ஜோதிடத்தில் ஒரு மனிதனின் மரணத்தை, முக்தி, மோட்சத்தை, கணிக்க முடியுமா? இது பற்றி ALP ஜோதிடம் சொல்வது.....
வணக்கம்.
நான் சாந்தகுமார் ALP ஜோதிடர்.
ஜோதிடம் அப்படிங்கறது ஒரு வாழ்வதற்கான கலை. ஆனால் பல நேரங்களில் எங்க கிட்ட கேள்விகள் கேட்கிறார்கள்.
ஏன் மரணத்தை நீங்க துல்லியமாக சொல்ல முடியாதா? அது உங்க ALP -ல் சாத்தியமா, அப்படிங்கற கேள்விகள் எல்லாம் வருது. சொல்ல முடியாதுன்றது இல்ல விஷயம். ஆனால் சொல்லக் கூடாது என்று ஒரு அடிப்படை இருக்கு. அது தான் பேசுறோம்.
ஜோதிடம் பார்க்க வேண்டியதன் நோக்கம்:
ஜோதிடம் பயன்படுத்த வேண்டியது வாழ்வியலுக்காக, வாழும்போது என்னசெய்யறோம், என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாது, அப்படிங்கிற ஒரு வழிகாட்டுதல் தான் ஜோதிடமே தவிர, மரணத்துக்கு அப்புறம் என்ன அப்படிங்கற நிகழ்வுக்கு போறதுக்கான விஷயம் இல்லை.
மரணத்தை தீர்மானிப்பது யார்?
மரணம் அப்படிங்கற ஒரு விஷயம் இரண்டு பேர் மட்டுமே தீர்மானிக்கிறாங்க. ஒண்ணு, அந்த ஜாதகருடைய ஆத்மா, இன்னொண்னு கடவுள். இந்த ரெண்டு பேர் மட்டும்தான் ஒரு மரணத்தை தீர்மானிக்க கூடிய அதிகாரம் பெற்றவர்கள்.
மத்தவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா, நான் சொல்லிடுவேன் மரணத்தை, நான் சொன்னால் அப்படியே பலிக்கும் அப்படிம்பாங்க. உங்க பலிதம் எல்லாம் எல்லா இடத்திலும் நடக்கட்டும், ஆனா மரணம்ங்கிற விஷயத்துல நீங்க தோத்து போறது தான் நல்லதுன்னு சொல்லுவேன்.
வரலாற்று உதாரணங்கள்:
இப்ப மரணம் இதா வந்து ரெண்டு பேர் தான் தீர்மானிக்கிறாங்க என்பதற்கு உதாரணங்கள் ஏதாவது சொல்ல முடியுமான்னா, நான் மகாபாரதத்தில் இருந்து இரண்டு கேரக்டர் எடுத்துக்கிறேன்.
ஒண்ணு பீஷ்மர், மரணப் படுக்கையில் இருக்கார். அர்ஜுனன் விட்ட அத்தனை அம்புகளும் அவர் உடம்பை சல்லடை மாதிரி தொலைச்சிடுச்சு. எல்லா ரத்தமும் வெளியில் வந்தாச்சு. தாகம் எடுக்குது, தண்ணீர் குடிச்சா அந்த தண்ணி கூட உள்ள தங்க முடியல. அவ்வளவு மரண அவஸ்தை அப்படின்னு சொல்லுவாங்க. அந்த தருவாயிலும் அவர் மரணம் சம்பவிக்கவில்லை. அவர் அந்த உயிரை பிடித்து வைத்திருந்தார்னு சொல்லுவாங்க. அவர் நினைக்கும் போது தான் அந்த உயிர் பிரியணும் அப்படிங்கற அமைப்பு அவருக்கு இருக்கு.
இந்த மாதிரி நமக்கு பீஷ்மரை பார்க்கணும்னு அவசியம் இல்லை. ஏன்னா பல பெரியவங்க குத்துயிரும், கொலை உயிருமாக இருந்தும் சட்டென போக மாட்டாங்க. ஏதோ ஒரு ஏக்கத்துக்காக இங்க இருந்து கிட்டே இருப்பாங்க. அது முடிஞ்ச உடனே உயிர் பிரிவதையும் நம்ம பாத்திருப்போம். www.alpastrology.org
அப்போ அந்த ஜீவன் முடிவு பண்ணனும், போலாமா வேணாமான்னு, மரணத்திற்கு ஒப்பான சம்பவங்கள்னு சொல்லலாமே தவிர, மரணத்தை சொல்லக்கூடிய தன்மைகள் ஜோதிடருக்கு அதிகாரம் யாரும் கொடுக்கல.
கர்ணனின் இறுதிக் காலம்:
கர்ணனை எடுத்துக்குவோம் கர்ணனுக்கும் இதே மாதிரி குத்துயிர், குலைஉயிருமா இருக்காரு. அவர் பண்ணிய புண்ணியங்கள், அவரை காப்பாத்துது உயிர் போக விடாமல். கடவுள் வந்து, அவர் அந்த புண்ணியத்துல இருந்து ரிலீவ் பண்ணி, அவருக்கு அந்த உயிரை பிரிவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்கிறார்.
இந்த கதையில் இருந்து என்ன தெரியுது. அப்ப ரெண்டு பேர் தீர்மானிக்கிறாங்க. ஒன்னு வந்து அந்த ஆத்மா முடிவு பண்ணனும், தன் உயிரை விடனும்கிறத.
இன்னொன்னு கடவுள், இல்ல இதை முடித்து ஆகணும் அப்படின்னு கடவுள் முடிவு பண்றார். இது ரெண்டுக்கும் நடுவுல ஜோதிடர் யாரு, எந்த ஜோதிடருக்கும், எந்த கொம்பனுக்கும் அதிகாரம் இல்லை.
மரணம் பற்றிய ஆய்வு, அவசியமா?
மரணம் என்பது அந்த மாதிரி இல்லாத போது, அதை நோக்கி ஆய்வு செய்றது வேண்டியதில்லை.
முக்தி மற்றும் மோட்சம்:
இன்னொன்னு முக்தி இருக்கா, மோட்சம் இருக்கா அப்படின்னு எல்லாம் கேட்பாங்க. இந்த முக்தி மோட்சம் அப்படின்னு பார்த்தீங்கன்னா, மரணத்திற்கு அப்புறம் நடக்குற நிகழ்வை பத்தின பேச்சு. இப்ப இது வந்து ஒரு மேஜிக்கல் ஆன, ஒரு மயக்க நிலை தான். அது தெரியாத விஷயத்தை டிக்ளர் பண்றது, இப்படித்தான் நடக்குது, அப்படித்தான் நடக்கும்னு சொல்றது வந்து, ஒரு அறிவு சார்ந்த விஷயம் இல்லை.
உங்களுக்கு முக்தியோ அல்லது மோட்சமோ பத்தி ஏதாவது புரிதல் இருக்குனா, அதை நோக்கி போகணும்னு நினைக்கிறீங்கனா, இன்னைக்கு என்ன செய்கிறீங்க என்பதற்கு ஜோதிடம் பயன்படும். பிரதிபலனாக மனசுல வச்சுக்கிட்டு அதை நோக்கி பயணம் பண்ணீங்கன்னா, அது கிடைச்சது கிடைக்கலைன்னு டிக்ளர் பண்ண முடியாது.
அறுதியிட்டு கூறக்கூடிய ஒரு நிலை இல்லாத போது அந்த கேள்விகளை கேட்கக் கூடாது. நீங்க எதை தேடறீர்களோ, அது உங்களை விட்டு தள்ளிப் போகும்னு சொல்லுவாங்க. அது தானா வர வேண்டிய நேரத்தில் வரவேண்டிய விஷயம். அத நீங்க தேடி போகாதீங்க அப்படிங்கறத தான் முக்தி மோட்சத்துக்கான நிகழ்வுகளாக சொல்றோம்.
வாங்க, ALP ஜோதிடம் படிங்க.
வாழ்க்கையை, வாழ்வதற்காகத்தான் ஜோதிடம்.
உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில் .
நன்றி.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment