பிரம்ம முகூர்த்தத்தால் மாறும் வாழ்க்கை......இது ஐயாவின் சொற்பொழிவின் எழுத்து வடிவம்:


 பிரம்ம முகூர்த்தத்தால் மாறும் வாழ்க்கை......

Behindwoods 02 சார்பில் ஆன்மீக சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  சொற்பொழிவாற்றினர்.

இது ஐயாவின் சொற்பொழிவின் எழுத்து வடிவம்::

அறிமுகம்:

குரு பிரம்மா, குரு விஷ்ணு, 

குரு தேவோ மகேஸ்வர, குரு சாட்சாத் பரப் பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. 

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்றுஎன்ற வள்ளுவனின் வலிமையான, ஆழமான வாசகத்திற்கு ஏற்றார் போல்,  நம்மிடையே வாழ்ந்து பல புரிந்து, தெய்வ அனுக்கிரகம் அனைவருக்கும் சாத்தியம் என்பதற்கு சான்றாக, பரிபூரண இறையருள் பெற்று, சாஸ்திர கலையாம் ஜோதிடத்தில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தி, நவீன மென்பொருளை உருவாக்கி பரந்து விரிய விரும்பிய ஜோதிடக்கலை என்னும் ஆலவிருட்சம், அட்சய லக்ன பத்ததி எனும் புதிய ஜோதிட முறை, அவரால் உருப்பெற்றது.

இந்த விதைக்கு சூரியனாய் ஒளி கொடுத்து, சந்திரனாய் நீர் வார்த்து, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களாய் பத்திரம் போல் பாதுகாத்தவர் இவர்.

ஆம், அட்சய லக்ன பத்ததி  என்னும் ஞானப்பழம் வழங்கும் மரம்  ஒன்று அவரால் உருவானது. சூட்சுமம் என்ற ஒன்றே இல்லாத நிலையில், அதன் பெயரில் ஜோதிடக் கலையின் முழுமையை கற்பிக்க தயங்கியவர்கள் மத்தியில், மாற்றி யோசித்து,  இன்று ஜோதிடக் கலை அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒரு காலக் கண்ணாடி என்ற ஒரே நோக்கமாக கொண்டு, வீட்டிற்கு ஒரு ஜோதிடர் அமைய வேண்டும் என்ற குறிக்கோளின்படி செயல்படுபவர். சிவனின் பெயரைக் கொண்டு,  அய்யனாரின் ஆசி பெற்று,  ஜோதிட உலகில் புதிய புரட்சிக்கு வித்திட்டு, குரு கடாட்சம் பொருந்திய நிறைகுடம் இவர்.  183 ஜோதிட முறைகளின் நீள அகலங்களை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் நம் முன்னத்தி ஏர். 17 வருடங்களை அட்சய லக்கன பத்ததி ஆராய்ச்சியில்

அர்ப்பணித்து, ஜோதிட உலகில் புத்தொளி பாய்ச்சிய வித்தகர். 

பாரம்பரியத்தை பழிக்காது,  நவீனத்தை உள் வாங்கி, அட்சய லக்ன பத்ததி ALP என்னும் துல்லிய ஜோதிட முறையை உலகிற்கு அள்ளி தந்தவர்.

ஆம், ஜோதிடரின் வார்த்தை கேட்பவருக்கு வாழ்க்கை என்று உரைத்த ALP யின் தந்தை,  எங்கள் ஆசான், வாக்கு யோகி,  நவக்கோள் சித்தர், முனைவர் திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்.

ஐயாவின் உரை.www.alpastrology.com

என்னுடைய பெயர்

பொதுவுடைமூர்த்தி. எல்லோருக்கும் தெரிந்திருக்காது. அதை முதல்ல நான் சொல்லிடுறேன். என்னடா! பொதுவுடைமூர்த்தி அப்படின்னு ஒரு வித்தியாசமான பெயரா இருக்கே அப்படின்னு பார்க்கலாம். 

இதுக்கு முன்னாடி ஒரு கதை இருக்கு. தில்லை நடராஜரைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். தில்லை நடராஜர் கிட்ட போயி, ஒரு இரண்டு முனிவர்கள் என்ன பண்றாங்க,   ஐயா, இந்த மாதிரி இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா,  அப்படின்னு பான்கோபர், மகாகோபர்னு ரெண்டு பேரு போய், அழகா என்ன பண்றாங்க, சண்டை போடுறாங்க. சண்டை போட்டுக்கிட்டு இருக்கும் போது,  ஐயா, நான் பதில் சொல்லல,  

உனக்கு வந்து நான் ஒரு இடத்துல காட்சி கொடுக்கிறேன். நீ அங்க போயி அந்த குளத்தங்கரையில நீ வந்து, அந்த இடத்தில் தியானம் பண்ணுங்க. அமைதியா உட்காருங்கள் என்று 

சொல்லும் போது, ஒரு குளத்தங்கரையில் வந்து ரெண்டு பேரும் உட்கார்ந்து தியானம் பண்றாங்க.

அங்க ஒரு ஆலமரம் இருக்கு. அந்த ஆலமரத்துல காட்சி கொடுக்குறாரு அந்த நடராஜர். அந்த நடராஜர் இன்னைக்கு திருவாதிரை நட்சத்திரம்,  திருவாதிரை பத்தி பேசுறோம், நடராஜர் பத்தி பேசுறோம், எப்படி இருக்கு பாருங்க! இந்த நடராஜர் தானே பேச வைக்கிறார். 

அப்ப என்ன சொல்றாரு, 

ஐயா, இல்லறமும் சிறந்தது,  துறவறமும் சிறந்தது,  இல்லறத்திலிருந்து துறவறம் தான் ஒரு மனிதனை மனிதனாக மாற்றும் அப்படின்னு யார் சொல்றாரு?  அப்படின்னு சிவபெருமான் ரெண்டு பேருக்கும் பொதுவான தீர்ப்பு சொல்லிப்புட்டாராம். அதுக்குத் தான் பொதுவுடை என்று  பெயர். 

அந்தப் பெயரை எங்கம்மா எனக்கு வச்சிருக்கு,  

அட என்னம்மா நீ வேற!  பொதுவுடைமூர்த்தி பெயரை வைத்துக்கொண்டு, பெயர் சொல்லி கூப்பிடும் பொழுது ஸ்கூல்ல எப்படி கூப்பிடுவாங்க? அதை சொன்னா  நீங்க கூட சிரிப்பீங்க. பொது வடை மூர்த்தி என்று கூப்பிடுவாங்க. பொதுவுடைமூர்த்தி ன்னு  கூப்பிட மாட்டாங்க. இவங்க கிண்டல் பண்ணனுமென்று, என்னம்மா, இப்படி ஒரு பெயரை  வைச்சிப்புட்டனு  எங்க அம்மா கிட்ட சொல்லுவேன்.

இப்ப எங்க அம்மா என்ன சொல்லுது? உனக்கு ஏன் இந்த பேரு வச்சேன்னு அப்படின்னு எங்க அம்மா சொல்லுது.

எப்படி, ஜோதிடம் வருது பாருங்க.

எங்க தாத்தா சொல்லிப்புட்டாரு,  உனக்கு ஆம்பள புள்ள இல்லன்னு எங்க அம்மா கிட்ட சொல்லிபுட்டாரு. ஆம்பள பொறந்தாலும் உன்கிட்ட தங்காது அப்படின்னு.

அப்ப என்ன பண்ணுது, 

நீ போய் பொதுவுடையாரை கும்பிடு. இந்த பட்டுக்கோட்டை பக்கத்துல பரக்கலக்கோட்டைல, பொதுவுடையார் கோயில் போய்  நீ சாமி கும்பிட்டு, அந்த பெயரை உன் பிள்ளைக்கு வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டு வா. உனக்கு பிள்ளை பிறக்கும். ஆம்பள பிள்ளை பிறக்கும். இப்படி வரம் மாதிரி 18 வருஷம் கழிச்சு நான் பிறந்திருக்கிறேன். 

சரி, 18 வருஷம் கழிச்சு பிறந்துட்டேங்குறது விஷயம் எல்லாம் இல்ல. ஆறரை வயசு வரைக்கும் பேச மாட்டேன். பே பே பே பே என்று பேச மாட்டேன். பேச்சே வராது. எங்க அம்மா என்ன தூக்கிக்கிட்டு போகுது கோவில் கோவிலா. 

எங்க அம்மா என்ன சொல்லுது புத்தடி மாரியம்மன் கோவில்ன்னு சொல்லி எங்க ஊரு பக்கத்துல, இங்க தானிஓட்டத்துல புத்தடி மாரியம்மன் கோவில் இருக்குல்ல. இந்த அம்மன் கோவிலில் குறி சொல்லுவாங்க. எங்க அம்மா தூக்கிட்டு போய் இருக்கு.

நான் இதே மாதிரி குண்டா இருப்பேன். தூக்கிட்டு போகும் போது கஷ்டப்பட்டு தூக்கிட்டு போயிருக்கு. அந்த ஏழு வயசு ஆகும்போது தூக்கிட்டு போயிருக்கு. அங்க அம்மன் சொல்லி இருக்கு, உன் பிள்ளைக்கு வாக்கு தர்றேன் அப்படின்னு சொல்லி இருக்கு. அதுக்கு காணிக்கை என்ன கேட்டிருக்குனா, உன் பிள்ளைக்கு முதல் முடி, எப்படி அந்த முடியையும், கரும்பு காணிக்கை. அதான் பொங்கல் நேரம் பாருங்க. 

எப்படி எல்லாம் ஒத்துப்போவது பாருங்க? எனக்கு எப்படி எல்லாம் எடுத்து கொடுக்குது பாருங்க? 



பேச்சு வர கரும்பு காணிக்கை போடு, புத்தடி மாரியம்மன் கோயிலில் காணிக்கை போடு, பேச்சு வரும். எவ்வளவு அழகா,  எவ்வளவு அழகா எடுத்து கொடுத்திருக்கு பாருங்க. அவ்வளவு அழகா நான் பேசல. 

ஆனால் இந்த இடத்தில் இன்று நல்லா பேசுறேனா இல்லையா?

பேரு வச்சவங்க எல்லாம் ஜோசியர். தாத்தா ஜோசியர்,  மாமா ஜோசியர், பெரியப்பா ஜோசியர் என 14 பேர் ஜோசியர். எப்படி ஒரு ஜோசியரையே உங்களால தாங்க முடியல. 

14 பேர் வீட்ல இருந்தா என்ன, அவ்வளவு தான். சுத்தி சுத்தி அடிக்கிற மாதிரிதான். அம்மா கூட சொல்லும், வருஷத்துக்கு நாலு மொட்டை, அப்படிதான் முடி பாதி காணோம் பார்த்தீங்களா. 

என்னுடைய குலதெய்வம் அய்யனார். அய்யனார் கோவில் ஆலமரத்தில் விளையாடி, விளையாடி, எங்க அப்பாவும் தாத்தாவும் மணியடிக்கிற பூசாரி. எங்க எந்த கோவில் போனாலும் நான் மணியடிக்கணும், அதுதான் எனக்கு கடவுளுக்கு சேவை செய்றதுக்காகதான் நான் பிறந்திருக்கிறேன் என்பதை எனக்கு ஆத்மார்த்தமா அதை செய்வேன். நான் வந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வேன். அப்படி செய்யும்போது நேரா போயிடுறேன், அந்த அய்யனார் கிட்ட போய் மணி அடிக்கிறது தான் எனக்கு வேலையா இருக்கும் சின்ன பிள்ளைல. இது எங்க தாத்தாவும்,  தாத்தாவோட தாத்தாவும்,  எல்லோருமே என வழிவம்சமா சொல்லிக் கொடுத்த ஒரு வம்சம். 

அப்படி வரும் பொழுது மாரியம்மனுக்கு என்னை தத்து குடுக்குறாங்க. இப்ப என்ன பண்ணுது, உன் ஜாதகத்துல இப்படி ஒரு அமைப்பு இருக்கு. தத்து கொடுக்கணும். 

எப்படி எல்லாம் ஜாதகம் அழகா வேலை செய்யது? ஏன்னா நீ தத்து கொடுக்கலனா,  உங்களுக்கு குழந்தை ஆம்பள பிள்ளை இருக்கக் கூடாதுன்னு விதி இருக்கு. இதுக்கு என் தாத்தா என்ன பண்றாரு? 

எங்க மாமா என்ற பண்றாரு? உனக்கு ஆம்பள பிள்ளை இல்ல, தத்து கொடுத்துவிடு  அப்படின்னு எங்க அத்தைக்கு என்னை தத்து கொடுக்குறாங்க. எனக்கு ரெண்டு அம்மா, ஒரு அம்மா அல்ல ரெண்டு அம்மா. எப்படி இப்படியே சொல்லுவேன்ங்க. 

அந்த மாரியம்மன் பார்த்துட்டு,  சரி, என்ன திட்டினீங்கன்னு வச்சுக்கோங்க. மாரியம்மா கிட்ட சொல்லிபுடுவேன்னு மிரட்டுவேன். ஏன்னா அடிக்க முடியாது. கொஞ்சம் உடம்பு குண்டா இருக்கும்போது அடிக்க முடியாது பாருங்க சின்ன பிள்ளையில். 

அப்படியெல்லாம்  என் வாழ்க்கை வந்துட்டு இருந்தப்ப தான், ஆலமரம். இந்த ஆலமரம் மகம் நட்சத்திரம் சிம்மராசியை குறிக்கும். கால புருஷனுக்கு அஞ்சாவது ராசி. பாரம்பரியமா நிறைய விஷயங்களை எனக்கு சொல்லிக் கிட்டே வருது. 

பொறந்த இடம் ஆலமரம். வளர்ந்த இடமும் ஆலமரம்.

நான் போனேன் இங்க இருந்து பழனிக்கு. எப்பவுமே வந்து இது 20 வது வருஷம் பழனிக்கு மாலை போட்டு போறது. மாலை போட்டு போறது  இஷ்டப்பட்டு எல்லாம் மாலை போடல. வேன்ல அழைச்சிட்டு போவாங்க. ஊரு சுத்துவாங்க. அதுக்காக வீட்டில் சொன்னா,  விட மாட்டாங்கன்னு என்ன பண்ணலாம்னு, மாலை போட்டு போறேன்னா என்ன பண்ணுவாங்க? எல்லாம் விடுவீங்களா, எல்லா அம்மா அப்பா வந்து என்ன பண்ணுவாங்க?  

பிள்ளை கோவிலுக்கு போகுது. கோவிலுக்கு போறான்,  போகட்டும் அப்படின்னு அப்பா என்ன சொல்லுவாரு.

சரி, ரைட்டு, அப்படின்னு நம்ம அழகா என்ன பண்றோம்,  வேனில் ஏறி இது இருபதாவது வருஷம். ஒரு வருஷம் போறேன். இரண்டாவது வருஷம். மூணாவது வருஷம் போறேன். என்னை அறியாமல் நிறைய மாற்றம். ஒரு மாற்றம் கொடுக்குது. முதன் முதல்ல காசு கடன் வாங்கிட்டு தான் போனேன், அடுத்த வருஷம் கடன் வாங்காம வரணும் என்பேன், கடன் வாங்காமல் போவேன். இதெல்லாம் என் வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகள் நடந்துச்சு. இப்படியே வரும் பொழுது இந்த கால கட்டங்கள் எல்லாம் நடந்து நடந்து, இப்படியே வந்து கிட்டே இருக்கு. ஆனா இந்த முருகன் கிட்ட வரும்பொழுது மட்டும் என் வாழ்க்கையில் நிறைய அதிசயங்கள் நடக்குது.

அப்ப என்ன பண்றோம்? www.alpastrology.org

இந்த ஜோதிடம் சம்பந்தப்பட்டது நிறைய, நான் சின்ன பிள்ளையில, எங்க மாமா என்ன பண்ணுவாரு? கூப்பிட்டு உட்கார வச்சு இப்ப ஜோசியர் பக்கத்துல உக்காந்துலாம் எவரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா என்ன பண்ணுவாங்க? இவர் பக்கத்துல கடையை போட்டுருவோம்னு சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. ஜோசியம் பார்க்கும் பொழுது யாரையும் உட்கார வைப்பாங்களா என்ன?

உட்கார வைக்க மாட்டாங்க. என்ன பண்ணுவாங்க? நைசா நகர்த்தி விட்ருவாங்க.

ஆஹா, இது என்னடா இப்படி இருக்குனு சொல்லிட்டு நான் என்ன பண்றேன்? மாமா கிட்ட உட்கார்ந்து இருக்கேன். டிவி அவங்க வீட்டில இருக்கும். வேற யாரு வீட்டிலயும் டிவி இருக்காது. டிவி பார்க்க போன இடத்தில, டிவி கரண்ட் இருக்காது. கரண்ட் இல்லாத நேரத்துல அந்த ஜோசியத்தை பத்தி பேசினா, கேட்டு கிட்டே தான் இருக்கணும். என்ன பண்ணனும், கேட்கணும், வேற வழியே இல்ல. 

அதை தொட்டு என்ன பண்றாங்க, அந்த காலத்துல மாட்ட  காணோம், ஆட்ட காணோம், மூக்குத்திய காணோம், தோடக் காணோம்,  தங்கத்தை காணோம்னு இப்படி வருவாங்க.

எப்படி? எப்படிடா 12 கட்டத்தை வச்சுக்கிட்டு இவர் சொல்றாரு ?

ஒன்பதாவது வயசு 

என்னுடைய ஆரம்பம் இந்த ஜோசியத்துக்குள்ள, இது என்னன்னு தெரியாதபோது,   எனக்கு இது ஜோதிடம்னு எனக்கு தெரியாது.

ஏதோ சொல்றாரு.

என்ன சொல்றாரு.

12 குள்ள ஒரு நம்பர் சொல்லுப்பா. ஏழாம் நம்பர் அப்ப தோட்டை காணோம் அப்படிம்பாரு. அப்ப இன்னைக்கு வந்து நீ குளத்தங்கரையில் குளிக்கும் போது, மூன்றாவது முழுகு முழுகும் போது அந்த தோடு காணாமல் போயிருக்கும்.

இப்ப குளித்தங்கரையில மூணு முழுகு  முழுகு. அந்த மூணாவது முங்குல எடுத்துருவே என்பாரு. அப்படியே எடுத்துட்டு வருவான். 

எப்படிடா இதை சொன்னாரு?

அதே மாதிரி எடுத்துட்டு வந்துட்டு, ஐயா இந்த மாதிரி வாத்தியாருன்னு சொல்வாங்க. வாத்தியாரே எடுத்துட்டு வந்துட்டோம் அப்படிம்பாங்க.

இது எப்படிடா? இது ஒரு நாள் ஏதோ சும்மா நமக்காக சொல்லிபுட்டாருன்னு, அடுத்த நாள் போவேன். ஏம்பா இப்ப என்ன சொல்லுது? அப்படின்னா இப்ப நம்மளை இவங்க ஜோசியக்காரங்க எல்லாம் கிறுக்கு. எப்பவுமே புதன் கொஞ்சம் வலுத்து இருக்கும்போது பிறகு எப்படி இருக்கும்? 

முதல்  நாள் கண்டுபிடிச்சிட்டீங்களே.

இப்ப ரெண்டாவது நாள் என்ன பண்ணுவாருன்னா, இந்த சித்திரையில் இருந்து பங்குனிக்குள்ள, ஒரு நம்பர் சொல்ல சொல்வாரு. இப்ப சித்திரை வைகாசி என்றால் என்ன பண்ணுவோம்? ரிஷப ராசி எடுத்துக்குவோம்.

ஓகே, ஏதோ காளை மாட்ட காணோமாப்பா, நாலு கால காணோமா அப்படிம்பாரு.

ஆஹா, முதல் நாள்ல என்ன சொன்னாரு. 12 குள்ள நம்பர் கேட்டாரு. கண்டுபிடிச்சாச்சு. நமக்கு தான் கொஞ்சம் அறிவு கூட எப்பவுமே, சின்ன பிள்ளைல இருந்து யாரு எதை  சொன்னாலும், அந்த அம்மா சொன்னாங்கல்ல. காமாட்சின்னு சொன்னதும்  அப்படி காமாட்சி வந்து முன்னாடி நிக்கணும். அந்த சனத்துல என்ன பண்ணனும். கடவுள்கிட்ட அது வேணும், இது வேணும், இது வேணும் சாமி அதெல்லாம், அப்படியே அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. சொல்றேன் பாருங்க. 

என் வாழ்க்கையில் நடந்தது,  நீங்க எங்கேயாச்சும் இந்த வீடியோ பார்க்கும் பொழுது கடவுள் இல்லைனு யாராச்சும் சொன்னா, அதுக்கு நான்தான் சாட்சியா இருப்பேன்.

ஏன்னா, நான் முன்னாடி நிற்கிறேன். ஏன்னு பின்னாடி சொல்றேன் பாருங்க.

அப்ப என்ன பண்றேன்? சித்திரை வைகாசி. வைகாசினா ரிஷப ராசி. காளைமாட்ட காணோம். அது அந்த சுக்கிரன் என்ன பண்ணும்? தனுசுல இருக்கும். 

அந்த வடகிழக்குல நாலு கிலோ மீட்டர்ல இருக்கு, போய் ஒட்டிக்கிட்டு வா அப்படிம்பாரு. ஒரு மரத்துல சிக்கி இருக்கும்னு சொல்வார் பாருங்க. 

சரி, என்னடா இது? இவரு சும்மா சொல்றாரு, சரி, வா, போய் பார்ப்போம் என்று சொல்லி கொஞ்ச நேரம் என்ன பண்றோம். அப்படியே நடந்து போறோம். கொஞ்ச தூரம் நடந்து போன உடனே அந்த மாடு ஒரு மரத்துல சுத்திக்கிட்டு இருக்கும் பாருங்க. இரண்டரை கிலோ மீட்டர், 3 கிலோமீட்டர் தூரத்தில், இது எப்படிடா? வடக்கே இருக்குன்னு சொன்னது ஒரு விஷயம். அது கிடைக்கும்னு சொன்னது ஒரு விஷயம். இத்தனை கிலோமீட்டர்ல இருக்குன்னு சொல்றது ஒரு விஷயம்.  

என்னடா, இந்த ஆளு அப்படியே சொல்றாரு. இதெல்லாம் ஒரு வாழ்க்கையில எனக்கு அதிசயத்தை நிறைய இடத்தில உண்டு பண்ணுச்சு. ஒருத்தர் கூட நடக்கலைனு சொல்லல. நடக்குது, நடக்குது. ஆனா காலத்தை கருதிடும்போது ஒரு முன்ன பின்ன இருக்கும்,  இருக்க தான் செய்யும். 

இந்த கிரகங்கள் எப்படி ஒரு மனிதனை ஆட்டி படைக்குது?  அப்ப நான் இந்த கோவில் போய் வேண்டுகிறேன். இந்த சாமி வேண்டுகிறேன். நீ எந்த சாமி வேணும்னாலும் வேண்டு என்பேன். கோவிலுக்கு போ. சாமி கும்பிடு. நீ வந்து இதை தான் வேண்டினேன் என்று சொல்லாதே. நீ சாமி கும்பிட்டு வா. உனக்கு என்ன கொடுக்கணுமோ அதை கொடுக்கும்பாரு. இப்படியே சொல்லுவாரு. 

இப்படியே காலப்போக்கில் கடந்து வரும் பொழுது, என் வாழ்க்கையில் முதல் நிகழ்வு,  ஏற்றத்தாழ்வு இருக்கும்,  நல்லது இருக்கும், கெட்டது இருக்கும், சங்கடம் இருக்கும்,  நல்லது இருக்கும், கெட்டது இருக்கும். இப்படியே என் வாழ்க்கை கடந்து போச்சு.

ஜோதிடமும் இந்த ஆன்மீகமும் இரண்டும், இரண்டு பக்க நாணயங்கள் மாதிரி. இந்த நாணயத்தை இந்த பூவா தலையா என்கிற விஷயம் இல்ல, ரெண்டும், பூவும்,  தலையும் சேர்ந்தது தான் ஆன்மீகமும் ஜோதிடமும் அப்படிங்கிற விஷயம்.

அடுத்தது என்ன பண்றோம்?

நம்ம வாழ்க்கையில் வந்து இந்த ரூட் மேப் இருக்கும். இப்ப நான் பெருங்களத்தூர்ல இருக்கேன். என்னுடைய நண்பர் வந்து இந்த மீட்டிங் வர்றதுக்கு முன்னாடி, இவர் லேட் ஆகி வந்தார், ஏன் என்று கேட்டேன்.

நான் வந்து, ஒரு கூகுள் மேப் போட்டேன். கரெக்டான வழியில் வந்துட்டேன். அவர் கூகுள் மேப் போடாம, டெய்லி போகிற ரூட்ல வந்தார். டிராபிக்ல மாட்டிக்கிட்டாரு. இப்படிதான் நம்மளுடைய வாழ்க்கைப் பயணம் அமையுது. ஏய்யா, ட்ராபிக் ரூட்டுனு தெரியுது இல்ல, ஏன் பார்த்து வர வேண்டியது தானே.

எனக்கு கூகுள் மேப் பார்க்க தெரியாது. அவர் என்ன சொல்றாரு, google map பார்க்க தெரியாது. ஜாதகம் பார்க்க தெரியாது. ஜாதகம் பார்த்து இருந்தால், வழி, எந்த ரூட் தெரிஞ்சு வந்திருக்கலாம்ல. 

வாழ்க்கை என்கிற இவ்வளவு தூரம் பயணம். ஒன்னுமில்ல,  நம்ம எத்தனை பேர் இருக்கோம், படிச்சிருக்கோம்ல,  படிச்ச படிப்புக்கு நம்ம வேலைக்கு போய் இருக்கோம்னா, போயிட  முடியாது. எப்படி போயிருக்க முடியும்? யாரோ ஒருத்தர் இரண்டு பேர் இன்னும் பத்து பேர், நூற்றுக்கு 10 பேர் கரெக்டா போயிருப்பாங்க. நம்ம ஆசைப்பட்டதெல்லாம் நினைச்சு நினைச்சு நினைச்சு நம்ம ரூட்ட நமக்கு இப்ப சொன்ன மாதிரி நம்ம ரூட்ட என்ன பண்ணோம், அப்படியே நம்மளையே மாத்திக்கிட்டோம். 

அப்ப அது பாட்டுக்கு போற போக்குல, கடவுள் பாதையிலையோ இல்ல,  ஜோதிடத்தை எதிர்பார்த்தது போயிருந்தாலும், நம்ம ஜெயிச்சு இருக்கலாம்னா, ஜெயிச்சு இருக்கலாம். 

அதைத்தான் நாங்க என்ன சொல்றோம். இந்த கூகுள் மேப் மாதிரி நம்ம வாழ்க்கை பயணத்தை அறிய இந்த ஜோதிடம் கத்துக்கணும். ஒவ்வொருத்தரும் கத்துக்கனும். கத்துக்கிட்டா மட்டும் தான். இல்லைனா நான் லெஃப்ட்,  ரைட்ட திரும்புங்க, சொன்னா திரும்ப முடியுமா என்ன?

நான் போன்ல இருந்துட்டு,  சாந்தகுமார், நீங்க லெஃப்ட் திரும்புங்க, ரைட்டு திரும்புங்கன்னு சொன்னா,  எத்தனை நாள் கேட்டு கேட்டு போவீங்க?

ஜோதிடம் ஒவ்வொருத்தருக்கும் இந்த ஆன்மீகம் எப்படி இருக்கோ, இந்த ஆன்மீக பாதையைக் புடிக்கணும்னா,  முதல் படி இந்த ஜோதிடத்திலே ஏறுங்க. நான் ஜோதிடம் தெரிஞ்சதை தொட்டு தான்,  இந்த ஆன்மீகத்தை உணர்றேன். இதுக்கு பிறகு தான் அடுத்தது வருது.

இந்த இடத்துல வரும் போது,  இடையில வரும் போது,  இந்த ரூட் மேப்பை பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இது எனக்கு தெரியல. ஆனா 2007ல் என்னுடைய வாழ்க்கையில் முதல் விஷயம். என்னுடைய மாமா என்ன சொல்றாரு. இந்த வருஷம் மாப்பிள்ளைக்கு கல்யாணம், வர தையில் என்கிறார். நம்மகிட்ட ஜோசியப் படை இருக்கே. இந்த வருஷம் பண்ணலாம்,  நாளைக்கு பண்ணலாம், இப்படி பண்ணிடலாம்னு சொன்ன உடனே, சரி, நம்மளே படிக்கல,  நம்மளுக்கு வேலை இல்ல,  நம்மளுக்காக யார் பெண்  கொடுப்பா? இது வேற இருக்கா? எப்படி கல்யாணம் நடக்கும்னு பார்த்துருவோம்? இந்த ஜோசியம் எப்படி ஜெயிக்கப் போகுதுனு? ஒருத்தர் நடக்கும்கிறார்,  ஒருத்தர் நடக்காது என்கிறார்,  ஆஹா, இதுக்குள்ள ஒரு போட்டி வந்துட்டா. இது எப்படி நடக்க போகுது? சரி ரைட் இரண்டுக்கும். 

நடந்தா என்ன? நடக்கலனா என்ன? இந்த ஜோசியம் தெரிஞ்சு போயிரும். 

2007 தை மாதம் கல்யாணம். எப்படிடா இந்தாளு சொன்னாரு தை மாதம் கல்யாணம்னு. அப்ப ஏதோ ஒன்னு, நடந்த நிகழ்வு உண்மை. ஒருத்தர் சொன்னது உண்மை, அப்படி என்றால் இங்கு ஏதோ ஒன்னு கணக்கு வந்து, நடந்த நிகழ்வு உண்மைன்னா, அப்ப இந்த ஜாதகமும் உண்மை. 

இப்ப இந்த ஜாதகத்தை என்ன பண்றது அப்படின்னா, இப்ப எல்லாருக்குமே ஒரு கொஸ்டின் இருக்கும். அடுத்தது பதில் எழுதுவோம். கரெக்டா ?

நான் என்ன பண்ணுவேன்னா,  என்னுடைய திருமண தேதி, எனக்கு நடந்த நிகழ்வு உண்மை,  அப்ப என் ஜாதகம் உண்மை. இந்த இந்த நடந்த நிகழ்வுக்கும் ஜாதகத்துக்கும் ஒரு பொருத்தமான ஒரு விஷயம் வேணும்னு சொல்லி,  அப்பதான் வந்து என்னுடைய லக்னம் வளரும். என்னுடைய ராசி வளரும் அப்படின்னு ஒரு ஆய்வு பண்ண ஆரம்பிக்கிறேன். ஆய்வு பண்ண உடனே விட்ருவாங்களா என்ன, எப்படி பத்து வருஷத்துக்கு ஒரு லக்னம், 

12 கட்டத்துக்கு ஒவ்வொரு லக்னத்துக்கு பத்து பத்து வருஷம், 12 கட்டத்துக்கு 12 லக்னம், இதான் அட்சய ராசி, அட்சய லக்னம் சொல்லி பிரிச்சாச்சு. சரி இப்படியே போகுது.

ஒரு நாள் உடனே கடவுள் அப்படியே நேரா வந்து, இதான் எல்லாம் இப்படினு சொல்லி,  ஒரு நோட் எடுத்து, நமக்கு கொடுத்து எழுத சொல்வாரா என்ன? என்ன எழுத 

சொல்றாரு ? என்ன பண்றோம்? முதல்ல ஒவ்வொரு விஷயமா பார்க்கும் பொழுது, இந்த ஜோதிடத்தோட ஒரு ஆராய்ச்சி மனப்பான்மை இப்படியே போகும் பொழுது, பழனி முருகன் கிட்ட நான் போறேன். எப்படி? மாலை போட்டு போகும்போது சொல்றாரு. வடக்கு பக்கம் போ, உனக்கான கேள்விக்கு பதில் வரும்னு ஒரு நினைவு. 

ஆஹா, சரி!  

வடக்கு பக்கம் போனா கிடைச்சுரும் சொல்லி கிளம்பியாச்சு. வடக்கு பக்கம் முழுக்க வட இந்தியா முழுக்க கிடக்கிறேன். என்னைக்காச்சும் ஒரு நூறு ரூபாய் ஜோசியம்,  500 ரூபாய் ஜோசியம், ஆயிரம் ரூபாய் ஜோசியம்னு அப்ப ஜோசியம் பார்ப்பேன்.  ஜோசியம் பார்த்து சம்பாதிச்சா, ட்ரெயின் ஏறிடுவேன். இப்படியே என் வாழ்க்கை போகுது.

எப்படி முருகன் சொன்னா தப்பு இருக்காது. ஏன்னா, முருகனே அவ்வளவுதான், அதுக்கு மேல கடவுளே இல்லை எனக்கு அப்படிங்கிறது தான். 

இப்ப என்ன, முருகன் சொல்லி நேரா என்ன பண்றேன்,  உத்தரகாண்ட்ல இருக்கக்கூடிய நீம் கரோலி பாபாங்கிற இடத்துக்கு போறேன். அதுக்கு பக்கத்துல காஞ்சிதாம் உள்ள இடம், அந்த இடத்துக்கு போயிட்டு, எல்லாத்தையும் கொடுத்துட்ட, ஜோசியத்தை கொடுத்துட்ட, பெயர் புகழ் கொடுத்திட்ட, பணத்தை கொடுத்துட்ட,  எல்லாமே கொடுக்குற. ஆனா இந்த கணக்கு எல்லாம் இப்படி இப்படி அன்றைக்கான கோளோட இருக்கு. இதெல்லாம் எப்ப இணைச்சு, எப்படி ஒரு ஏணியாக்கி நான் ஏற முடியும்? ஆனா இனி என்னையும் எந்த வகையிலும் நீ மாத்த முடியாது. 

எப்படி? ஆஞ்சநேயர் கிட்ட நான் கேட்கிறேனாம். நீ எந்த வகையிலும் என்னை மாற்ற முடியாது. இந்த இடத்துக்கு யாரு? மார்க் ஜூபர்க் வந்து இருக்காரு, யாரு நம்ம ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் ஓனர் வந்திருக்காரு. 

இவ்வளவு பேர் வந்திருக்கிற இடத்துக்கு, என்னை நீ வர வச்சிருக்க. என்னை எந்த வகையிலும் நீ மாத்த முடியாது. ஏன் என்னை இந்த இடத்துக்கு வர வச்ச? உன்னை நம்பி நான் இங்க வந்து எனக்கு நடக்காம போயிருச்சுன்னா, உன்னையே நான் சந்தேகப்பட்டுருவேனே. எப்படி ஆஞ்சநேயரையே சந்தேகப்பட்டுவேனு சொல்லிட்டு என்ன பண்றேனாம், அவர் கழுத்த இறுக்கிப் பிடிக்கிறேனாம்,  ஆஞ்சநேயர் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் பொழுது,  அந்த ஆஞ்சநேயர் என்ன சொல்றாரு, மூர்த்தி விடு அப்படிங்கிறாராம். அப்படினா எவ்வளவு பெரிய கற்பனை எனக்கு பாருங்க. பலமான ஒரு தெய்வம் அப்படினா ஆஞ்சநேயர். அந்த ஆஞ்சநேயர் என்ன பண்றாரு, எனக்கு இது உண்மையா இருக்கு. இப்படி இறுக்கிப் பிடிக்கும் பொழுது,  அந்த ஆஞ்சநேயர் சொல்றாரு ஏய் விடு. அப்படின்னு சொல்றது தான். அத சொல்லிட்டு அந்த இடத்துல வந்து ஒரு கட்ட ஒன்னு இருக்கு. இப்படி படுக்கும் பொழுது அந்த ஆலம் விழுது மறுபடியும் வந்து கண்ணுக்கு முன்னாடி அசையுது. 

நீ சொல்லல, நான் சொல்றேன், வளரும் லக்னம் தான்,  வயதோட லக்னத்திற்கு தான்

நீ ஜோசியம் சொல்ற, நீ சொல்லுவ. உனக்கு இந்த மார்க்கம் தான் முக்கியம் என்று சொல்லி அங்க சொன்னது, இன்னைக்கு ஆறு புத்தகம் எழுதி முடிச்சாச்சு. மொத்தம் 18 புத்தகம்.

என்னுடைய வாழ்க்கையில முதல் விஷயம் என் முதல் படி ஏறுறேன். அப்பதான் லக்னம் வளரும் சொல்லியாச்சு. இதை நான் சொல்லல. ஆனா இந்த ஜாதகம் பார்க்கும் பொழுது சரியா இருக்குல்ல .

எப்படி? ஜாதகம் பார்க்கும் பொழுது சரியாக இருக்குல்ல. 

இந்த ஜாதகம் பார்க்கும் பொழுது நானே வச்சுக்கிட்டேன். நம்மளுக்கு எப்படி சுயநலம் தானே. எனக்கு கிடைச்சத நான் ஏன் உங்களுக்கு கொடுக்கணும்?

என் பக்கத்துல நீங்க கடையை போட்டுருவீங்கள அந்த அவர் கடையை போட்டுருவார். இவர்  போட்டுருவார். பிரதீப் கடையை போட்டுருவார்.

நான் என்ன பண்றேன். அதெல்லாம் முடியாது அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போது சரஸ்வதி தேவி என்கிட்ட சொல்லுது, உனக்காக நான் கொடுக்கல. மத்தவங்களுக்காக கொடுத்தால், நீ சொல்றியா இல்லையான்னு அடுத்த கேள்வி கேட்கிறது. என்னை எப்படி சரஸ்வதி கேக்குதாம் அப்படின்னு ஒரு கற்பனைக்கு நெனச்ச உடனே, அய்யய்யோ இது நமக்கு வச்சுக்க கூடாது. இதை சொல்லிக் கொடுக்கணும்னு அன்னைக்கே முடிவு பண்ணுகிறேன்.

என் வாழ்க்கை எப்படி எல்லாம் சொல்றேன் பாருங்க. இந்த கிரகங்களும்,  இந்த தெய்வங்களும், இதுக்கு தகுந்தமாதிரி என் ஜாதகம் அப்படியே அமையுது பாருங்க. அப்படியே ஒன்னு ஒன்னு ஒன்னு ஒன்னா.  அப்ப தான் இந்த ஆலமரம்ங்கிறது பஞ்சபூதத்திற்கு அஞ்சாவது ராசியில் மகம் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கும் பொழுது, அழகா எனக்கு வெளிப்படுத்துது. 

இது பூர்வ புண்ணியக் கர்மா. உன் வாழ்க்கையில் இது தான் நீ படைக்கணும், இதுக்காக நீ பிறந்திருக்க, நீ  இதை செய், இதை சொல்லிக் கொடு,  அப்படின்னு சொல்லும் பொழுது தான், அப்பதான் வீட்டுக்கு ஒரு ஜோசியர் வேணும். 

வீட்டுக்கு பெண்கள் எப்படி அந்த காலத்தில் முக்கியமா இருந்துச்சு, இந்த பெண் கல்வி படிச்சது இவ்வளவு சமூக மாற்றம் வந்துச்சுல்ல.

அதே மாதிரி இந்த பெண் ஜோதிட கல்வியும், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெண் ஜோதிடர் வேணும் அப்படிங்கறத ஒரு முடிவு பண்ணி, எல்லோருக்கும் ஜோதிடர் அப்படிங்குற இடத்தில் கொண்டு வந்து வச்சேன். 

சரி! அதோட நின்னுச்சா.

இப்ப ஜோசியம் பார்த்து இப்ப என்ன பண்றோம். ஒரு நாள் ஜாதகம் பார்க்கிறோம். என்னை முதலில் நான் உணரணுமில்ல.

நான் உணர்ந்ததை உங்களுக்கு சொல்லணும். அது உங்களுக்கு நடக்கணும் பாருங்க. இது நடந்தா தானே உண்மை.

இப்ப ஜோசியம் சொல்லிக் கொடுக்கணும்னா, முடியுமா என்ன? உடனே சொல்லிக் கொடுத்திட முடியாது பாருங்கள். இதுக்கு விதி, நான் ஒரு அம்ச கட்டத்தை இணைக்கனும். ராசிக் கட்டத்தோட இணைக்கனும். ஒன்பது மாதம் வீட்டுக்குள்ள பூட்டிக்கிறேன். அப்ப நான் எங்கயோ தேடினப்ப கிடைக்கல. நீ அமைதியாக மௌனமாக நீ கண்ண மூடி உட்கார்ந்து இரு. ஒன்பது மாதம் பிறகு தான் எனக்கு அந்த கேள்விக்கான பதில் கிடைச்சுச்சு. அதுக்கு பிறகு நீங்க இந்த புத்தகம் பார்த்திருப்பீங்க. இந்த புத்தகம் ஒவ்வொரு வரியும் நானா எழுதுனது? நான் எழுதினதுனா நானா எழுதல, இது கடவுள் எழுத வைச்சாரு. பேனா மட்டும் பிடிச்சது நான்தான். அவ்வளவுதான் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.

அப்ப இந்த ஒவ்வொரு முதல் புத்தகம் எழுதி முடிச்சுர்றேன். அதுக்கு அப்புறம் தெரியல.  மறுபடியும் ஒன்றரை வருஷம் உட்கார வச்சு, ரெண்டு வருஷம் உட்கார வச்சு, மறுபடியும் ஒரு ஆறு மாசம் கைக்கு மறுபடியும் ஒரு வரி கிடைக்கும். 

நம்ம பாரம்பரியத்தில் திருமணத்திற்கு வயது எப்படின்னா? 21 வயது.

ஒரு தடவை  பஸ்ல போறேன். ஆணின் திருமண வயது 21.

ஆஹா! இதை ஏன் நான் பார்த்தேன்? நான் ஏன் பார்த்தேன்? 21 வந்துருச்சில்ல.  அப்ப ரெண்டு கட்டம் லக்னம் முடிந்து, மூணாவது லக்னம் வரும் பொழுது, மூன்றாவது லக்கினத்தை போட்டு நீ பார்த்திருங்க. முடிஞ்சு போச்சு. 

ஆஹா! இதெல்லாம் என் வாழ்க்கையில, ஒவ்வொரு சில வார்த்தைகள், நீங்க ஒரு வார்த்தை சொன்னிங்கன்னு வச்சுக்கோங்களேன், நான் எழுதி வச்சுக்குவேன். நோட்டுல பேனா எழுதி வச்சுக்குவேன். ஏன்! இரண்டு பேனா. இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு. அது எல்லாத்துக்கும் பரிகாரம்தான். நீங்க என்ன சொன்னாலும் பரிகாரம் வச்சிருப்பேன். அந்தப் பேனா வந்து என்ன பண்ணும் நோட்ல எழுதி வச்சுக்குவேன்.

இந்த நிகழ்வு வரும் பொழுது ஒவ்வொரு நிகழ்வா அதை சொல்லிக் கொடுக்கிறேன். சொல்லிக் கொடுக்கும்போது இந்த மாற்றம் வந்து ஒவ்வொருத்தர் தனி மனிதனும் மாறனுமா, அப்படின்னா மாறணும். சரி இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு பார்த்தேன்.

நம்ம எல்லோரும் கர்மா பத்தி பார்த்திருப்போம். கர்மா பத்தி எல்லோருக்குமே தெரியும். ஆனால் இந்த கர்மாவுல என்ன பண்றேன். 

கிரகங்கள் எதெல்லாம் பண்ணுது? தெய்வங்கள் எல்லாம் பண்ணுது?

இந்த தெய்வங்கள் எப்பவுமே அப்பா அம்மா மாதிரி என்ன பண்ணும், அடிச்சாலும் என்ன பண்ணும், அணைச்சுக்கும். கொஞ்சம் சேர்த்து பிடிச்சிக்கும்.

sasti tv: https://youtube.com/@alpastrology?si=E7e67qSM39nitLCT

இந்த கிரகங்கள் அப்படியே விட்டே கொடுக்காது. நீ செஞ்சனா நீ அனுபவிச்சு  தான் ஆகணும்.

அப்பதான் என்ன பண்றேன்? இந்த 12 கட்டம் இருக்கா.

நீங்க 12 கட்டம் முடிஞ்சா உங்களுக்கு தெரிஞ்சா பாருங்களேன். 

1, 2, 3,10,11,12 பாவங்கள். இது எல்லாமே தெய்வங்களுடைய அனுகிரகம் இருக்கானா, இருக்கு.

4, 5, 6, 7, 8, 9 இது எல்லாமே கிரகங்களோட நீ ஒரு போதும் மாத்த முடியாது. 

இப்ப எனக்கு ஆப்போசிட்ல இருக்குற அவர மாத்த முடியுமா, முடியாது. நான் தான் மாறனும். 

உங்களை மாற்ற முடியுமா? யாரையும் மாற்ற முடியுமா? 

இப்ப நம்ம ரெண்டு பேரும் கயிறை புடிச்சிருக்கிறோம். ஒன்னு நான் கயிறை இழுக்கணும், இல்ல நீங்க கயிறை இழுக்கணும்.

நானும் கயிறை கீழ போடணும்,  இல்ல நீங்களும் கீழ போடணும். ரெண்டு பேரும் இழுத்திட்டு இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்? அப்ப திருமண வாழ்க்கையும் இந்த சூழ்நிலைகளும் எப்படி கொண்டு வருவதுனு, அந்த கணக்கு சொல்றது எப்படின்னா,  நீ பஸ்ட் கயிறை கீழ போடு,  இந்த இழுத்துகிட்டு இருக்கீங்கல்ல, அந்த கயத்தை நீ கீழ போடு, உன் வாழ்க்கை மாறும். நீ விட்டாலும் அவள் விழுந்திடுவாள். அவள் விட்டாலும் நான் விழுந்துருவேன். இந்த 1 - 7 அப்படிங்கறத, இந்த  ஒன்று ஏழாம் பாவங்கள். கிரகங்கள் ஒன்னுங்கிறது தெய்வம். தெய்வம்ங்கறது நம்ம உடம்புல இருக்கக்கூடியது. எக்காரணம்  முன்னிட்டும் நான் தான் மாறனும். நீங்க யாரும் மாற மாட்டீங்க. அப்ப என்ன பண்றேன். அவரவர் மாறினால் அவங்க வீடு சந்தோசமாக இருக்கும். சுபிட்சமாக இருக்கும்.

அதுக்காக ஒன்னு.

சரி!  ஒன்னு ரெண்டு மூணு.

இந்த நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒன்பது இருக்கு பாருங்க! 

அம்மாவை நான் மாத்த முடியுமா? முடியாது. இந்த அம்மாவை நான்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் அப்படின்னு நான் சொல்லுவேன். இல்ல, எங்க அம்மா தான் என்னை  தேர்ந்தெடுத்து இருக்கு. 

அடுத்தது இந்த பிள்ளையை நானா தேர்ந்தெடுத்துக்கிறேன். என் பிள்ளைய, என்னை என் பிள்ளை தான் தேர்ந்தெடுக்குது.

அடுத்து எனக்கு கடன் நோய் எதிரியை நானா தேர்ந்தெடுக்கிறேன். எனக்கு கடன் வரணும்னு நீங்க என்ன நினைக்கிறீங்களா என்ன? கடனே வரக்கூடாது. நோயே வரக்கூடாதுன்றோம்.  

எப்படி பாருங்க? கர்மா எப்படி வேலை செய்யுது பாருங்க? இதெல்லாம் அழகா நமக்கு இந்த கிரகங்கள் எவ்வளவு நீங்க எவ்வளவு பெரிய இடத்துல இருந்தாலும், இந்த கிரகங்களும், இந்த ஜோதிடமும் ஒன்றோடு ஒன்று ஒன்றோடு ஒன்று, நீ பார்த்து போ, பள்ளம் இருக்கு, வேகத்தடை இருக்கு, அப்படின்னு பார்த்து போ என்று இந்த தெய்வங்கள் சொல்லிக் கொடுக்குது. ஆனா ஒரு நிமிஷம் கூட பார்த்து போறோமா, வேகத்தடை இருக்கு, எங்கயாச்சும் நம்ம மெதுவா போயிருக்கோமா,  போயிருக்க மாட்டோம்.

ஏன்னா, அங்க வேகத்தடைனு போர்டு இருந்துச்சுன்னா,  பார்த்து போயிருப்போம்.

அந்த வேகத்தடைகிறது ஜாதகம், தசா புக்தி, லக்னம்,  அட்சய லக்னம், ALP ஜோதிடம் ஏதோ ஒன்னு, நீங்க எந்த ஜோதிடம் வேணாலும் படிங்க.

அட்சய லக்ன பத்ததிங்குறது இன்னைக்கு வந்து பத்து வருஷத்துக்கு ஒரு லக்னம் மாறும்னு சொல்லி இருக்கேன். அவ்வளவுதான். நீங்க எந்த ஜோதிடம் வேண்டுமென்றாலும் படிங்க. முதல்ல சொல்ற விஷயம் அதுதான்.

சரி, இப்ப என்ன பண்றோம்?  லக்னங்கள் ஒன்று ஏழு வரும் பொழுது அழகா புரிஞ்சுக்கணும். 

அடுத்தது நம்ம அம்மாவை மாத்த முடியாது. 

அப்பாவை மாற்ற முடியாது. ஒன்பது, அப்பாவ மாத்த முடியாது. இதுதான் அப்பா, 

இது தான் அம்மானு ரெண்டு பேரும் சொன்னா தான்.

கடனை மாற்ற முடியாது.

என் மனைவியை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. யாரு? நானா? என்னுடைய திருமணமா? திருமணம்தானே? ஏழாம் பாவத்தை மாற்றவே முடியாதுங்க. 

உங்க மனைவியை நீங்க மாத்த முடியாது. நீங்க தான் மாறிக்கணும். 

நீங்க தான் மாறனுங்க,  கணவனை நீங்க மாத்தவே முடியாது. 

அப்பதான் இதெல்லாம் கிரகங்கள் அப்படின்னா, நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒன்பது அந்த பாவகங்கள், ராசிக்கட்டம் பார்த்திருப்பீங்கல்ல,  இதெல்லாமே இதெல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமாக என்ன பண்ணுது? 

முழுக்க முழுக்க உங்களுடைய ராசி கட்டத்துல, இது எல்லாம் தெய்வங்களுடைய அனுக்கிரகம். அப்போ நான் மாறிக்கலாம். என்னுடைய வருமானத்தை மாத்திக்கலாம். என்னுடைய முயற்சி, இதுதான் முயற்சி, என்னுடைய வாழ்க்கையில் இது தான் முயற்சி, அதெல்லாம் என்னோட மாத்திக்கலாம். எந்த முயற்சி நல்ல முயற்சி, எந்த முயற்சி கெட்ட முயற்சி, எனக்கு தெரிஞ்சா நான் மாத்திக்கலாம். 

அடுத்தது என் வேலை, 

என் கர்மா, என் கர்மாவை நான் மாற்ற முடியுமா என்றால் முடியும். ஆனா என்ன வேலை பார்க்கிறீர்களோ, இந்த வேலையோட சம்பந்தப்பட்டது தான் கர்மா. இந்த விஷயம் என் கையில தான் இருக்கு. இது எந்த வேலையை எடுக்குறீங்களோ, அந்த வேலை சம்பந்தப்பட்ட கர்மா தான் உங்களுக்கு வரும்.

நான் ஜோதிடனா? ஜோதிடன்,  நடிகனா? நடிகன், 

டாக்டரா? டாக்டர், 

வக்கீலா? வக்கீல், 

போலீசா? போலீஸ்,  

இந்த இடத்துல இருந்துதான் என்னுடைய ஒரு தொடக்கம். அங்கு இருந்துதான் எனக்கு ஒரு மரம் மாதிரி, அது அப்படி ஸ்ட்ராங்கா நின்னு நமக்கு வேலை செய்யும். அதை நான் மாத்திக்கலாமா, மாத்திக்கலாம். எனக்கு என்ன லாபம் வருகிறதோ, நான் மாத்திக்கலாமா, மாத்திக்கலாம். எனக்கு என்ன விரயம் வருதோ, நான் மாத்திக்கலாமா, மாத்திக்கலாம். 

ஏன்? ஜோதிடம் படிக்கிறது மட்டும் நான் வேணும் அப்படின்னு நான் கேட்கிறேன் அப்படின்னா, ஒரு பத்து லட்ச ரூபாய் பணம் இருக்கு. இந்த வருஷம் விரயமாகிடும். பேங்க்ல ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டா விரயம் ஆகுமா ஆகாதா? என் கையில பணம் இல்லை. எப்படி விரயம் பண்ண போறேன். ஒரு பத்தாயிரமோ,  ஒரு லட்சமோ விரயத்தை பண்ணிக்கலாம்ல அப்படிங்கறத நான் சொல்றேன்.  இது ஒவ்வொருத்தரும் நீங்க பார்த்தா தெரியுமில்ல. 

நான் படிச்சு நான் மட்டும் சொல்லனும்னு நெனச்சா,  நீங்க கேப்பிங்களா என்ன?  கேட்கவே மாட்டீங்க.

நீங்க என்னதான், இங்க இருக்காங்க, ஜோதிடர் சொல்லுவார் கேளுங்க, 

எந்த ஜோசியர் சொல்லி நீங்க யாராவது கேட்டு இருக்கீங்களா?

நான் சொல்லி நீங்க கேட்கவே மாட்டீங்க. நாங்க சொல்றத நீங்க கேப்பிங்க. இந்த இடத்தின் வெளியில் போற வரைக்கும், நீங்க எல்லாம் கேட்பீங்க. கால் வெளியில போன உடனே  இந்த படத்தை பார்த்து, இந்த நரம்புலாம் சுருட்டுமில்ல அப்படி சுர்ங்கிற  மாதிரி, அப்படியே சொல்வீங்க. வெளியில போனா உடனே மறந்துட்டு, நம்ம என்ன பண்றோம். 10 லட்ச ரூபாய் நீங்க இதுல முதல் போட்டா,  ஒரே வருஷத்துல 20 லட்சம் வரும். எங்க வரும்? அவன் இருபது லட்ச ரூபாய் எடுத்துக்கிட்டு அவன் போயிடுவான். அதை நீங்க படிச்சிருந்தா போடுவீங்களா நீங்க? 

ரோட்ல பள்ளம் இருக்கு, நீங்க என்ன பண்ணுவீங்க? மெதுவா போவீங்களா, போக மாட்டீங்களா. அப்பதான் மெதுவா போவீங்க. எல்லாருக்கும் ரோடு தெரியாது. சென்னையில நீங்க இருக்கீங்க. உங்களுக்கு சென்னையில பாத்தீங்கன்னா, உங்க ரூட்டு தெரியும். எனக்கு ரூட் தெரியுமா? அப்ப உங்க பாதை உங்களுக்கு தெரியுதுல்ல, எனக்கு தெரியாதில்ல, நான் கூகுள் மேப் போட்டு தானே பார்க்கிறேன். அப்ப இதுக்கு மட்டும் நமக்கு தெரியுதுல்ல,  பாதை தெரியுது.

அப்ப வாழ்க்கையோட பாதை நமக்கு எல்லோருக்கும் தெரியுதா? எல்லோருக்கும் தெரியல. 

இந்த ஆன்மீகம் என்பது நமக்கு கடவுள் கொடுத்த வரம்.

இந்த கடவுள் என்பது நமக்கு கொடுத்த வரம் தான் இந்த ஜோதிடம். இதை நீங்கள் எல்லோரும் பிடிச்சுக்கனும்.

சரி, அது எப்படி மாறுதுனு பாருங்க. ஒரு டிரைவர் என்கிட்ட வந்து படிக்கிறாரு. இது நடந்த உண்மை சம்பவம். ஒரு ஒன்னு ரெண்டுலாம் இல்ல, 

500 உண்மை சம்பவத்தை தர முடியும். 

ஒரு டிரைவர் வந்து என்ன சொல்றாரு, நான் ஜோதிடத்துல படிக்க முடியுமா? ஏன் படிக்க முடியாது? மூச்சுக்காற்றுக்கு ஏதாச்சும், மாத்தி மாத்தி ஏதாச்சும், உங்களுக்கு மூச்சு காத்து வேற, இவங்க மூச்சு காத்து வேற கொடுத்திருக்கா? எல்லோருக்கும் ஒன்றுதான் பஞ்சபூதத்தில் கடவுள் காத்து அப்படித்தான் கொடுத்திருக்கு.

