசங்கும். ஒரு ஜாதகம் பார்க்க முடியாது எனக்கு தெரியும். மண்டை குழம்பு.
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
முதல்ல எல்லாம் ஒருத்தவங்களுக்கு பிரச்சனைனா கடந்த காலத்துக்கு போயே பாத்துட்டு வந்து சொல்லுவாங்க. இப்போ அந்த அளவுக்கு அந்த மூளை ரொம்ப வேலை செய்யக்கூடாது அப்படிங்கறதுக்காக ரொம்ப அதெல்லாம் குறைச்சுட்டாங்க. இதிலேயே இவ்வளவு துல்லிதமா பலன் வரும்போது நம்ம அதுக்கு எல்லாம் போக வேண்டியது இல்லை. பாஸ்ட் லைப்குனே ஜாதகம் போட்டு இருக்காங்க. கடந்த காலத்துக்குனே ஒரு ஜாதகத்தை கணிச்சிருக்காங்க. அதை வெளிப்படுத்தினால் அப்புறம் எல்லாரும் அதை நோக்கி தான் போக ஆரம்பிப்பாங்க அப்படின்டு வெளியே யாருக்குமே கொடுக்கல. அந்த அளவு அதனுடைய கடுமையான உழைப்பு அப்படிங்கிறது அதுல இருக்கிறவங்க எல்லாருக்குமே தெரியும்.
திரு. ராஜேஷ் அவர்கள் :
ரொம்ப ரொம்ப நன்றி மா
திருமதி. சாந்திதேவி அவர்கள்:
நன்றி சார்.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment