ALP ஜோதிடம் பற்றிய சிறப்பு கலந்துரையாடல்

 திரு . ராஜேஷ்  அவர்கள் :

      நக்கீரனின் ஓம் சரவணபவ நேயர்களுக்கு வணக்கம்.

இன்னைக்கு நாம பார்க்க போறது ஒரு ஜோதிடத்தை பற்றி. புதுமையான வகையில் கணிக்கின்ற ஜோதிடம். அட்சய லக்ன பத்ததி பொதுவுடைமூர்த்தி.

ஏற்கனவே,  ஒரு ஆண்டுக்கு முன்பாக அவரை பேட்டி எடுத்தோம். அதற்கு அப்புறம் கொரோனா காலம் வந்ததுனால தொடர்ந்து பேட்டி

 காண முடியவில்லை. இதை பற்றி நிறைய விவாதங்கள்,  எதிர்வாதங்கள் எல்லாம் வந்துச்சு. என்ன அப்படின்னா,  என்ன பிளானட்ஸ் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கு என்கிறீர்களே. அதாவது வந்து சின்ன பிள்ளையில் நாம் கடக லக்னம் என்று சொன்னால் அந்த கடக லக்னத்தில் பிறந்து அதற்குரிய லக்னங்கள் எங்கெங்கு வருதோ, அதற்குரியதை தானே பார்க்க வேண்டும். நீங்க என்ன கடக லக்னம் வச்சுக்கிட்டு இத்தனை வருஷம், 75 வயசானா மேஷ லக்னம் சொல்றீங்களே, அது எப்படி கரெக்ட் ஆக வரும்? அப்ப இந்த பிளானட் எல்லாம் அங்க தானே உட்கார்ந்திருக்கு. இப்படி எல்லாம் என்கிட்ட கேள்விகள் கேட்டார்கள். என்ன அவர போய் பேட்டி எடுத்து வந்தீர்கள் என்று சொன்னார்கள். அப்புறம் நான் சொன்னேன் அவர்கிட்ட,  அவர்கிட்ட கேட்டேன் மூர்த்தி கிட்ட கேட்டேன், என்னங்க சார் நீங்க இந்த மாதிரி ஆகாயத்தில் இருந்து ஆகாஷ் ரெக்கார்ட் மாதிரி எல்லாத்தையும் வர வைக்கிறீங்களா அப்படின்னு கேட்டேன். அவர் அப்படித்தான் சொல்றாரு. ஏதோ ஒரு கடவுள் பக்தியில் அவர். சொல்றாரு. அது கடவுள் பக்தி என்பவர்கள் நம்பி கொள்ளலாம். இல்லை என்றால் Secondary mystic Knowledge என்று சொல்வார்கள். கண்ணதாசன் சாருக்கெல்லாம் இருந்துச்சு. கம்பருக்கு அதான் இருந்துச்சு. அது மாதிரி ஏதோ ஒரு ஆஸ்ட்ரல் பாடியிலிருந்து வானத்திலிருந்து இருக்கக்கூடிய வைப்ரேஷன் இழுத்து அவங்க செய்யறாங்க அப்படின்னு சொல்லலாம்.

ஆனா ஒன்றே ஒன்று மட்டும் என்னுடைய ஆய்வுல நான் கண்டுபிடிச்சது எதுவுமே புதுமையாக புதுசாக நாம கண்டுபிடிக்கல. ஏற்கனவே இருந்ததை நம்ம திருப்பி சொல்றோம் அப்படின்னு தான் சொல்றாங்க. பீத்தோவன், மார்க், முசார்டு இவர்கள் எல்லாம் மியூசிக்கல் எல்லாம் வானத்திலிருந்து மியூசிக் இருக்கு, அதை எடுத்து அவங்க சொல்றாங்க அப்படின்னு சொல்றாங்க. அந்த மாதிரி தான் இவரும் சொல்றாரு.

இப்ப எல்லாரும் ஜோசியம் பொய், ராகுகாலம் பொய்,  எமகண்டம் பொய் அப்படின்னு என்ன எது வேணும்னாலும் பேசலாம். என்ன விட ஜோசியத்தை பொய்யின்னு சொல்லக்கூடிய பேசக்கூடிய ஆள் கிடைக்காது. அருமையாக பேசுவேன். ஏன்னா எனக்கு ஜோதிடம் தெரிந்ததுனால்.

 என்ன பேசினாலும் அங்க போன உடனே ஜோதிடர்கிட்ட போன உடனே அக்குவேறா,    ஆணிவேராக நம்ம வண்டவாளத்தை எல்லாம் எடுத்து தண்டவாளத்தில் விட்டு விடுறாங்க. இது உண்மை.

அது நடக்குது, நடக்கல, எனக்கு நடக்கல, உனக்கு நடக்கல என்கிறார்கள்.

இதைத்தான் சமீபத்துல நோபல் பரிசு வாங்கினவங்க, என்ன சொல்றாங்க அப்படின்னா,  குவாண்டம் பிசிக்ஸ்ல டுவாலிட்டி அப்படின்னு சொல்றாங்க. இந்த மாசம் கண்டுபிடிச்ச கண்டுபிடிப்பு,  அடுத்த மாசம் வேற ரிசல்ட் கொடுக்குது. அதுக்கு அடுத்த மாசம் வேற ரிசல்ட் கொடுக்குது.

இப்படியே இந்த உலகத்துல நேற்று ஒரு செகண்டுக்கு முன்னால நடந்த உலகம் இப்ப இல்ல. மாறிக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஜோதிடம் ஏறக்குறைய என்னை பொருத்தவரையில சில விஷயங்கள் 100% சில விஷயங்கள் 70% இப்படி உண்மை நிலையை நான் பார்த்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நான் ஜோதிடத்தை படித்துக் கொண்டும், நிறைய பேர்களை பார்த்து கொண்டும் இருக்கிறேன். அப்படி வரும் போது பொதுவுடைமூர்த்தி கிட்ட மறுபடியும் கேட்டேன்.

இவர் என்னமோ சாப்ட்வேர் ஒன்னு பண்ணி அதுல ஒரு அஞ்சு ஆறு புத்தகம் போட்டு இருக்காரு. இதுல அவர் பாடம் வேற நடத்துறாரு. இதுல என்ன அப்படின்னா நான் அவர்கிட்ட கேட்டேன். என்னங்க இந்த மாதிரி எல்லாமே லேபர்லாம் போயிருச்சு, உழைப்பெல்லாம் போயிருச்சு.

எங்க சித்தப்பா இருந்தாரு மதுரையில. அவர் ஒரு கார் ரிப்பேர்னு போய் கொடுத்தா இந்த காரை எடுத்து சும்மா ஒரு இரண்டுகிலோமீட்டர் போயிட்டு திரும்பி வந்து பேப்பர் எடுத்து எல்லாத்தையும் எழுதி கொடுத்துடுவார். என்னென்ன ரிப்பேர், சில விஷயங்களை மட்டும் திறந்து பார்ப்பார். (பேனட்ட).

இதனால தான் ராஜா சார், முத்தையா செட்டியார் அவர்கள் ஏதாவது ஒரு ரிப்பேர் வண்டியில அப்படின்னா உடனே ஆல்பர்ட்ட கூப்பிடுங்க அப்படிம்பாங்க. ஆல்பர்ட் அவருடைய பெயர். மெஜீரா போர்ஸில் ஒர்க் பண்ணாரு. அவர கூப்பிட்ட உடனே பார்ப்பாரு. இவரே கார்ல எங்கேயாவது வெளியூர் போனா இவரை கூட்டிட்டு போவாரு. கார்ல போயி இரண்டு,மூணு, நாலு அஞ்சு கிலோ மீட்டர் போயிட்டு வந்த உடனே அப்படியே எழுதி கொடுத்துவிடுவாரு, என்னென்ன ரிப்பேர்னு எழுதி கொடுத்துருவார்.www.alpastrology.com

இப்படி இருந்த மூளையை நாம கம்ப்யூட்டர் வச்சு எல்லாமே எல்லா பார்ட்ஸையும் மாத்துங்க, மாத்துங்கன்னு கார்ல சொல்றாங்க. அதே மாதிரி தான் எல்லா தொழில்களிலும் இப்ப மூளைக்கு வேலை அதிகம் இல்லாமல் எல்லாமே விஞ்ஞான கருவிகள் கண்டுபிடிக்கிறாங்க.

அதே மாதிரி தான் அந்த மாதிரி தான் இதையும் ஆக்கிவிட்டார் என்று எனக்கு ரொம்ப வருத்தம். அந்த காலத்தில் எல்லாம் போகும்போது இப்படி ஜாதக கட்டத்தை பார்த்தவுடன் அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷத்துலயே சொல்லிடுவாங்க. அதே மாதிரி தான் இந்த கால்குலேட்டர். முந்தின காலத்தில் கணக்கு எல்லாம் மனசுலையே போடுவாங்க. இப்ப எதை எடுத்தாலும் நான் மூணா 12 ங்குறத கூட அவங்க பெருக்கிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. அதுகூட செல்போன்ல வந்துருச்சு கால்குலேட்டர். முன்னாடி கால்குலேட்டர் இருந்து தனியா விற்றது இப்ப செல்போனில் இருக்கிறது. இப்படி விஞ்ஞான யுகத்தில் நோக்கி மூளையை செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் இப்படி கெடுத்து விட்டீர்களே இளைஞர்களை என்று சொன்னேன். இருந்தாலும் காலம் மிக விரைவாக ஓடுவதால் உட்கார்ந்து பேனா எல்லாம் போட்டு தேவையில்லை. இதெல்லாம் திருப்பத் தேவையில்லை. பஞ்சாங்கத்தை எல்லாம் திருப்ப தேவையில்லை. சிலபேர் 100 வருட பஞ்சாங்கம் வச்சிருப்பாங்க. அதெல்லாம் எடுத்து பார்க்க தேவையில்லை. இத நாங்க இந்த மாதிரி லாக்கருதம் என்று நாங்க சொல்லுவோம் எக்கனாமிக்ஸ்ல எல்லாம்.

அப்படி பண்ணும்போது அந்த மாதிரி கணக்க போட்டு இவர் சொல்றாரு. அது என்ன என்று விவரமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

திரு. ராஜேஷ்  அவர்கள்:

    வணக்கம்,  பொதுவுடைமூர்த்தி சார். அது என்ன சார் இந்த மெத்தட் எல்லாரும் சொல்றாங்க. ஒருத்தர் கூடஎழுதி இருந்தாரு. எப்படிங்க கடக லக்னம், மீன லக்னம்னா அப்புறம் ஒரு 75 வயசு ஆகும் போது ரிஷப லக்னமாக மாறுகிறது என்கிறீர்கள், அப்ப அதே பிளானட் தான் இருக்கும் அப்படி இப்படின்னு நிறைய கேள்விகள். அந்த ஜோசியமே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. அதுக்குள்ளேயே ஒரு பகுத்தறிவை புகுத்தி இது எல்லாம் கேட்டாரு.

அப்புறம் நான் சொன்னேன். ஒரு விஞ்ஞானி ஒரு சமீபத்துல சொல்லியிருந்தார். பேர் சொல்ல விரும்பல. எல்லா கிரகங்களுமே நிறைய மாறிட்டு இருக்கு அப்படிங்கிறாங்க. திருக்கணிதம் கூட உங்களுக்கு தெரியும். வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் இரண்டு மூணு மாசம் வித்தியாசம் வரும். ஆனால் திருக்கணிதத்தை நிறைய பேரை ஃபாலோ பண்றாங்க. நானே திருக்கணிதத்தை தான் ஃபாலோ பண்றேன். ஏன்னா கரெக்டா நடக்குது திருக்கணிதம்.

அப்புறம் கோவில்களுக்கும் அதுக்கும் ஒரு டச் இருக்கு வாக்கிய பஞ்சாங்கத்துக்கும்.

இது எப்படி நீங்க கொண்டு வந்தீங்க? இந்த சாப்ட்வேர் பண்ணீங்க. இந்த சாப்ட்வேர் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதுக்கு எத்தனை வருஷம் எடுத்துக்கிட்டீங்க.

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள், ALP ஜோதிடத்தை  உருவாக்கியவர்.

    ஏழு வருஷம் சாப்ட்வேருக்கு மட்டும் எடுத்துக்கிட்டேன். அது ஒரு சாப்ட்வேர் மட்டும்தான் எடுத்துகிட்டேன்.

அதுக்கு முன்னாடி இது ஏன் நான் கொண்டு வரணும்னு அப்படி நினைச்சேன்னா ஒரு நாலு வருஷம் பார்த்தீங்கன்னா இந்த அப்பாவும் புள்ளையும் கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க.

இப்ப மேஷ லக்னம் ஒன்பதாம் அதிபதி யாருன்னு பார்த்தீங்கன்னா குருவா இருப்பாரு. அப்பா அப்படியே தூக்கிக் கொஞ்சுவாரு.

அதுவே ரிஷப லக்னம் போகும் போது ஒன்பதாம் அதிபதி சனியாக இருப்பதால், நான் சொல்வதை கேட்கிறயா, கேட்க மாட்டியா அப்படிம்பாரு.

அதுவே மிதுன லக்னமாக மாறும்போது ஒன்பதாம் அதிபதி சனி பகவான். உனக்கும் எனக்கும், நீதிபதியும் வக்கீலுக்கும், எப்படி போராட்டம் நடக்குது. அப்படி போராட்டம் நடக்கும்.

அதுவே,  கடக லக்னம் ஒன்பதாம் அதிபதி குரு பகவான் அப்பா. அப்பாவை உச்சமடைய வைப்பார். எப்படி? கடக லக்னத்தின் ஒன்பதாம் அதிபதி யாரு? குரு பகவான். லக்னத்தில் உச்சம் ஆகும்போது பெரிய யோகத்தை கொடுத்துருது. அப்பாவால் பிள்ளைக்கு யோகம், பிள்ளையால்  அப்பாவுக்கு யோகம்.

இது தான் ஜாதகம். அப்ப நாலு வருஷம் முன்னாடி நண்பனாக இருப்பார். நாலு வருஷம் கழிச்சு எதிரியாக மாறுவார்.

எட்டு வருஷம் கழிச்சு எட்டு வருஷம் நான் ரொம்ப அவ்வளவு செஞ்சேன்ம்பாரு.

இப்ப வந்து ஒன்னுமில்ல.

மேஷ லக்னத்திற்கு ஏழாம் வீடு சுக்கிரனாக இருப்பார். அடுத்தது ரிஷப லக்னத்திற்கு ஏழாம் வீடு செவ்வாயாக இருப்பார்.

மிதுன லக்னத்திற்கு ஏழாம் வீடு குரு வரும்போது நீயா நானா என்கின்ற போட்டி வரும். நீ செய்யறது சரியா, நான் செய்றது சரியா, புதனுக்கும் அறிவுக்கும், அனுபவத்திற்கும் அறிவிற்கும் உள்ள போட்டி.

மிதுனத்துக்கும், தனுசுக்கும் வரும்போது ஒரு போட்டி இருக்கும் பாருங்க. அப்பதான் உணர்ந்தேன், ஏதோ ஒரு விஷயம் இதுக்குள்ள இருக்கு.

அப்போ ஒவ்வொரு காலகட்டத்துக்கும், மேஷ லக்னத்திற்கு பாத்தீங்கன்னா,  அம்மாவ பார்த்தீங்கன்னா,  நாலாம் அதிபதி சந்திரனாக   வருவாங்க. என்ன பண்ணுவாங்க. பிறந்த உடனே வீட்டை காலி பண்ணும், மேஷ லக்னத்தில் பிறந்த அடுத்த நாலு வருஷத்துக்குள்ள வீட்டை காலி பண்ணனும்னு நினைப்பு வரும். அந்த இடத்தை விட்டு வித்துட்டு போகணும். நகரனும்னு நினைப்பாரு.

அப்ப இந்த மாதிரி நிகழ்வுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வருது அப்படிங்கிற போது தான் லக்னம் வளருகிறது. அதற்கு ஒரு நிகழ்வு இல்ல, ஆயிரம் நிகழ்வுகள் நம்ம பதிவு பண்ண முடியும்.www.alpastrology.org

திரு. ராஜேஷ் அவர்கள் :

  தசா புத்திகள் வரும்போது பிரிஞ்சிடுவாங்களே சார்.

திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்.

   இல்ல,  இல்ல,  இப்போ எவ்வளவு தசா புக்திகள் வந்தாலும் ஒரே லக்னமாக இருக்குன்னு வச்சுக்கோங்களேன்.

    உதாரணத்திற்கு,  இப்ப உதாரணமா மேஷ லக்னம் . மேஷ லக்னத்துக்கு.

மேலவாக்கத்தில் ஒரு கிளாஸ் நடந்துச்சு. அப்ப ஒரு பாரம்பரியமான ஒரு ஜோசியர். 40 வருட ஜோசியர். இங்க மைலாப்பூர்ல இருக்காரு. ஆனா என்னை நம்பி தான் கிளாஸ்ல வராரு. வந்தவர்.

அவருக்கு வயசு என்ன? 70 to 72.

40 வருட ஜோதிட அனுபவம்.

படிக்கிறாரு. நிறைய பிராக்டீஸ் பண்றாரு.

ஜாதகம் பார்த்துகிட்டு இருக்கிறவர்.

     எல்லாருமே என்னன்னா, நான் கண்டுபிடித்து நானே வச்சிருந்தா கரெக்ட்டு. நான் வச்சிருந்து உங்களுக்கு குடுக்குறேன்ல. அதை ஆய்வு பண்ணி பாக்கணும் இல்ல. அது சரியாக இருக்கிறதுனால தானே படிக்கிறாங்க. அப்ப என்ன பண்றாங்க.

     ஒரே ஒரு கேள்வி கேட்டேன். நான் அப்ப கிளாஸ் ரூம்ல 40 பேர் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஒரு கேள்வி நம்மகிட்ட கேட்க நினைக்கிறாரு அப்படின்னு சார் எனக்கு ஒரே ஒரு விஷயம். அவங்க கொடுக்கிற ஜாதகத்தை தான் நான் கிளாஸ்ல போடுவேன்.

   அப்ப நான் என்ன சொல்றேன். உங்க ஜாதகத்தை குடுங்க. நான் கிளாஸ்ல போடுறேன்.

போடுங்க சார் அப்படின்னார்.

உங்களுக்கு திருமணம் ஆன தேதி வருஷம் மாதம் இருக்கா,  இருக்கு. சரி.

என்ன தசா, ஒன்னும் வேணாம். உங்களுடைய ஜென்ம லக்னம் என்ன?

ரிஷப லக்னம். ரிஷப லக்னத்திற்கு சனி திசை சூரியன் புத்தியில கல்யாணம் நடந்து இருக்கு. சனி எங்க இருக்காரு ரிஷபத்துக்கு பக்கத்துல இருக்காரு.

ரிஷப லக்னத்திற்கு சனி யோகாதிபதியாச்சே.

ரிஷப லக்னத்திற்கு 9, 10 க்குரியவர் தர்மகர்மாதிபதி. அழகா பத்துல உக்காந்து இருக்காரு. கும்பத்துல சனி பகவான்  இருக்காரு. ஆனா அஷ்டமத்துல தனுசுவில் சூரிய பகவான் இருக்காரு. எப்படி சார் கல்யாணம் நடந்துச்சு.

    பத்தாம் அதிபதி திசை, எட்டாம் அதிபதி புத்தி, எப்படி சார் கல்யாணம் நடந்துச்சு அப்படின்னு கேட்டா, ஆமால்ல,  சரி, இப்ப நான் ஒரு நாலு கட்டம் தள்ளி போட்டுக்குறேன். இப்ப சிம்ம லக்னம்னு வச்சிக்கிறேன்.

   சிம்ம லக்னத்திற்கு ஏழாம் அதிபதி தசா நடக்குதா?

 ஆமா சார் கரெக்ட் தான் சார்.

அப்ப லக்ன அதிபதி புத்தி நடக்குதா? அஞ்சுல நடக்குதா? தெரிஞ்ச பொண்ணா? வேண்டிய பொண்ணா?

ஆமா சார், தெரிஞ்ச பொண்ணு,  முடிஞ்சு போச்சு.

வேற ஒண்ணுமே அங்க சொல்லலையே.

     நாங்க ரிஷபத்துக்கு பத்தாம் அதிபதி தொழில் பத்தி கேட்டிருந்தா கரெக்ட். தொழில் மாறுது அப்படின்னு கேட்டா கரெக்ட். தொழில்ல பிரச்சனை எல்லாம் கரெக்ட். ஆனா எந்த திசையில் எது நடக்க கூடாதோ,  அங்கதான் திருமணமே நடந்திருக்கு .

     அப்ப சிம்ம லக்னத்திற்கு ஏழாம் அதிபதி கும்பத்தில் இருந்து சனி திசை நடக்குது. அப்ப யோகத்தை செய்வாரு.

    சிம்ம லக்னத்துக்கு லக்னாதிபதி புத்தி அஞ்சுல நடக்குது. யோகமா பண்ணிபுட்டாரு. இதை யார் பண்ணி இருக்காங்கன்னா, நண்பனே தன்னுடைய தங்கச்சியை திருமணம் பண்ணி கொடுத்து இருக்கிறார். அது இல்லாம நாலாம் அதிபதி செவ்வாய்  சிம்ம லக்னத்திற்கு நாலாம் அதிபதி செவ்வாய் பகவான் 7ல் உட்கார்ந்து, அவர் வீடும் கட்டிக் கொடுத்து இருக்காரு. அவருடைய தங்கச்சிக்காக,  தன்னுடைய நண்பனே,  தன்னுடைய மச்சானுக்கு.

   அப்ப லக்னம் மாறும்போது எவ்வளவு ஆழமாக தெரியுது பாருங்க.ஒன்னுமில்ல.

 யூடுபில் ராசி துலாம் ராசி:

    இப்ப கடைசியா மிகப்பெரிய ஒரு ஜாதகம். பேர் மட்டும் சொல்லல. துலாம் லக்னத்தில  ஜெயிலுக்கு போயிருக்காரு. துலாம் லக்னம் ராகு தசை ஜெயிலுக்கு போயிருக்காரு. துலாம் லக்னம் எடுத்துக்க வேணாம் சார். இப்ப வந்து வயது சொன்னால் யாருன்னு தெரிஞ்சிடும்.

    மீன லக்னம் அஷ்டமத்துல ராகு பகவான். துலாம் வீட்ல ராகு பகவான் இருக்கு. அஷ்டமத்துல ராகு பகவான் இருக்கு. அஷ்டமத்துல ராகு தசை ஜெயிலுக்கு போவாரா, ஜெயிலுக்கு போய் தான் ஆகணும், இல்ல பிரச்சனை இருக்கணும்.

    YouTube ல, பேசி தான் அவரு பேச்சு பிரச்சனையாக மாறியது. அந்த YouTube என்ற வார்த்தையே துலாம் ராசி.

    அட்சய லக்ன பத்ததியில் இந்த எண் கணிதத்தில் நாங்க என்ன பண்றோம். ஒவ்வொரு பேருக்கும் ஒரு பலன்.  உதாரணமாக,  கார்த்தி என்ற  பெயர் வச்சுகிட்டா, அவர் மேஷ ராசி. அவர் ரிஷப லக்னம் நடக்கும்போது அவர் கடன் வாங்குவார்.

    இப்போ உதாரணமாக,  கன்னி லக்னத்திற்கு அஷ்டமாதிபதி பெயர் யாருன்னா, மேஷத்துல கார்த்திக் என்கிற பெயரில் இருக்கும். செட்டே ஆகாது சார். இப்ப நான் கன்னி லக்னமாயிருந்து கார்த்தி என்கிற பெயர் செட் ஆகாது.

    அப்போ இவர் என்ன பண்ணாரு. சார் துலாம் ராசி,  துலாம் லக்னத்தில் ராசியில ராகு இருந்தால் எப்படி சார் ஜெயிலுக்கு போக முடியும். அதுவே மீன லக்னமாக இருந்து அஷ்டமத்தில் ராகு ஜெயிலுக்கு கண்டிப்பாக போவாரு.

யாருவேணாலும் சொல்லுவாங்கல்ல சார்.

 ராகு திசை சந்திர புத்தியில் போய் இருக்கு. சந்திரன் எங்க இருக்குன்னா ஐந்தாம் அதிபதி ரெண்டுல உக்காந்து வாக்கு ஸ்தானத்தில் உட்கார்ந்து இருக்கு. மீனத்துக்கு இரண்டாம் வீட்டில் மேஷத்துல சந்திரன் இருக்கு. பேச்சாலே அவர் ஜெயிலுக்கு போயிருக்காரு.

இதுல வேற என்ன சார் நாங்க சொல்றோம்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

புரியுது புரியுது.

திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

ஒரு நிமிஷம் போட்டு பாருங்களேன்.

 நான் எங்க பயணிக்கிறேன். நான் புறப்பட்ட இடம் அங்க.  இப்ப நான் இங்க வர வேதாரணியத்துல இருந்து புறப்பட்டேன். நான் இன்னைக்கு சென்னையில் இருக்கேன். நாளைக்கு டெல்லியில் இருக்கலாம். அடுத்த நாள் லண்டன்ல இருக்கலாம். நான் எங்க வேணா இருக்கலாம். நான் எங்க இருக்கேன், அங்க தானே என்னுடைய வாழ்க்கை நடக்குது. அதைத்தான் நாங்க இந்த விஷயத்தை பதிவு பண்றோம்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

  இது எப்படி சாஃப்ட்வேர் எல்லாம் கண்டுபிடிச்சீங்க?

 Dr. சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்.

     இப்போ கையில எளிமையாக கொடுக்கணும் சார். இன்னைக்கு எல்லாருமே அவசர உலகத்துல இருக்காங்க. அப்போ வந்து நான் ஹாஸ்பிடல் போகும்போது ஒரு ECG ரிப்போட்ட நம்புறேன். ஒரு டாக்டர நம்ப மாட்டேன். இந்த டாக்டர் சொல்றது, இவர் பொய் சொல்றாரோ அப்படின்னு நினைப்பான். ஆனா அந்த ECG ரிப்போர்ட்ட எடுத்து காமிச்சா,  ஒரு பிளட் டெஸ்ட் காமிச்சா,  ஆமாங்க. கொலஸ்ட்ரால் இருக்கு. அது மாதிரி சொல்றோமில்ல, சுகர் இருக்கு அப்படின்னு சொல்றோம்ல. அப்புறம் ஏன் அந்த ரிப்போர்ட்ட ஏன் நான் வந்து அஸ்ட்ராலஜி சாப்ட்வேர்ல காமிக்க கூடாது அப்படின்னு நீங்க இதெல்லாம் உங்களுக்கு பிரச்சனை அப்படிங்கறது ஒரு ரிப்போர்ட்ட காமிக்கிறதுதான் என்னுடைய சாஃப்ட் வேர்.

     ஏன் உருவாக்கணும், எளிமையாக இருக்கணும் அப்படிங்கிறதால தான் உருவாக்கினேன். அது வந்து கணக்குபடி காமிச்சாதான் நம்புனாங்க சார் இன்னைக்கு. இல்லன்னா நம்ப மாட்டாங்க சார்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

   இந்த ஜோதிடத்தை அப்ப நீங்க வந்து ஓரளவு படிக்க ஆரம்பிச்சாலே பெரிய ஜோதிடர் மாதிரி ஈசியாக கால்குலேட் பண்ணிரலாம்ங்கறீங்க.

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

      ஆமா சார். எல்லாமே நம்பர்ஸ் தான். எண்களாக கொண்டு வந்தாச்சு சார். ஒன்னு, ரெண்டு,  மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு,  எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிஇரண்டுஎன்று கொண்டு வந்தாச்சு.

       12  கட்டத்துல எதெல்லாம் சிவப்பு இருக்கோ, உங்களுக்கு பிரச்சனை. சிவப்பு இருந்தால் பிரச்சனை. வேற ஒண்ணுமே சொல்லல சார். அதுல இப்ப உதாரணமாக நாலுல ரெட் இருந்துச்சுன்னா, அப்ப வீட்டுல பிரச்சனை. நாலுனா வீடு சார்.  ஏழு என்றால்  நண்பர்கள் கிட்ட, பத்து என்றால் தொழில் பிரச்சனை. வேற எதுவுமே சொல்லல. அதுல எங்கெங்க ரெட் கலராக இருக்குது. சிவப்பு ஒரு அழுத்தத்தை குறிக்கிறது  சார்.

   இது வந்து ஒன்னுமில்ல. நான் வந்து அமெரிக்க அதிபர் ஜாதகம் இரண்டுஉதாரண ஜாதகங்கள் போட்டுக்கிட்டோம். இதுக்கு முன்னாடி நடந்த ஜாதகம் பார்த்தீங்கன்னா,  இரண்டுபேரும் ஜாதகம் ரெண்டுமே ரெட்டா (Red) இருக்கும். அது எப்படின்னா பலத்த போட்டி அப்படின்னு நாம சொல்லுவோம்.

    அது மாதிரி உதாரணத்திற்கு நிறைய ஜாதகங்கள் நாங்க போட்டு பார்த்திருக்கோம். கடந்த கால நிகழ்வுகளை போய் பார்க்கும்போது சார் சரியா தவறா என்று தெரியும் சார். நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிகழ்வு போட்டு பாக்கலாம் இல்ல. எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிகழ்வு  பாக்கலாம் இல்ல.

    அந்த சாப்ட்வேர் உருவாக்கும்போதே கடந்த காலத்துக்கு போய் பார்க்கிற மாதிரி ஒரு சாப்ட்வேர் போட்டோம். இப்ப 2022-23 ன்னா 22 லிருந்து 20க்கு போங்க. 18 க்கு போங்க. 15 போங்க. 1992க்கு போங்க. 95 போங்க. இப்படி பின்னாடி போயி நடந்த நிகழ்வுகளை ஒப்பீடு பண்ணும்போது அழகாக புரியுது அப்படிங்கிறதொட்டுதான் இந்த சாப்ட்வேரை எளிமையாக்கினேன். கண்ணுக்கு முன்னாடி காமிக்கும்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

    ரொம்ப கஷ்டம் சார் அது. Calculation. சாப்ட்வேர். உங்க புக் பார்த்தேன். எனக்கே தலை சுற்றுகிறது. இப்ப என்ன கிளாஸ் இருக்கா. வகுப்பு எடுக்கறீங்களா? எப்படி? கிளாஸ் எங்க வைக்கிறீங்க?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

    கிளாஸ் ஜூம் ல தான் நடத்துறேன் சார். ஆன்லைன்ல நடத்துறேன்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

  இந்த ஜூன்ல இருந்தா போன ஜூன்ல இருந்தா.

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

  இல்ல சார். 2016 ல இருந்து போயிட்டு இருக்கு சார்.

திரு.ராஜேஷ் அவர்கள் :

  16ல இருந்தேவா. எத்தனை ஸ்டூடண்ட்ஸ் இதுவரைக்கும் படிச்சிருக்காங்க.

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

   ஒரு 8000 பேர் படிச்சிருக்காங்க.

திரு. ராஜேஷ் அவர்கள் :

    8000 பேரா வெளிய வந்துட்டாங்களா.

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

    வெளியில வந்துட்டாங்க.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

   கோர்ஸ் கிளைம் பண்ண காலம் என்ன?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

  15 நாட்கள் கிளாஸ் சார். அது 20 நாள் வரையும் நடத்துவோம்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

   20 நாள்ல எல்லாம் தெரிஞ்சுக்கிறாங்களா?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

  தெரிஞ்சுக்கலாம் சார்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

  என்ன சார் இது?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

    இப்ப ஒரு புத்தகத்தை படிக்கிறதை விட, அந்த புத்தகத்துல இதுதான்னு ஒரு படத்த, படம் எடுக்கிறது ஒரு வருஷம்,  இரண்டு வருஷம் ஆகும் சார். ஆனா படத்தோட கரு இதுதான் அப்படின்னு நீங்க இரண்டுமணி நேரத்துல நம்ம கதை சொல்லி முடித்து விடுகிறோம். ஒரு மணி நேரத்திலேயே அந்த கதையை வந்து படத்துல காமிச்சிர்றோம். அந்த மாதிரி தான் சார் எதெல்லாம் தேவையோ அதை நாங்க என்ன பண்றோம், இதெல்லாம் மட்டும் முக்கியம்,  இதை மட்டும் நீங்க படிச்சாலே,  பேசிக்கா வந்து நம்ம வந்து ஜோதிடத்த புரிஞ்சுக்க முடியும்.

  இல்ல, நான் ஆய்வா பண்றேன் அப்படின்னா 30 நாள் படிக்கணும் சார்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

  முப்பது நாளா.  நாளெல்லாம் வந்தா 30 நாள்.

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

  கண்டிப்பாக சார்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

   அப்படி படித்தால் தான் சார் அதுல என்ன நிகழ்வு,  என்னென்ன எனக்கு தேவை அப்படிங்கறத உணர முடியும். அதுக்கு தான் நாங்க படிக்க சொல்றோம். இந்த ஆய்வு அப்படித்தான் சார் பண்ணேன்.  ஏன் ஆய்வு பண்ணேன், ஏன் சொல்லிக் கொடுக்கிறேன்னா என் ஆய்வ நீங்க நிரூபிக்கணும், நான் நிரூபிக்கணுமில்ல, அப்ப ஜோதிடத்தை போயி நான் சொன்னாதானே புரியும். அப்ப ஜோதிடத்தை படிச்சா தானே புரியும். இல்லன்னா எப்படி சார் படிப்பாங்க இவ்வளவு பேரும். படிச்சதுக்கு காரணமே சரியாக இருக்கிறதுனால தானே படிக்கிறாங்க.

திரு. ராஜேஷ் அவர்கள் :

    ஒரு கிளாஸிலேயே தெரிஞ்சு போயிருமே ஒன்னும் இல்லன்னு.

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

  வரவே மாட்டாங்களே சார்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

   வர மாட்டாங்க.

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

   இன்னைக்கு மட்டும் ஒரு பேச்சில் 225 பேர் படிக்கிறாங்க. 200 பேர் 220 பேர்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

  மொத்தம் எத்தனை பேட்ச்.

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் :

   இப்ப வந்து இந்த இரண்டுவருஷத்துல மட்டும் 22 பேட்ச் போயிருக்கு சார்.

  22 பேட்ச் போயிருக்கு.

  இப்ப கரண்ட்ல இருக்கிறது ரெண்டு.

  இரண்டுபேட்ச்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

  இரண்டுபேட்ச்னா எவ்வளவு?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

  இரண்டுபேட்ச் 350 பேர் படிக்கிறாங்க.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

  350 பேரா. என்னங்க பள்ளிக்கூடம் மாதிரி இருக்கு.

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

  ஆமா சார். அதான் காலையிலேயே நாலரை மணிக்கு சாரு கிளாஸ்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

    என்ன 4.30 யா? என்ன சார் இது?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

      ஆமாம் சார். இது ஆமா ஒரு ஜோசியர் வந்து எப்பவுமே விடியற்காலை எந்திரிக்கணும். பிரம்ம முகூர்த்தத்தில் எந்திரிக்கணும்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

  ஆமா வீட்ல இருந்ததா?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

  ஆமா ஆன்லைன்ல.

  ஆன்லைன்ல ஜூம்ல. வீட்ல இருந்தே. குளிக்க வேண்டாம் ஒன்னு வேண்டாம்.

 

  குளிக்கிறவங்க குளிக்கலாம் சார். என்னன்னா இது ஒரு ஜோதிடர் அப்படின்னா விடியற்காலை எந்திரிக்கணும் சார். பிரம்ம முகூர்த்தம் என்பது ஜோதிடத்தில் சொல்றாங்க இல்ல. ஃபர்ஸ்ட் ஜோதிடம் நாலரை மணிக்கு தான் சார் ஜாதகமே பார்ப்பேன். 4:30-ல இருந்து 6:30 மணி வரைக்கும் ஜாதகம் பார்ப்பேன். 4:30 மணியிலிருந்து 6 மணிக்கு கிளாஸ். அதுக்கப்புறம் பார்க்க மாட்டேன்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

   என்ன கால பூஜை மாதிரி இருக்கு. நியூ இயர் பூஜை மாதிரி இருக்கு.

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

    எப்பவுமே அப்படித்தான் சார். அதுக்கப்புறம் பாக்குறது எல்லாம் பார்க்கலாம் சார். ஆனால் கணக்கு முறைகள் எல்லாம் சொல்லலாமே தவிர.

   இப்ப அந்த கிளாஸ் முடிஞ்சுருச்சுன்னா ஏழரைக்கு நான் பார்க்க முடியாது. கிளாஸ பார்க்க முடியாது.

    பார்க்க முடியாது. 4:30-ல இருந்து 6:30 மணி வரைக்கும் தான் நேரடியா நடத்துவது தான் அந்த கிளாஸ்.

   சரி, சரி. ரெக்கார்டு கிடையாது.

    நேரடியாக நடக்கிறது. நான் மட்டும் இல்ல சார் அது 20 பேர் இருக்காங்க சார். 20 பேரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக் கொடுத்துட்டே இருப்பாங்க. அந்த மாதிரி ஒரு ரெண்டரை மணி நேரம் 4:30-ல இருந்து 6:30 மணி வரைக்கும் கிளாஸ். 6:30-ல இருந்து ஏழு மணி வரைக்கும் கேள்வி நேரம். பொதுவான கேள்வி பதிலாக நாங்க கொண்டு வந்து இருக்கோம் சார். அத பத்தி நிறைய விஷயங்கள் இருக்கு.

    இப்ப நான் வந்து இதுல காமர்ஸ் படிக்கும்போதெல்லாம் சொல்லுவாங்க. இப்படி போட்டா அதும்பாங்க. நான் பார்த்து இருக்கேன். அந்த மாதிரி போடணும். ஒரு சூத்திரம்னு சொல்லுவாங்க இல்ல. அந்த சூத்திரம் தான்.

    அந்த மாதிரி என்னன்னா ஐந்து விதிமுறைகள் தான் பயன்படுத்துவோம். முதல்ல நாங்க வார்த்தைகளை கவனிக்கணும்னு சொல்லுவோம்.  அந்த வார்த்தைகளை கவனிக்கும்பொழுது தான் ஃபர்ஸ்ட் ஒரு ஜோதிடர் அப்படின்னா நம்மளுடைய எண்ணங்கள் எப்படி கவனிக்கறோமோ அப்பதான் வாழ்க்கையும், வார்த்தைகளையும் கவனிக்கணும். பேசுற வார்த்தைகள் எப்படி அப்படிங்கறத கவனிக்கணும். அதே மாதிரி நாலரை மணிக்கு 4.32 to 4.41 உள்ள வரணும். அதுக்கு பிறகு யாரு வந்தாலும் மேக்ஸிமம் அலோ கிடையாது. அது நானாக இருந்தாலும் அங்க அலோ கிடையாது. அப்படி தான் இந்த ஒவ்வொரு ஒழுக்க முறைகளையும்,  ஒழுக்கம் இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமாக விதிமுறைகளை வந்து கொண்டு வந்து அந்த சூத்திரங்களை வாய்பாடுகளை இந்தந்த வாய்ப்பாடுகளுக்கு மட்டும் இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்னு சொல்லி ஒரு பொதுவான மக்களுக்கு படிச்சாங்கன்னா எவ்வளவு பயன்படும் அப்படிங்கறத நான் சொல்லிக் கொடுத்து இருக்கேன்.

 திரு. ராஜேஷ்  அவர்கள் :

    நீங்க ஜோதிடம் பார்த்ததுல வந்து ரொம்ப நல்ல அருமையான பலன் பெற்றவர்கள் யாராவது இருக்காங்களா?

    இருக்காங்க சார். நிறைய பேர். இப்ப கிளாஸ் பத்தி பேசும்போது பிண்ணனி பாடகர் பிரசன்னா அப்படிங்கற ஒருத்தரு அவர் வந்து ஏதோ வர்றதா சொன்னாங்களே,  வந்திருக்காங்களா, 

 வந்திருக்காரா ?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

வந்திருக்கிறார்.

 திரு. ராஜேஷ்  அவர்கள் :

    வரப்போறாரா,  வந்துட்டாரா?

Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

 வரப்போறார்.

திரு. ராஜேஷ்  அவர்கள் :

    ALP  டீச்சர்ஸ் எத்தனை பேரு இருக்காங்க?

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

   20 பேரு.

 திரு. ராஜேஷ்  அவர்கள் :

  சர்வீஸ் எவ்வளவு?

 Dr . சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்:

    அதுல ஒருத்தர் வந்து பாத்தீங்கன்னா 20 வருஷம் 22 வருஷம் 32 வருஷம்.

   எது ஜோதிடத்தில் இல்ல,  உங்ககிட்ட வந்து சர்வீஸ்.

   என்கிட்ட வந்து ஒரு ஏழு வருஷம் ஆகுது சார்.

   இது முதல்ல எப்ப கண்டுபிடிச்சீங்க? ஏழு வருஷத்துக்கு முன்னாடியா?

   2013 லயே கண்டுபிடிச்சிட்டேன். 10 வருஷத்துக்கு முன்னாடி முழுமையாக வந்தது. 2013 லிருந்து வந்தது.

   சரி சரி. அது எப்படி சார் புக்கு போட்டீங்க. இவ்வளவு ரொம்ப கஷ்டமாக இருக்கு. என்னால தொடர்ந்து படிக்கவே முடியல.

   அது எனக்கு இந்த மக்களுக்கு எதெல்லாம் தேவையோ அதை மட்டும் எழுதனும்னு சார் எழுத ஆரம்பிச்சது. அப்பயுமே நான் என்ன பண்ணனும்னா நம்மல அந்த புத்தகத்தை மறுபடியும் திருப்பி படிக்கும்பொழுது புதுசா படிக்கிற மாதிரியே இருக்கும். அத சரிபார்க்கும் போது ஏன்னா ஒரு தடவைக்கு இரண்டு தடவை மூன்று தடவை படிப்பேன். அதை படிக்கும்போது நமக்கே ஒரு புதுசா நிறைய விஷயங்கள் தோன்றும். அந்த நேரத்துல எழுதிருவோம். அது சரி பார்க்கும்போது அது நிறைய விஷயங்களை உணர முடியுது.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

ஞானம்.

  யாராவது ஒருத்தரை கூப்பிடுங்களேன் பார்ப்போம்.

அஸ்ட்ராலஜர் மூர்த்தி சொன்னார்ல,  சத்தியநாராயணன் ஒருத்தரு இருக்காரு. அவர் வந்து ஒரு 40 ஆண்டு காலம் வந்து ஜோதிடத்தில் பல்வேறு விதமான பலவகையான ஜோதிடங்களை படித்திருக்கிறார். ஜோதிடம் படித்து அவர் பிராக்டிசம் பண்ணிக்கிட்டு இருக்கார். அவர் வந்து இவரோட இந்த அட்சய லக்ன பத்ததிய படிச்சு கேள்விப்பட்டு வாங்கி படிச்சு அதுக்கு அவருடைய ஆர்வம் ஆருடம் எல்லாம் சொல்லி அது மிக எளியதாக இருக்கிறது அப்படின்னு சொன்ன உடனே இவருடையத மொத்தமா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அவர் இப்ப வந்திருக்காரு. அவர இப்போ பேட்டி எடுப்போம்கொடுக்கணும்னு சொல்லி ஒரு பொதுவான மக்களுக்கு படிச்சாங்கன்னா எவ்வளவு பயன்படும் அப்படிங்கறத நான் சொல்லிக் கொடுத்து இருக்கேன்.

 வணக்கம்.

Dr சத்தியநாராயணன் அவர்கள்,  ALP ஜோதிடர்   :

வணக்கம் சார்.

திரு. ராஜேஷ் அவர்கள் :

 

  எப்படி சார்? நீங்க என்ன, என்ன ஜோதிடம் அதாவது திருக்கணிதமா, வாக்கியமா இல்ல வந்து கே பி சிஸ்டமா?

Dr .  சத்தியநாராயணன் அவர்கள்  :

    திருக்கணிதம் வந்து பாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம் சார். Main னா வந்து பாரம்பரியம் ஸ்டார்ட் பண்ணும் போது பாரம்பரிய ஜோதிடத்துல வந்து பலன் பாத்துட்டு இருந்தேன். அதுக்கப்புறம் வந்து பிருகுநந்த நாடி,  சப்தரிஷி நாடி.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

 அது என்ன பிருகு நந்த நாடி?

 Dr . சத்தியநாராயணன் அவர்கள்  :

    பிருகு முனிவரால ஏற்படுத்தப்பட்ட நந்தி நாடி முறை.

 திரு. ராஜேஷ்  அவர்கள்:

   அது என்ன நாடி

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

    நாடி ஜோதிடம் மாதிரி இருக்காது. ஆக்சுவலா,  கிரகங்கள் உடைய நட்சத்திர பாதங்களை வைத்து கணக்கிடுவது,  கிரகங்களுடைய நகர்வை வைத்து கணக்கிடுவது, கிரகங்கள் உடைய நகர்வை வச்சு தெரியும். இரண்டு கிரகங்களுடைய சேர்க்கையை வைத்து கணக்கிடுவது, இந்த மாதிரி ஒரு முறை தான். அதாவது பாவம், பாவாதிபதியும், கிரக காரகம் சொல்வாங்க. இந்த கிரக காரகத்த இணைத்து பலன் சொல்வது, கிரகத்தை இணைத்து பலன் சொல்வது தான் பிருகு நந்தி நாடி முறை.

   சப்தரிஷி நாடியும் பாவத்தை வைத்து பலன் சொல்வது சப்தரிஷி நாடினு சொல்லுவாங்க.

    கே பி அஸ்ட்ராலஜி பாவமும் பாவமுனை தொடர்பு அப்படின்னு சொல்லுவாங்க. அதை வைத்து வந்து பலன் சொல்றது கே பி அஸ்ட்ராலஜி சம்பந்தப்பட்ட விஷயம். இந்த மாதிரி டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன் ஆக்சுவலா. எல்லாமே டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது சாருடைய யூடியூப் ஒன்னு பார்த்தேன். யூடியூப்ல பார்த்துட்டு இந்த முறையை வந்து லக்னம் நகர்கிறதுங்கிற  புதிய முறை நல்லா இருக்கே அப்படின்னு சொல்லிட்டு அவர் ஆய்வு பண்ண ஆரம்பிச்சேன். அப்போ அவருடைய அவர் சொல்கின்ற விஷயங்கள் எல்லாமே யூட்யூப்ல இருக்கு. அதனால அவருடைய முறைகள் எல்லாம் வச்சு ஆய்வு செஞ்சு பார்க்கும்போது நாம் அதுக்கு அப்புறம் என்னுடைய ஜாதகம்,  என்னுடைய கிளைண்ட்ஸ் ஓட ஜாதகங்கள், என்னுடைய ஜாதகங்கள் எல்லாமே வச்சு ஆய்வு செஞ்சு சில விஷயங்கள் வந்தது.

   ஓகேங்களா. அப்ப கரெக்டா வந்தது. எக்ஸாட்டா துல்லியம் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்கு வந்தது. அதுக்கு அப்புறம் ஒரு குரூபூர்ணிமா அன்னைக்கு வந்து சாருக்கு ஒரு மெசேஜ் போட்டேன். உங்களுடைய மானசீக சீடன் நான். ஆக்சுவலா நான் வந்து உங்களுடைய முறையை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்படின்னு மெசேஜ் போட்டேன்.

 திரு. ராஜேஷ் அவர்கள்

   உங்கள விட வயசுல அவரு இளையவரு?

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

  ஆமா. வயது இளையவரா  இருந்தாலும் குரு குரு தானே  சார்.

 திரு. ராஜேஷ்  அவர்கள் :

  புரியுது.

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

   அதுக்கப்புறம் வந்து நம்மளுடைய மெசேஜ் போட்ட உடனே அவர் வந்து என்ன பண்ணாரு, ரெஸ்பான்ஸ் பண்ணாரு, இம்மீடியட்டா கால் பண்ணிட்டாரு. அதுக்கு அப்புறம் என்னுடைய youtube,  பேஸ்புக் ஓட லிங்க், நீங்க யாரு என்ன விஷயம், எல்லாம் பேஸ்புக்லயே லிங்க் சொன்னேன். அவர் இணைவுல  நான் ஏற்கனவே இருக்கேன். பேஸ்புக்ல லிங்க் இருக்கேன். அதுல இருந்து என்னுடைய பயணம் தொடர்ந்தது. நிறைய டிஸ்கஸ் பண்ணி கிளாரிஃபிகேஷன்ல எடுத்து அவர் கிட்ட இருந்து அதுக்கு அப்புறம் வந்து நிறைய ஜாதகங்கள் பார்த்து ஆய்வு பண்ணி அது எல்லாமே வந்து ஆன்லைன்ல அவர்களுக்கு சொல்லி அதெல்லாம் பதிவுகள் எல்லாம் இருக்கு. யூடியூப்ல இருக்கு. அந்த மாதிரி வந்து டீடைல்டா வந்து இந்த பார்க்க ஆரம்பிச்சேன். அதுல இருந்து இந்த துல்லியம் என்கிற ஒரு விஷயம் வந்து எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

    ஏன்னா அஸ்ட்ராலஜி அப்படின்னு சொல்லும்போது காலக்கணிதம் என்று சொல்லுவாங்க. அந்த காலத்தை வந்து அளக்கணும். அப்பதான் அது காலக்கணிதம்.

   இந்த டைமிங்ல இது நடக்கணும். இப்போ திருமண காலம் குருப்பெயர்ச்சி வச்சு நம்ம சொல்லுவோம். பாரம்பரியத்தில் குருப்பெயர்ச்சி வச்சு திருமண காலம். இந்த டைம்ல நடக்கும்னு, நம்ம சொல்லுவோம்.

   ஆனா எக்ஸாக்ட்டா இந்த வருஷம் தான் நடக்கும்னு சொல்ற முறை இதுதான் இந்த அட்சய லக்ன பத்ததி முறை தான். 

 ஓகேங்களா.

    இந்த வருஷம் நடக்கும் அப்படின்னு சொல்லுவோம். இந்த மாசம் நடக்கும். இந்த நாள் நடக்கும்னு சொல்லி நிறைய பேருக்கு நடந்திருக்கு அப்படிங்கற ஒரு விஷயம் தான் இங்க பதிவு பண்றேன்.

 திரு. ராஜேஷ்  அவர்கள் :

   இந்த டைம். அதுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.

 Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

   அந்த விஷயத்தை நாம ஃபாலோ பண்ணி வரும்போது இந்த மாதிரி நிறைய அவர் கூட நிறைய பிராக்டிஸ் எல்லாம் நல்லா இருந்து அவர் கூட வந்து பயணிக்க ஆரம்பிச்சோம். அவர் எப்போ வருவாரோ,  சென்னைக்கு அந்த டைம்ல வந்து அவர் கூட பயணிக்க  ஆரம்பிச்சோம்.

   அப்போ திடீர்னு ஒரு இன்ஸிடெண்ட், ஒரு நாள் வந்துச்சு. அவங்க என்ன பண்ணாங்க. வீடு ஒன்னு வாங்குறாங்க. ஆக்சுவலா. அந்த வீட்டுக்கு வந்து EB ட்ரான்ஸபெர் பண்றதுக்காக,  அவங்க மனைவி வந்து என்ன பண்ணாங்க, மனைவி வந்து நீங்க போயிட்டு வாங்க,  கிளையன்ட் நிறைய பேர் வருகிறார்கள் அப்படி என்று சார் சொல்லி இருந்தாங்க.  நான் வந்து சாரோட இருக்கேன். அவங்க வந்து அவங்க மனைவி என்ன பண்ணாங்க, டிரைவரை கூட்டிட்டு போயி EB ஆபீஸ் வரைக்கும் போயிட்டு Name ட்ரான்ஸ்ஃபர், ப்ரொசீஜர் எல்லாம் கேட்டுட்டு வராங்க.

    வந்து இங்க திரும்பி வீட்டுக்கு வந்து பார்க்கும்போதுதான் ரொம்ப நேரம் கழிச்சு பாக்குறாங்க. அவங்களுடைய கழுத்துல இருந்த நகையை காணோம்.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

 என்னையா இது?

Dr சத்தியநாராயணன் அவர்கள்  :

   அப்ப வந்து உடனே சார் கிட்ட வந்து பிரசன்னம் கேக்குறாங்க. அந்த பிரசன்னம் கேட்கும்போது சார் வந்து சொல்றாரு, அந்த நகை வந்து வாசல்ல தான் இருக்கு. அந்த EB ஆபீஸ் வாசல்ல தான் இருக்கு. நீங்க போய், யாரும் எடுக்கல. நீங்க போனீங்கன்னா எடுத்துட்டு வரலாம் அப்படின்னு சொல்றாரு.