இந்த ஆன்மீகம் என்ன பண்ணுது, உடனே என்ன பண்றாரு, படிக்க வராரு, 

படிங்க அப்படின்னேன் படிச்சாரு. அவரு கேரளாவை சேர்ந்தவர். படிச்ச உடனே அவருக்கு ஒரு நல்ல நேரம் வருது. இப்ப நல்ல நேரம் வருது,  சும்மா ஒரு லாட்டரி சீட்டு வாங்கினா, கிடைக்குதா என்று பார்த்திருக்காரு. 10 லட்சம் ரூபாய் பிரைஸ். சார், நீங்க மாறும்னு சொன்னீர்கள், மாறிடுச்சு சார் என் வாழ்க்கை அப்படிங்கிறார் பாருங்க.

இது உண்மை சம்பவம். எவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு பாருங்க. எப்படி?

அதே மாதிரி ஒரு டாக்டர் என்ன பண்றாங்க. 2019 ல ஒரு ஹார்ட் ஆபரேஷன். சார் பண்ணிரனும் சார். ஹார்ட் ஆபரேஷன் வந்து வால்வு வந்து ரொம்ப சுருக்கமாக இருக்கு. இது என்ன அவரே கார்டியாலஜி டாக்டர்.

அவங்க கணவன் மனைவி ரெண்டு பேருமே டாக்டர்.

வந்து கேக்குறாங்க. பண்ணனும்னு இப்ப உங்களுக்கு ஆபரேஷன் இல்லை, நீங்க வேணா சீனியர் டாக்டர் கன்சல்ட் பண்ணுங்க. அப்படின்னு சீனியர் டாக்டர் கன்சல்ட் பண்ணா, இப்ப வேண்டாம், இன்னும் ஒரு நாலு வருஷம் கழிச்சு பண்ணுங்க அப்படிங்கறார். நான் என்ன சொல்றேன், நாலு வருஷம் கழிச்சு பண்ணுங்க அப்படின்னு சொல்றேன். இப்ப மறுபடியும் நாலு வருஷம் முடிஞ்ச உடனே இப்ப வந்துட்டு 2023 ல். சார், நான்கு வருஷம் சொன்னீங்கல்ல, இப்ப வந்து இப்ப ஆபரேஷன் பண்ணனுமா? என்னமா இது? கடையில போய் வாங்கிட்டு வர பொருளா மா, ஹார்ட் ஆபரேஷன் மா. ஏம்மா!

இப்ப அந்த நாலு வருஷம் என்னன்னா பொறுமையா இருக்கணும். இந்த வால்வு சரியாகிவிடும் என்று தான் இருக்க சொன்னேன்.

இப்ப இல்ல, இப்ப பார்த்தா பண்ணி தான் ஆகணும். வயசாகி விட்டா  பண்ண முடியாது. யார் சொன்னது ? உனக்கு இப்பயும் ஹார்ட் ஆபரேஷன் இல்லை. அன்னைக்கு சொன்னா நம்பினேன், இன்னைக்கு சொன்னா எப்படி நம்ப முடியும்?

உடனே சீனியர் டாக்டர் கன்சல்ட் பண்றாங்க, வேண்டாங்கிறாரு. எப்படி? அப்ப எவ்வளவு பெரிய விஷயம்.

குவைத்தில் இருந்து ஒருத்தர் என்ன பண்றாரு? கேன்சர் கட்டி உடனே ஆப்ரேஷன் பண்ணனும்னு. பண்ணாதீங்க,  பொறுமையா இருங்க, இப்ப பண்ணாதீங்க. இது கேன்சர் கட்டி கிடையாது. இது ஏதோ கொழுப்பு சம்பந்தப்பட்ட மாதிரி ஏதோ ஒரு கட்டி இருக்கு. நிறைய கட்டி இருக்கு.


எனக்கு நான் மெடிக்கல் படிக்கல. ஜோதிடம் தான் தெரியும். ஆனா இப்ப ஆப்ரேஷன் பண்ண வேண்டாம். இப்ப விட்டு ரெண்டு வருஷம் கழிச்சு, பின்னாடி ஒரு டெஸ்ட் எடுங்க, சரியா இருக்கான்னு பாத்துக்குவோம். எல்லா ஹாஸ்பிடல்ல போய் பார்த்துட்டு, இரண்டு ஹாஸ்பிடல் மூன்று ஹாஸ்பிடல் பார்த்துட்டு, நீங்க டாக்டர் சொன்னா நீங்க பண்ணுங்க. ரெண்டு வருஷம் கழிச்சு,  அந்த ஜாதகம் வருது. இந்த ஜாதகம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த ஜாதகமாயிருக்கு. யாரு அப்படின்னு கேட்கிறேன்.

ஆமா சார், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நீங்க இந்த மாதிரி என்னுடைய மனைவிக்கு, இந்த மாதிரி கேன்சர் கட்டி இருக்குனு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி கேட்டா, நீங்க பண்ண வேண்டாம்னு சொன்னீங்க. இப்ப கேன்சர் கட்டி இல்ல அப்படிங்கிறாங்க. இதே சென்னை ஹாஸ்பிடல்ல நீங்க ஆபரேஷன் பண்ணாதீங்க சொல்லி நல்ல ரிப்போர்ட் வந்திருக்கு. இத என்னன்னு இதை சொல்ல முடியும்.

ஏனென்றால் இந்த ஜோதிடம்  ஒருத்தரை  வாழ்க்கையில்  நல்வழிப்படுத்துவதற்கு இந்த ஜோதிடத்தை நான் சொல்லுவேன். ஆனா நீங்க கேட்க மாட்டீங்க. அதுதான் ஜோதிடத்தை படிங்கன்னு சொல்றதுக்கு காரணம். 

இங்க ஒவ்வொருத்தருக்கும் நிறைய நிகழ்வுகள் இருக்கு. அதே மாதிரி வாழ்க்கையில் வந்து எல்லோருக்கும் வந்து இந்த ஜோதிடம்னாலே கடவுள்,  பக்தி, அப்படினு சொல்லுவோம். 

இப்ப உதாரணமா நாங்க 2025 கூட சொல்லி இருக்கேன். ராஜராஜேஸ்வரியோட ஆண்டு. இந்த ஆண்டு எப்படி?  ஒவ்வொரு வருஷத்துக்கும் நாங்க ஒரு தெய்வம், கோவில்,  சாமி சொல்வோம். இந்த 2025க்கு ராஜராஜேஸ்வரியும்,  அதே மாதிரி சுவாமிமலை சுவாமிநாத கோவிலுக்கும் நீங்க போயிட்டு வரணும். எல்லோருமே போகணும் அப்படின்னு சொல்றோம்.

 அப்ப என்ன பண்றோம்? எல்லோரையும் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வைக்கிறோம். என்னுடைய ஜோதிட கிளாஸ் எத்தனை மணிக்கு ஆரம்பிக்கும்? விடியற்காலை 4:30 மணிக்கு. வந்தா வாங்க. எப்படியா நாலரை மணிக்கு எவன் வருவான். வரலனாலும் பரவாயில்ல. நான் நாலரை மணிக்கு கிளாஸ் வைக்கிறேன்,  ஏன்னா இந்த ஜோதிடன் தான் ஃபர்ஸ்ட் எந்திரிக்கணும். நான் எந்திரிக்கணும் தானே. 

இப்ப ஒரு மளிகை கடை வச்சிருக்கார். 9 மணிக்கு எந்திரிக்கலாமா, எந்திரிக்கலாம்.

ஒரு கோவில் பூசாரி 6 மணிக்கு எந்திரிக்கணும். கேரளாவுல நாலரை மணிக்கு எந்திரிச்சிடுவாங்க. நம்ம ஊருல அஞ்சரை மணி ஆறு மணிக்கு. 

நம்ம ஒரு ஜோசியரா இருக்கோம். எத்தனை மணி எந்திரிப்பாங்க? எட்டு மணிக்கு,  ஏழு மணிக்கு, பத்து மணிக்கு,  சாப்பிட்டு வந்து உட்கார்ந்துட்டு சொல்லுங்க. மேஷ லக்னமா,  மேஷ ராசியா, ரிஷப ராசியா ரிஷப லக்னமா. 

ஜோசியர்னா நாலு மணிக்கு எந்திரிக்கணும். நாலரை மணிக்கு விளக்கு ஏத்தணும். இது இங்க அத்தனை பேருமே, என் கிட்ட படிக்கிற ஒவ்வொருத்தரும் இன்னைக்கு ஒரு பத்தாயிரம் பேர்னா,  பத்தாயிரம் பேரும் இதை செய்வாங்கன்னா, செய்வாங்க.

பத்தாயிரம் பேருக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வச்சதே எனக்கு வெற்றி தான்.

நீ இப்ப என்ன படிச்சாலும் படி,  எப்படி, என்ன வேணும்னாலும் படிங்க. ஆனா நாலரை மணிக்கு எழுந்திருக்க வச்சேன்ல அது ஒரு பரிகாரம். 

முதல்ல உங்கள விளக்கேத்த சொன்னேன். அதுக்கு என்ன பத்தாயிரம் பணமா ஆகப்  போகுது. ஒரு விளக்கை விளக்கேத்த சொன்னா விளக்கு ஏற்ற மாட்டீங்க. 4:30 மணிக்கு நீங்க கிளாஸ் வாங்க, நீங்க விளக்கு ஏத்திட்டு தான் உட்காரணும்னு நான் ஒரு கட்டாயத்தை வைக்கிறேன்னா, அந்த நாலரை மணிக்கு நீங்க விளக்கு ஏத்திட்டு தான் உட்காருவீங்க. விளக்கை ஏத்துறீங்க, இது ஒரு பரிகாரம். 

அப்ப நாலரை மணிக்கு எந்திரிச்சாங்க, குளிக்கிறது குளிக்காதது உன் விருப்பம். நீ சாமி கும்பிடும் பொழுது இப்படித்தான் கும்பிடுடனும், அப்படித்தான் கும்பிடனும்னு எனக்கு கிடையாது. நீ பயபக்தியோட கும்பிட்டா, எப்படி பயபக்தியோட கும்பிட்டா என்ன பண்ணுவ, அந்த கடவுளே உன்னை தேடி வந்துரும். இப்படித்தான் என் வாழ்க்கையில்  நடந்துச்சு.

அப்ப இந்த ஒரு புத்தகம் எழுதுறேன், ரெண்டு புத்தகங்கள் எழுதுறேன், ஆறு புத்தகம் எழுதி முடிஞ்சு, இப்ப ஏழாவது புத்தகம் எட்டாவது புத்தகம். நான் என்ன பண்றேன்,  இந்த நிகழ்வு வரும்போது இங்க இருக்கிற அத்தனை பேருக்கும் திருமணத்தைப் பற்றி எல்லோருக்கும் ஒரு கேள்வி வரும். 

எல்லோருக்குமே திருமணத்தை பத்தி கேள்வி இருக்கும். என்னுடைய பையன், என்னுடைய மகள், என்னுடைய மகள், என்னுடைய யாரோ ஒருத்தர், திருமணம் சார்ந்த கேள்வி இருக்கும். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் உங்களுக்கு படிச்ச பொண்ணு,   பையன் இருக்காங்களா, 

ஒரு ஸ்கூல்ல, எந்த ஸ்கூல்ல படிக்கணும்? எப்படி படிக்கணும்?

என்ன டிரஸ் எடுக்கணும்? 

எந்த டிரஸ் போடணும்? எவ்வளவு அழகா இருக்குன்னு அழகு பார்க்கிறீங்க இல்ல. ஆனா திருமணப்பொருத்தம் என்று வரும் பொழுது மட்டும் எங்ககிட்ட வர்றீங்களே, ஏன்? நீங்க தானே அழகா பார்க்க முடியும். உங்களை விட யாரும்,  நாங்க பார்க்க முடியுமா என்ன?  உங்களுக்கு தெரிஞ்சாதானே சரியா தவறா முடிவு எடுக்க முடியும். 

நான் ஜோதிடம் கற்றுக் கொடுக்கிறோம்கிறதுக்காக தான் நான் சொல்றேன்.

நீங்க எந்த ஜோதிடம் வேண்டுமெனாலும் படிங்க.

ALP ஜோதிடம் மட்டும் படிக்கணும்னு கிடையாது.

நீங்க எந்த ஜோதிடம் வேணாலும் படிங்க உலகத்துல. 

ஏன் எங்க கிட்ட கேக்குறீங்க? ஏன் அந்த முடிவு நீங்க எடுக்கக்கூடாது? எடுக்கலாமா,  இல்லையாங்க? இல்ல, நீங்க கொடுக்கக்கூடிய ஏதோ ஒரு தொகை, எனக்கு கொடுத்து பாக்குறீங்க இல்ல, அதுதான் முடிவு பண்ணுதா, எங்களுடைய கல்வி தான் முடிவு பண்ணுதா, எங்க ஜோதிடம் தான் முடிவு பண்ணுதா? என்னை விட நீங்க தாங்க நல்லா பார்க்க முடியும் உங்க பொண்ணுக்கு, உங்க பையனுக்கு, அதுக்காகத்தான் இந்த ஜோதிடத்தை படிங்கன்னு சொல்றேன்.

சரி, ஒரு வீடு வந்து லிட்டிகேஷன் பிரச்சனை வரப்போகுது. இடம் வாங்குவீங்களா, வாங்க மாட்டீங்களா? ஏன் வாங்கணும்? எதுக்கு வாங்கணும்?

இந்த வருஷம் வேண்டாங்க. தெரிஞ்சா வாங்க மாட்டீங்க. தெரியலனா என்னங்க பண்ணுவீங்க, வாங்கிட்டு  அப்புறம் அப்படியே ரோடு ரோடா அலையனும். நம்ம ஜோசியர்  சொன்னா கேட்க மாட்டாங்க. எந்த ஜோசியர், நீங்க இந்த ஜோசியர் இல்ல, எந்த ஜோசியர் இல்ல, அந்த இருக்கிற ஜோசியர் யார் சொன்னாலும், நீங்க கேட்க மாட்டீங்க. நீங்க உணர்ந்தால் மட்டுமே தான்.

ஏன்னா கடவுள் கொடுத்த வழிதானுங்க இந்த ஆன்மீகம். கடவுள் கொடுத்த வழியே இந்த ஜோதிடம் தானுங்க. இந்த கடவுளின் மொழி ஜோதிடம் தான் நான் எழுதுறேன். 

கடவுளோட மொழி என்ன மொழி? ஜோதிடம்.

நீங்க ஜோதிடத்தை படிக்காமல்,  நீங்க என்ன வேணுமானாலும்,  நீங்க ஜோதிடம் படித்தால் மட்டும் தான், இந்த வாழ்க்கையில் இருந்த மேடு,  இந்த பள்ளம், எது நல்லது, 

எது கெட்டது, இது வேணும்,  இது வேண்டாம், நீங்க முடிவு பண்ண முடியும்.

இல்லன்னா நீங்க ஒவ்வொரு தடவையும் உங்க ரூட் மேப் யாரோ ஒருத்தரை கேட்டு கேட்டு போறீங்களா, எங்கேயோ ஒரு இடத்துல நின்னா அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது. நீங்க தான் நின்னுகிட்டே போகணும். எல்லாத்துக்குமே எல்லோருக்குமே தொழிலுங்குறது முக்கியம். வருமானம் முக்கியம். நம்ம படிச்ச படிப்புக்கு கரெக்டா வேலை பார்க்கிறோமானால் நம்ம வாழ்க்கையில் கரெக்டா போறோம்னு அர்த்தம். நம்ம படிச்ச படிப்புக்கு நம்ம கரெக்டா வேலை பார்க்கல அப்படின்னா,  நம்ம பாதை சரியான பாதையாக இல்லை. ஏதோ அந்தந்த காலகட்டத்தில் எது நல்லதோ கெட்டதோ முடிவெடுக்க வேண்டி இருக்கு.

இப்படி தான் ஒரு நபர் என்ன பண்றாரு. கனடாவை சேர்ந்தவங்க, அவங்க ஊர் வந்து சேலம். அப்ப என்ன பண்றாங்க. ஜாதகத்தை பையனும் பொண்ணும் நம்பாது. அந்த அம்மா என்ன பண்ணுது. மறைமுகமா என்கிட்ட வந்து ஜாதகம் பார்க்கிறார்கள். என் பொண்ணுக்கும் பிள்ளைக்கும் தெரியக்கூடாது. நான் வந்து ஜாதகம் பார்க்கிறேன். சரி பாரு. 

எனக்கு என்ன? எனக்கு காசு கொடுக்குறீங்க. எப்படி? அவ்வளவு தான். அப்புறம் நான் என்ன பண்ண முடியும்?

சரி பார்த்தாச்சு. அந்த அம்மா பணமே இல்லாம ஒரு தொழில் செய்யணும், எப்படி?

இந்த ஜோதிடனுக்கு எவ்வளவு வேலை இருக்கு பாருங்க. டாக்டருக்கு டாக்டரா இருக்கணும். இன்ஜினியருக்கு இன்ஜினியரா இருக்கணும். போலீசுக்கு போலீசா இருக்கணும். ஜோசியருக்கு ஜோசியரா இருக்கனும்.

குருமார்க்கு குருமாரா  இருக்கணும். தெய்வத்துக்கு தெய்வமா நடக்கணும். அப்ப என்ன பண்றோம்? 

அந்த அம்மா கிட்ட சொல்றேன். இப்ப டைம் நல்லா இருக்கு.  பேச்சு திறன் நல்லாவே வரும். அது பேசுற மாதிரி ஏதாச்சும் ஒரு தொழிலை தொடங்குங்க அப்படிங்கறேன். சார் எப்படி சார், என்ன சார், நீங்க தயவுசெய்து பேசுற மாதிரி, சரி,  என்ன பண்ணலாம்? அடுத்தது ஒரு நீங்க ஒரு youtube சேனல் ஆரம்பிங்க. சார் அவ்வளவுக்கு எல்லாம் ஒன்னும் பெரும் திறமை எல்லாம் இல்ல சார். ஆரம்பிங்க. சரி, முகத்தை காமிக்காம ஆரம்பிக்கலாமா? கரெக்ட். முகத்தை காமிக்காம ஆரம்பிங்க.

எப்படி எல்லாம் இந்த ஜோசியம் நாங்கள் கேட்க கேட்க வழி தெரியும்? அப்ப என்ன பண்றோம்? சார். நாலாம் அதிபதி 10 ல இருக்கு. நாலு என்ன? விலங்கு. நாலு பத்து சம்பந்தப்படுது. விலங்குகளை வைத்து நீங்கள் வந்து, ஒரு நாயை வைத்து ஒரு வீடியோ எடுங்க, அப்படிங்கறேன். அந்த விலங்கு பேசுற மாதிரி.

இல்ல சார். எங்க ஊர்ல எல்லாம் விலங்கு நாயை வளர்க்கிறது ரொம்ப கஷ்டம். 

சரி, கடைசியா என்னமா இருக்கு? ஒரு நாய் பொம்மைதான் இருக்கு. எப்படி பாருங்க? இந்த ஜோசியருக்கு எவ்வளவு வேலை நீங்க கொடுக்குறீங்க? 


நீங்க இந்த கடவுள் வந்து நம்மளுக்கு வந்து ஒவ்வொரு நாளும் களத்துல நின்னு போராடுற மாதிரி தான். கடைசியா என்ன சொல்றது ஒரே ஒரு பொம்மைதான் இருக்கு. சரி. அந்த பொம்மையை நாய் மாதிரி பேச வச்சு, பப்பட் அப்படி தான் சொல்லுவாங்க அதுக்கு பேரு. இன்னைக்கு கனடாவிலும்,  லண்டன்லயும், பெரிய சேனல் அதுதான். மூன்று படம் நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துருச்சாம்.

அப்ப எப்படி ஒரு ஜோதிடர் எவ்வளவு தூரம் வழி காட்ட வேண்டி இருக்கு? ஒருத்தர் ஜெயிப்பதற்கு.

அதே மாதிரி இன்னொருத்தர் ஷேர் மார்க்கெட்டில் பெரிய கோடீஸ்வரர். அண்ணா நகர்ல பெரிய ஆளு. எங்க ஆபீஸ்க்கு ஒரு செக்யூரிட்டி ஒரு 15, 20 பேர்  முன்னாடி வந்து நிற்கிறார்கள். காலையில் இவ்வளவு கூட்டத்துல இது வேற கூட்டம் யாருய்யா? ஒரு மணிக்கு மேல வர சொல்லு. இப்ப எல்லாம் நான் அண்ணா நகர்ல இல்ல. பெருங்களத்தூர் போயிட்டேன். அப்ப என்ன பண்றேன், நீங்க ஒரு மணிக்கு மேல, இல்ல ரெண்டு மணிக்கு மேல வாங்க,  காலையில 4:30க்கு உக்காந்தா நைட் 10 மணி வரைக்கும் ஜாதகம் பார்க்கிறோம். யாரு வந்தாலும், வரலனாலும் உங்காந்து பாக்கிறோம்.

என்ன பண்றோம். ஒரு மணிக்கு வாங்கன்னுட்டேன். 

முதல் விஷயம் ஜாதகத்தை எடுக்கிறேன். லக்னம் மேஷ லக்னம், 5 ல் செவ்வாயும்,  கேதுவும். ஷேர் மார்க்கெட் பண்ணலன்னா, இந்த ஜாதகத்தை நான் எடுக்கிறேன். ஷேர் மார்க்கெட் பண்ணலைனா, நான் ஜாதகம் பார்க்கிறேங்கிறேன். எனக்கு

10 வருஷமா கோடி கோடியா சம்பாதிச்சு போட்டதே, எனக்கு ஷேர் மார்க்கெட் தான். நீ என்ன அதை விட சொல்ற, அப்படின்னு சொல்லி நோட்ட தூக்கிட்டு போயிட்டான். இங்க பாரு, நீ இன்னைக்கு இல்ல, இன்னும் மூணு மாசத்துல என் வீட்டு வாசலில் வந்து நிற்பன்னு சொன்னேன். மூணு மாசத்துல மொத்தமும் லாஸ். எத்தனை கோடினா மொத்தமும், நான் எவ்வளவு அமவுண்ட் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இடத்தில் சொல்லல. என்ன கம்பெனி என்கிற பெயரை நான் சொல்லல.

நாங்க வழி காமிக்கிறோம்,  ஒருத்தர் கேக்குறாரு.

ஒரு வழி காமிக்கிறோம் ஒருத்தர் கேட்க மாட்டேங்கிறாங்க.

நாங்க இந்த கடவுள் வந்து இன்னைக்கு கடவுளோ, இந்த கிரகங்களோடு நேரடியா பேசாது. அதுக்கு தான் இந்த ஜோதிடன்னு  ஒருத்தனை அனுப்பியிருக்கு இங்க .

இந்த கடவுள் கிரகத்தை சேர்த்து நாங்க என்ன, எங்களுக்காகவா கேட்டோம். நீங்க கவனமா பண்ணுங்கன்னு தானே  சொன்னோம். பார்த்து போய் இருக்கலாம் இல்ல. அவரை நம்பி ஒரு 3000 குடும்பம் ஷேர் மார்க்கெட்ல பெரிய லெவல்ல பெரிய இஷ்யூவா போச்சு. ஒண்ணுமே பண்ண முடியல. எல்லோரும் மாட்டிக்கிட்டாங்க.