    இந்த சூட்சுமத்தை சொன்ன உடனே அவங்க டிரைவரோட போறாங்க. அதே மாதிரி எல்லாமே கவுண்டர்ல நிறைய கியூ இருக்கு. ஆனா வாசல்லயே வந்து அந்த மண்ணு கீழ வந்து அந்த நகை இருக்கு. மேல எல்லாம் மண்ணா இருக்கு. மூடினமாதிரி சிச்சுவேஷன் இருக்கு. அந்த நகையை வந்து எடுத்துட்டு வர்றாங்க.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

    என்னங்க இது? இது யூரிக் கில்லர் மாதிரில்ல இருக்கு. இந்த இடத்துக்கு போனா இது கிடைக்கும்னு யூரிகில்லர் சொல்வாரு. அந்த மாதிரில்ல இருக்கு.

 Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

    ஆமா சார். இது வந்து ஒரு கியூரியாசிட்டி. எல்லாருக்குமே ஒரு இது இருக்கும் இந்த பிரசன்னம் எப்படி பார்த்தீங்க அப்படின்னு ஒரு விஷயம் வந்து சார் கிட்ட கேட்டேன். அப்போ வந்து எல்லாருமே ஓப்பனாக  இந்த மாதிரி தான் டிஸ்கஷன் போகும்.

    இந்த மாதிரி பார்க்கும்போது என்ன ஆச்சு அப்படின்னு பாத்தீங்கன்னா, காலபுருஷ லக்னத்திற்கு மேஷம்.

 இல்லைங்களா.

     2- 5 - 8- 11 தொலைந்து போன விஷயங்கள். அதாவது நிகழ்ந்து போன விஷயங்கள். தொலைந்து போன விஷயங்கள் அப்படின்னு சொல்வதுண்டு. அதுல வந்து விருச்சிக லக்னத்தில் தொலைந்து போச்சு அந்த நகை. 2 - 5  க்குரியவர். யாருன்னு பார்த்தோம்னா குரு. விருச்சிக ராசியில் இருந்து பார்க்கும்போது 2 - 5 குரு ஓகேங்களா. அந்த 2 - 5 இடத்திற்குரிய குரு பிளஸ் அந்த பத்தாமிடம் சொல்லக்கூடிய சூரியனின் வீட்டில். சூரியனுடைய வீடு வந்து ஆபீஸ். குரு வந்து நகை.

 ஓகேங்களா.

     அந்த வாசல்ல இருக்கு. ரொம்ப சிம்பிளான ஒரு விஷயத்தை ALP வச்சு, அந்த இடத்துல அந்த டைம்ல வந்து ALP வந்து விருச்சிகத்தில் போயிட்டு இருக்கு. அந்த ALP ய வெச்சு அவரு வந்து ரொம்ப துல்லியமா சொன்னதால அப்பதான் வந்து இன்னும் வந்து நம்மளால வந்து accuracy பார்க்க முடியும். 

 திரு . ராஜேஷ் அவர்கள் :

    இது நியூ மெத்தடு. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டது இல்லை.

 Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

   ஆமாம். இது அந்த மாதிரி accuracy இருக்கும்போது ஏன் வந்து இன்னும் வந்து நிறைய இத வந்து நிறைய பேர் வந்து சொல்லணும்.

  இஷ்டப்பட்டவங்களும் வாசிக்கலாம். ஸ்டுடென்ட் வாசிக்கலாம்.

    நானும் நிறைய பேருக்கு வந்து பதிவு பண்ணி இருக்கேன். நிறைய பேர் வந்து படிச்சிருக்காங்க. இந்த மாதிரி தான் வந்து அனுபவம் என்னுடையது.

    ஏன்னா இந்த ALP ஜோதிடத்திலேயே வந்து

  2- 5 - 8 -11 அப்படிங்கறது செல்லும்போது சுய கர்மா என்று சொல்லுவாங்க. கடந்த காலங்கள் அப்படின்னு சொல்றது உண்டு. கடந்த காலம் சுய கர்மா அப்படின்னு சொல்லுவாங்க. நான் வந்து பூர்வ புண்ணியம் அப்படிங்கறது பூர்வ புண்ணியத்தை பேஸ் பண்ணி தான் இந்த ஜென்மத்துல நான் பிறவி எடுத்து இருக்கேன். என்னுடைய சாப்பாடு, என்னுடைய வருமானம், என்னுடைய பூர்வ புண்ணியம், எங்க தாத்தா, டிஎன்ஏ, 8ம் இடம் வந்து மறைவிடம். ஓகேங்களா. மறைவிடம், 11ஆம் இடம் வந்து என்னுடைய லாபம்,  இதெல்லாம் என்னுடைய கர்மாவில் இருந்து தான் வெளிப்பட்டது அப்படிங்கிற முக்கியமான விஷயம் வந்து 

   கடந்த கால கர்மாவை வைத்து அவர் வந்து அந்த லக்ன பிரெடிக்ஷன சொன்னாரு. 

    ஏன்னா எட்டாம் இடங்குறது வந்து தொலைந்து போகுதல் என்று தெரியும். எல்லாருக்குமே அப்போ 2 - 5 இடத்திற்குரியவன் குரு, பத்தாமிடம்னு சொல்லப்படுகிற சூரியன், குரு வந்து பார்வையில் இருந்தது. பத்தாமிடம் பார்க்கும்போது அது வந்து ஆட்டோமேட்டிக்கா வந்து சூரியன் அடைய வீடு, சூரியன் என்பது வந்து கவர்மெண்ட் ஆபீஸ். கவர்மென்ட் ஆபீஸ் என்ட்ரன்ஸ். சிம்ம வீட்டிற்கு Entrance ன்னு பேர் இருக்கு. அப்போ அந்த இதுல தான் இருக்கு. யாரும் எடுக்கல அப்படின்னு சிம்பிளான ஒரு ரூல பேஸ் பண்ணி அவர் சொன்ன உடனே ரொம்ப ஆச்சரியமாக இருந்துச்சு. ஆக்சுவலா.

    இப்ப எவ்வளவு துல்லியமாக ஒரு விஷயத்தை வந்து இப்போ வந்த அந்த மாதிரியாகத்தான்  பேஸ் பண்ணி தான் நம்ம பிரடிக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஆக்சுவலா.

ஒவ்வொரு லக்னப் புள்ளிக்கும் ஒரு வால்யூ இருக்கு.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

     அது என்ன புள்ளி? புள்ளினா என்ன?

Drசத்தியநாராயணன் அவர்கள்  :

    லக்ன நட்சத்திர புள்ளிகள் அப்படின்னு சொல்வது அஸ்வினி நட்சத்திரம் ஒன்னாம் பாதம் என்பது ஒரு புள்ளி. அஸ்வினி நட்சத்திரம் 2 ஆம் பாதம்கிறது ஒரு புள்ளி. இப்ப 108 பாதங்கள் இருக்குது. ஆமாமா 108 பாதங்கள் ஒரு வேல்யூ இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ரொம்ப கத்துக்கிட்டேன் அப்படின்னு நம்ம சொல்லலாம்.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

    அப்ப இந்த 27 நட்சத்திரத்தில் 108 பாதங்களை 108 புள்ளிகள்னு சொல்றீங்களா. அப்படிச்  சொல்லுங்க. புள்ளி புள்ளின்னு  ஏதோ ஒரு புதுசா இருக்கே.

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

   அந்த 108 பாதத்துக்கும் ஒரு வேல்யு இருக்கு. அதையும் வைத்து நம்ம கணக்கீடு. இது எல்லாமே பாரம்பரியத்தில் இருக்கிறது தான். இந்த பாரம்பரியத்தில் இருக்கிற விஷயத்தை வந்து இந்த அட்சய லக்கன பத்ததியில் ALP நகர்த்தி அவர் பலன் சொல்லுறாரு.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

 சரி சரி.

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

     எனக்கு வந்து சின்ன வயசுல எனக்கு சாக்லேட் பிடிக்கும் ஐந்து வயசுல. ஆனா இப்ப வந்து என்ன கார் வாங்கலாம், என்ன கார் மாத்தலாம்,  அப்படிங்கிற எண்ணங்கள் தான் எனக்கு தோன்றும். அதனால ஜென்ம லக்னம் அப்படின்னு சொல்லப்படுகின்ற விஷயம் வந்து பாத்தீங்கன்னா பழைய கால நினைவுகள். பிறந்த இடத்தில். நான் வேறு ஒரு பகுதியில பிறந்தேன். அந்த இடத்தில் இருக்கும் பொழுது ஜென்ம லக்னம் வேலை செஞ்சு இருக்கும். இப்போ வந்து  ALP என்ன போகுதோ, இப்ப சென்னை வந்து உங்க முன்னாடி உட்கார்ந்து இருக்கேன். அப்போ இப்ப வந்து ALP லக்னம் தான் வேலை செய்யும் அப்படிங்கறது முக்கியமான விஷயம். அப்ப என்னுடைய நகர்வை வைத்து,  லக்னத்தை கணக்கிடும் நகர்வை வைத்து.

    இப்போ நிறைய பேர் சென்னையில் பிறந்து இருப்பாங்க. அவங்க இப்ப யூகே ல்இருப்பாங்க. யுஎஸ் ல இருப்பாங்க. அப்ப பிறந்த லக்னம் மட்டுமே எப்படி வேலை செய்யும்.

 ஓகேங்களா?

    அதுதான் வந்து முக்கியமான ஒரு விஷயம் இங்க இருந்து பாரிஸ் போறேன், அப்படின்னா ஒவ்வொரு ஸ்டேஜ் நான் கடந்து தான் போகணும். ஒவ்வொரு மேப்ல இருக்குற கூகுள் மேப்பில் இருக்கிற ஸ்டேஜ் வந்து நான் கடந்து போகணும் அப்படிங்கறது முக்கியமான விஷயம். இப்போ இங்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அப்படின்னா மயிலாப்பூரில் நீங்க தேடனும். ஓகேங்களா நான் வந்து வேலூரில் போய் தேடுனா எப்படி கிடைக்கும், முடியாது.

    அதே மாதிரி தான் இப்போ நடக்கக்கூடிய   நிகழ்வுகள் இப்போ வீடு வாங்கலாமா, திருமணம் நடக்குமா அப்படின்னு இந்த லக்னத்தை வைத்து நீங்க கணக்கெடுத்தால் கரெக்டாக இருக்கும் அப்படிங்கிறது.

 திரு . ராஜேஷ்  அவர்கள் :

    இதுவரைக்கும் எத்தனை பேர் பரீட்சித்து பார்த்து இருப்பீங்க.

 Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

  கணக்கே இல்ல சார். கிட்டத்தட்ட ஒரு 3000 - 4000 ஜாதகங்கள் பார்த்திருப்பேன்.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

     எல்லாமே கரெக்டா இருக்கு.

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

    எல்லாமே கரெக்டா அவ்வளவு ஒரு சின்ன விஷயம் கூட ஒரு சின்ன மிஸ்டேக் கூட இருக்காது சார். ஒரு சின்ன மிஸ்டேக் ஏதாவது இருந்தால் கூட நம்ம பார்வைக்கு அப்பாற்பட்டது அப்படியாகத்தான் இருக்கும். நம்ம கரெக்டா பார்த்தோம்னா அது விடை கிடைத்துவிடும்.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

 எவ்வளவு நேரம்  எடுக்கும்?

 Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

    ஒரு நிமிஷம் சார். அவ்வளவுதான். ஓகேங்களா. லக்ன புள்ளி எங்க இருக்கு,  நாலாம் பாவகம் வீடுன்னா,  நாலாம் பாவகத்தை பார்க்க போறோம். இந்த மாதிரி பத்தாம் பாவகம்னா தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,  ஜாப் சம்பந்தப்பட்ட விஷயங்களை பத்தாம் பாவத்தில் பார்க்க போறோம்,  அந்த இடத்தை வைத்து கணக்கு பண்ணாலே நிறைய விஷயங்கள் வந்திரும்.

    லக்ன புள்ளியே வந்து அதை எடுத்து காமிச்சிரும். லக்ன நட்சத்திர புள்ளி, அத வந்து எடுத்து காமிச்சுரும்.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

    லக்ன நட்சத்திர புள்ளி. லக்னம் வந்து எனக்கு சிம்ம லக்னம் இருக்கேன். மகத்தில் உட்கார்ந்து இருக்கேன்.

    அது என்னது மகத்துல வந்து ஒன்னாவது பாதமா இரண்டாவது பாதமா.

Drசத்தியநாராயணன் அவர்கள்  :

     அது தெரியல. எனக்கு ஞாபகம் இல்லை. இப்ப வந்து ஒன்னாவது பாதம்னு இருந்துச்சுன்னா அது வந்து பாத்தீங்கன்னா நம்மளுடைய அப்பா சம்பந்தப்பட்ட விஷயங்களை சொல்லும். மகம் 2ம் பாதம் என்றால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சொல்லும். மூன்றாம் பாதம்னா மகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் டி 9 நவாம்சம் வந்து பாத்தீங்கன்னா பதினோராம் பாவகத்தில் விழுகும். அப்ப என்னுடைய மகிழ்ச்சியை சொல்லும். ஓகேங்களா. என்னுடைய லாபத்தை சொல்லும். 12 ஆம் பாவத்தில் மகம் நட்சத்திரம் நாலாம் பாதம் அப்படின்னு செல்லும்போது என்னுடைய விரயத்தை சொல்லும். இப்படி வந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு வேல்யூ இருக்கு. இதை வைத்து நம்ம கணக்கிட்டோம்னா நிறைய விஷயங்கள் பார்க்க முடியும்.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

    இப்போ ஸ்டூடண்ட்ஸ் வந்து 15 நாளிலேயே படித்து வர முடியும்.

    தாராளமாக இரண்டு மாசத்துல படிச்சிரலாம்?

Drசத்தியநாராயணன் அவர்கள்  :

    15 நாளிலேயே படிச்சிடலாம்.

திரு . ராஜேஷ் அவர்கள் :

    அடேங்கப்பா பெரிய விஷயமே.

Dr  .  சத்தியநாராயணன் அவர்கள்  :

     15 டேஸ்ல ஒருத்தரு வந்து பிரடிக்ஷன் சொல்ல முடியும் அப்படின்னா கொஞ்ச நாள் அப்படியே பிராக்டீஸ், டிரைன்அப் ஆயிட்டே இருந்தாங்க அப்படின்னா ஒரு மாசத்துக்கு இரண்டுமாசத்துக்கு காலத்திலேயே பெரிய லெவல்ல வந்து சொல்ல முடியும் அப்படிங்கிறது முக்கியமான விஷயம். எல்லா ஆச்சரியப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நிறைய இருக்கு.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

     நான் கூட ஸ்டூடண்டா சேர்ந்துறதா இருக்கிறேன். இந்த புக்கை கொடுத்தீங்க,  என்னால பாக்கவே முடியல. காமர்ஸ் படிக்கும் பொழுது காலேஜ்ல படிச்சது, இது எப்படி போட்ட உடனே பழைய ஞாபகம் எல்லாம் வந்துருச்சு.

 Drசத்தியநாராயணன் அவர்கள்  :

   புக் வந்து எல்லாருமே வந்து புக்கை வந்து பார்க்கும்போது கொஞ்சம் புரியாத மாதிரி தான் இருக்கும். ஆக்சுவலா. நீங்க வந்து கிளாசுக்கு வந்தீங்க அப்படின்னா முக்கியமான ஒரு ரூல்ஸ் மட்டும் நம்ம பாய்ண்ட் அவுட்டு பண்ணோம்னா அது மட்டும் படிச்சாலே போதும். ஈசியா வந்து பலன் எடுக்க முடியும். என்ன எல்லாமே டிஜிட்டல் ways.

 திரு . ராஜேஷ் அவர்கள் :

 ஆமா அத பண்ணிட்டீங்க நீங்க.

Dr .  சத்தியநாராயணன் அவர்கள்  :

    இப்ப அதுதான் இப்ப முக்கியம். எல்லாமே டிஜிட்டல் வேஸ் மொபைல்ல எடுத்து நம்ம சாப்ட்வேர்ல போட்டு டேட் ஆப் பர்த், டைம் ஆப் பர்த், பிளேஸ் ஆப் பர்த் போட்டு கொடுத்தாலே என்ன லக்னம் போயிட்டு இருக்கு அப்படிங்கற விஷயம் கிளீனா தெரிஞ்சிடும். இந்த 12 பாவங்கள் மட்டும் கிடையாது. சார் 24 கட்டங்களாக பிரித்து இருக்காரு.

 திரு. ராஜேஷ் அவர்கள் :

அதுதான் எனக்கு புரியல.

Drசத்தியநாராயணன் அவர்கள்  :

        நான் செய்த தவறுகள்,  என்னால் செய்யப்பட்ட தவறுகள், எனக்கு வந்த வினைகள் அப்படின்னு சொல்லலாம். ஓகேங்களா.

  நான் வந்து ரோடுல போயிட்டு இருக்கேன். நான் வந்து பஸ்ல முன்னாடி போறது ஒரு விஷயம். பஸ் வந்து என்னை நோக்கி வருவது என்பது, நான் ஓரமா போனா கூட பஸ் என்ன நோக்கி வந்து ஆக்சிடென்ட் ஆவது ஒரு விஷயம்.

     இது இரண்டு விஷயத்தை வந்து 24 கட்டமாக பிரிச்சி இருக்காரு. அதுதான் ரொம்ப ஆச்சரியம்.

 திரு. ராஜேஷ்  அவர்கள் :

    12 கட்டத்தை 24 ஆக்கி இருக்கிறார். இவர் தான் முதல் முதல்ல உலகத்துல இதை செஞ்சிருக்காரு. அதை இந்தியா லெவல்லயும் செஞ்சுகிட்டு இருக்காரு.

   ரொம்ப சந்தோஷம், நன்றி சார். ரொம்ப ரொம்ப நன்றி நன்றி சார்.

 வீடியோ லிங்க்https://youtu.be/sU3cxI8-UZM?si=Zwc8PbI9eQCcTBcf

ALP ASTROLOGY OFFICE: 9786556156 /  9363035656

 


Comments