நீங்க எடுக்கக்கூடிய ஒருத்தர் இருக்கக்கூடிய முடிவோ, எப்படி,  அந்த ஆண், அந்த வீட்ல யார் நிர்வாகம் பண்றாங்களோ,  ஒருத்தர் எடுக்கக்கூடிய முடிவு அந்த வீட்ல, ஒரு ஜோதிடம் தெரிஞ்சா மட்டும்தான், பார்க்க தெரிஞ்சா மட்டும்தான், நாங்க ஜோசியம் சொல்றத நீங்க கேட்பீங்க. இல்லைனா கேட்க மாட்டீங்க. கடைசி வரைக்கும் என்ன பண்ணுவீங்க. உங்க வாழ்க்கையில வந்து கேட்டு கேட்டாலும் பயணிக்க முடியாது. 

அட்லீஸ்ட் ஒரே ஒரு தடவை 4.30 மணிக்கு எந்திருச்சு, உங்க வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை படிச்சிருங்க. 

உங்க வாழ்க்கை கண்டிப்பாக இந்த அட்சய லக்னம் உங்க வாழ்க்கையை மாற்றும்.

வளரும் லக்னம் வாழ்க்கையை மாற்றும் அப்படிங்கற ஒரு நிகழ்வும் உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை அப்படிங்கிற சொல்லி இந்த நிகழ்வு வந்து,  இந்த கிரகங்கள் நம்மள வந்து உணர வைக்குது.

இந்த தெய்வங்கள் வந்து உணர வைக்குது. இந்த தெய்வங்கள் நம்மள உணர்த்துது. அதை விட்டு இந்த வாழ்க்கைல வந்து ஒவ்வொரு நாளும், உங்களை இந்த ஜோதிடமும், இந்த கிரகங்களும், இந்த ஆன்மீகமும், உங்க வாழ்க்கையை வந்து  ஒவ்வொரு நாளும் படிப்படியா உங்களை உணர வைத்து,  உங்க வாழ்க்கையை மாற்றும் அப்படிங்கிறத நான் நம்புறேன். உங்க வாழ்க்கை உங்க கையில இருக்கு.

இதுக்கு முன்னாடி சொன்ன ஒரு சின்னதா ஒரு நிகழ்வு மட்டும், என்ன அப்படின்னா? நாங்க அடிக்கடி சொல்வது தான். இப்ப எல்லோரும் பார்த்து இருப்பீங்க. 

என்ன அப்படின்னா? 

ஒரு முனிவர் இருக்காரு. இந்த முனிவரை எப்படியாச்சும் மாட்டி விட்டுரனும். இன்னைக்கு எப்படி இவர் மாட்டுவார்னு, கையில என்ன பண்றாரு. இதெல்லாம் பார்த்து இருப்பீங்க. மறுபடியும் சொல்றேன். என்ன சொல்றாரு? கையில ஒன்னு இருக்கு. இது உயிராய் இருக்கா? செத்துப் போச்சா? இந்த பட்டாம்பூச்சி அப்படின்னு கேக்குறாரு. அப்ப அந்த முனிவர் என்ன சொல்றாரு? உயிரோட இருந்துச்சுன்னா இது உயிரோட இருக்குனு சொன்னா கையில நசுக்கி அந்த பட்டாம்பூச்சியை கொன்னுடுவாங்க. 

இல்ல பட்டாம்பூச்சியை நசுக்கி கொன்னுடுவாங்க தெரிஞ்சுகிட்டு, இவர் என்ன பண்றாரு, அது உயிரோடு இருப்பதும், செத்துப் போவதும் யாரு கையில இருக்கு? 

உன் கையில தான் இருக்கு. நீங்க வாழ்க்கையை வாழ்வதற்கும், இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் ரசிப்பதற்கும், இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேரும், அவரவர் கையில தான் இருக்கு அப்படிங்கிற நிகழ்வோட இந்த ஆன்மீகமும் இந்த ஜோதிடமும் ஒரே ஒரு நிகழ்வு அதை சொல்லிடனும்.

ஏன்னா, இது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லுவார். ரஜினிகாந்த் சொன்னார் என்ன பண்றாரு, ஒரு பயணத்துல சின்ன பையன் கோட்சூட் போட்டு ஒருத்தர் உட்கார்ந்து இருக்காரு. வயதானவர் ஒருத்தர் வந்து உட்கார்ந்துட்டு வர்றார். இந்த சின்ன பையன் என்ன பண்றாரு, இந்த ஆன்மீகப்புத்தகத்தை படிச்சிட்டு வராரு. பக்கத்துல அந்த வயசானவரு என்ன சொல்றாரு. 

இது ஒரு ரஜினிகாந்த் சொன்னது தான் நான் சொல்லல. அது வேற என்கிட்ட சண்டைக்கு வந்துறாதீங்க. 

என்ன பண்றாரு? என்னப்பா இந்த காலத்துல போயி சமூகம்,  சோசியல், கடவுள், தெய்வம்,  சாமி, கிரகங்கள் அப்படின்னு இப்படி சுத்திக்கிட்டு இருக்க. இதெல்லாம் போய் படிக்கிறியேப்பா அப்படின்னு அந்த சின்ன பையன் கிட்ட போய் கேட்கிறார்.

நான் யாரு தெரியுமா?  நான் சயின்டிஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறார். சரி. இந்த ரெண்டுபேரும், பேச்சு முடிஞ்சிட்டு, என்ன பண்றாங்க,  இந்த பயணத்தில் இருந்து இறங்கும்போது, நீ யாருன்னு சொல்லவே இல்லையே,  அப்படின்னு இந்த சின்ன பையனை கேட்கிறார் இந்த வயதானவர். நீ யாருப்பா?  அப்படின்னு கேக்குறாரு.

அவரு சொல்றாரு நான்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று சொல்றாரு.

அப்போ வயதானவர் சொன்னாரு, நீங்க எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்க. போறதுக்கு முன்னாடி என்ன சொல்றாரு,  என் ஆஃபீஸ் இங்க தான் இருக்கு, நீ வந்து பாருன்னு சொல்லிட்டு போறாரு.

கடைசி பேச்சு முடியும்போது என்ன சொல்றாரு, உங்க ஆபிஸ்க்கு நான் வரணும். எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் கொடுங்க அப்படின்னு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கிட்ட கேக்குறாரு. அதுக்கு என்ன? வாங்க அப்படின்னு உடனே இவங்க ரெண்டு பேரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரோட ஆபீஸ்க்கு இவங்க ரெண்டு பேரும் போறாங்க.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆபீஸ் போன உடனே எல்லாம்,  இதெல்லாம், இப்படி, அப்படி என்று சொல்லி காமிக்கும்போது ஒரு கதவை திறக்கிறார். அங்க பார்த்தீங்கன்னா, ஏதோ ரவுண்டு ரவுண்டா ரவுண்டு ரவுண்டா சுத்திக்கிட்டு இருக்கு. 

அப்ப சுத்தும்போது என்னங்க சோலார் சிஸ்டம் இப்படி சுத்திகிட்டு இருக்கு? அப்படிங்கிறாரு. 

அதெல்லாம் இல்ல, அங்க நான் வந்தேன் ஒருநாள், பார்த்தேன் எப்படி? நான் வந்தேன் ஒருநாள்,  பார்த்தேன், இதெல்லாம் சுத்திக்கிட்டு இருந்துச்சு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொல்றாரு, நான் அந்த கதவை தொறந்துட்டு உள்ளார வந்தேன். இதெல்லாம் ஒரு நாள் சுத்திக்கிட்டு இருக்குன்னு

அந்த வயதானவர் கிட்ட சொல்றாரு.

சும்மா விளையாடாதே ஐயா,  இதெல்லாம் நீ ஏதோ பண்ணி வச்சிருக்க, அதனால் தான் அந்த சோலார் சிஸ்டம் எல்லாம் இப்படி சுத்திகிட்டே இருக்கு,  சூரியன், சந்திரன், செவ்வாய்,  சுக்கிரன், சனி, ராகு, கேது அப்படின்னு சுத்திக்கிட்டு இருக்கு. 

இந்த கிரகங்களுக்கு மேல நட்சத்திரங்கள் முழுமையாக ஆக்குபை பண்ணுது. நட்சத்திரங்களோட ஈர்ப்புத்தன்மையில் தான் இந்த கிரகங்களும் வந்து செயல்படும் தான் உண்மை. அது வந்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் பொழுது உண்மை தெரியும். நான் இன்னைக்கு பேசும் பொழுது, அது எப்படி இதெல்லாம் அப்படின்னு சொல்லுவீங்க. கிரகங்களை விட ஆயிரம் மடங்கு நட்சத்திரங்கள் வலிமையானது.

திருவாதிரை நட்சத்திரமா, 

மக நட்சத்திரமா, மூல நட்சத்திரமா அப்படின்னு நட்சத்திரங்களை தானே சொல்றோம். கிரகங்களோட பெயரை எங்கேயாச்சும் சொல்றமா பாருங்க.

முதல்ல சொல்றது வந்து  நட்சத்திரங்கள். 

அப்ப என்ன பண்றாரு? இந்த சின்ன பையன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கிட்ட என்ன சொல்றாரு, டோர தொறந்த உடனே, என்னையா இது,  எப்படி இதெல்லாம்? 

சும்மா சொல்லாத, நீ எதையோ செஞ்சு வெச்சிருக்க, அதான் சுத்திகிட்டு இருக்கு.

அப்பதான் சொல்றாரு, நீங்க என்ன சொன்னீங்கன்னு அவர் சொல்லாம, என்ன சொல்றாரு,  படைக்கப்பட்ட பொருள் ஒன்று இங்கு இருந்தால்,  படைக்கப்பட்டவன் இருந்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி. படைக்கப்பட்ட பொருள் ஒன்று இங்கு இருக்கு இல்ல. அப்ப படைத்தவன் ஒருத்தன் இருக்கணுமில்ல. 

யாரு? கடவுள். 

அதான் கடவுள். ஆனால் அந்த கடவுளும், இந்த கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுதான்,  சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நானும் இருப்பேன்னு  திருவிளையாடல் 

ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தடவை சொல்லி,  இந்த ஆன்மீக சங்கமத்திற்கு என்னை அழைத்து பேச வைத்த Behind woods சேனல் நண்பர்கள் அத்தனை பேருக்கும்,  நண்பர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி. 

என்னுடைய சிறு உரையை இவ்வளவு நேரம் பொறுமை காத்து, என்னுடைய அத்தனை பெரிய பெரிய நபர்கள்,   நண்பர்கள் எல்லாம் இருக்கிறாங்க. அத்தனை பேருக்கும் நன்றி. முதல்முறையாக பேசி இருக்கேன். எப்படி முதல் முறையாக இப்படி ஒரு பேச்சை இன்னைக்கு தான் பேசி இருக்கேன். அது வந்து எப்படி பேசினேன் என்று தெரியவில்லை. ரொம்ப சந்தோஷம். இந்த உரையை உங்களை எல்லாம் நான் கேட்டு கொண்டு என்னுடைய சிறு உரையை இந்த நேரத்துல முடிக்கிறேன். ரொம்ப சந்தோஷம்.

வீடியோ லிங்க்: 

https://youtu.be/g7dbXaGTEDQ?si=VnPnStcMKpD1yPFh

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments